Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

22 May 2014

"தமிழ்நாடு தெலுங்கருக்கே....!!!!" -- திராவிடர்கள்

தமிழர்கள் எந்த வகையிலும் அதிகாரத்திற்கு வந்து விட கூடாது என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்குறது திராவிட இயக்கம்!!! தமிழ்த் தேசியத்தைப் புறக்கணிப்பீர்!,  என்று அவர்கள் மாநாட்டில் தீர்மானம் போட்டவர்கள், 



இன்று அவர்களின் தலைமை அலுவலகத்தில் இருந்த 
"தமிழ்நாடு தமிழருக்கே " என்ற வாசகத்தை அழித்துள்ளனர்!!! 




தமிழ்ச் சாதிகளை திட்டமிட்டு ஒடுக்கியும், அழித்தும் வரும் திராவிட இயக்கத்தினர்,தமிழர்களில் இருந்து உருவாகும் தலைவர்களை சாதியவாதிகளாக முத்திரை குத்திவிட்டு, தங்கள் வடுக இனத்தில் இருந்து உருவாக்கப்படும் குடிகாரனை கூட, பெரும் புரட்சியாளராக சித்தரிக்கின்றனர்!!!  எப்போது பார்த்தாலும் நம்மை பிளவுபடுத்தும் கருத்துக்களை மட்டுமே பெரிதுபடுத்தும் இந்த திருடர் கூட்டம், அதையெல்லாம் மீறி இன்று தமிழர்கள் நாம் ஒன்றாவது கண்டு,
மிரண்டு தான் போயுள்ளனர்!!! இவ்வளவு நாட்களாக மறைமுகமாக நம்ம வீழ்த்த துடித்த இவர்கள், இன்று நேரடியாகவே தமிழ்நாடு தமிழர்களுக்கு இல்லை என்று சொல்லத் துணீந்து விட்டனரோ??? எப்போதும் நாங்கள் மூடர்களாய் இருப்போம் என்று அப்பாவியாய் நம்பும் வடுக இனவெறி இயக்கத்தினரே, தைரியம் இருந்தால் " தமிழ்நாடு தெலுங்கர்களுக்கே "
என்று எழுதுங்கள் பார்ப்போம்!!!...



16 May 2014

ஆரிய மாயை

Akbar, "There was no so-called Aryan invasion." "The only logical explanation is that the Indus Valley civilisation and the Vedic-erroneously called Aryan-civilisation were one and the same.�
"In India, the study of history is unfortunately heavily politicised, with left- and right-wing ideologues making arguments based on their ideological positions rather than facts,� said Gangadhar.
இதை படிக்கையில். நமது வரலாறை பல ஊடகங்களில் இருந்து படித்த பொழுது , நாம் ஊகம் செய்ததை - இங்கு அறிஞர் உறுதிப்படுத்தி உள்ளார். என்ன? குஜராத் மற்றும் தமிழகம் -- இரண்டும் பழமை வாய்ந்த மக்களின் பிறப்பிடம் என்பதுதான்.
"The local ruler of that time, Vasuki, said that the ancient Naga celebration of Panchami must be followed since it had come down to his people (whom he called Vedic people) from an ancient 10,000-year-old tradition from Sangam and Dwarka. Since the stone itself is at least 3,000 years old, it makes the 'mother cultures' of Sangam and Dwarka more than 13,000 years old, that is, before the end of the last great ice age.
But where were Sangam and Dwarka? "We believe that Sangam refers to an ancient Tamil civilisation and Dwarka to an ancient Gujarati one,� said Akbar. "It would seem that the British writer, Graham Hancock, was right. He had postulated that there were many ancient civilisations spread across the world before the end of the last great ice age, when the sea levels were a lot lower. Two of those civilisations were based in India -one off the coast of modern Tamil Nadu and another off the coast of modern Gujarat. These civilisations were destroyed when the ice age ended and the sea levels rose. The survivors escaped to the north and established what we call the Vedic civilisation. So, according to Graham Hancock, the ancient Vedic civilisation descended from an even more ancient Tamil and Gujarati civilisation. The Naga Stone has just confirmed this theory.� Clearly, our history books need some rewriting!"
சிவனின் நாகம், நாக லோகம், நாகா பழங்குடியினரின் மந்திர-தந்திர-யோக முறைகள், நாக பூஜை, பாம்படம், நாக நெற்றி சுட்டி, மீன்(மகர) குழை, பழந்தமிழரின் நாக(தாழம்பூ) பின்னல் சடை-- இவற்றுக்கும் நம் வரலாற்றிர்க்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு.... என்பது எமது ஐயம்.
Egypthu மன்னர்களும் நாகம் சுற்றிய மகுடம் அணிவது உண்டு.
நமது பழங்கால ஐயர் (மதிப்பிற்குரிய கற்றுணர்ந்த தலை மக்கள் என்று அர்த்தம். சாதி அல்ல) தங்களது உத்திராட்ச மகுடத்தில் வெள்ளி பாம்பு சுற்றி அணிவது வழக்கம்.





நாக நெற்றிசுட்டியை முகலாயர்கள் தங்கள் brandaa-kavE மாற்றிவிட்டார்கள். போகட்டும். 1000 வருட கலப்பில் எல்லாரும் ஒன்றானதால், அது பெரிய விடயம் இல்லை.
கடந்த 1500 வருடங்களில் புதிதாக வந்தவர்கள் அனைவருமே முன்பு இருந்த பழக்க வழக்கங்கள் பலவற்றை பாகுபாடின்றி பின்பற்றினர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். பார்சி மக்கள் மீனையும், மஞ்சளையும் உபயோகப்படுத்தியதும் கூட அப்படி ஒன்ருதான். மஞ்சள் பொட்டு வைத்து மங்கல நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பது மூத்த குடி தமிழரிடம் இருந்து ஆரம்பித்த பழக்கம் என்று நமக்கு மட்டும்தான் தெரிகிறது. ஆனால் 1000 ஆண்டுகளுக்கு முன் வந்த பார்சிகள் இவ்வளவு நாகரீகமாக பயன்படுத்துவதாகத்தான் வெளி உலகம் அறிகிரது. நம் முன்னோர்களின் வழமையை வெளி உலகிற்க்கு வெளிச்சம் போட்டுகாட்ட தெரியாமல், இன்ரும் தமிழன் என்றால் -- பட்டிகாட்ட்டான் - பூச்சாண்டி என்றளவு நிலை குறைந்து போனது இந்த பாழும் அரசியல் மக்களால் வந்த வினை.
ஏனெனில் வந்தவர்கள் நாளடைவில் உயர்வு பெற்ற போது - அவைகளை தங்கள் சொத்துடைமையாக மாற்றிக் கொண்டு, பூர்வீக மக்களை அவற்றை செய்ய தடுக்க பல சூழ்ச்சிகளை மேற்கொண்டதே காரணம். கேரளா பூர்வ குடி பெண்கள் கடந்த 800 வருடங்களுக்கு மேலாக மேலாடை அணியத்தடை விதித்ததும் இப்படி ஒரு வந்தேறிதான்(ஆரியன் அல்ல). சிந்து சமவெளியில் (பாகிஸ்தான்) இருந்து இந்து குஜராத் மக்கள் விட்டுவிட்டு வந்த பத்திக் சாய அச்சு முறை, வண்ண மட்பாண்டங்கள் செய்யும் முறை இப்போது பாகிஸ்தானி மக்களால் தொடரப்பட்டு வருகிறது. வேரு இடம் குடிபெயரும்போது மக்கள் அந்த தொழில் செய்வதற்க்கு உரிய வசதி இல்லாதபோது அதை விட்டு வேறு செய்ததினாலும், பாவம் நம் மக்களுக்கு அப்போது copy right பற்றியெல்லாம் எண்ணும் குறுகிய புத்தி இல்லாததாலும்
அவர்கள் இவ்வுலகிற்க்கு கற்று கொடுத்தது ஏராளம்.
இப்போது வரலாறு தெரிந்து கொள்வது -- திரும்ப இன உணர்வுகளை மீட்டு தன்னம்பிக்கை பெற்ற மன உறுதி வாய்ந்த முதுகெலும்பு நிமிர்ந்த இளம் வரும் கால மக்களை பற்றி கனவுறுவதே எமது நோக்கம் அன்றி பிரிவினை நோக்குவது அல்ல. 1000 வருட கலப்பில் எல்லாரும் ஒன்றானதால், அது பெரிய விடயம் இல்லை. இன்ரு மிக தொன்மை வாய்ந்த குடியில் பிறந்த பல தமிழ் குடிகள் முஸ்லிமாகவும், கிருத்தவர்களாகவும் மாறி உள்ளனர். தமிழ் மக்களே தெலுங்கினமாகவும், மலையாளமாகவும் பிரிந்து, திரிந்து உள்ளது. மொழியையும் கலாச்சாரத்தயும், அனைவரின் ஒற்றுமையையும் திரும்ப மீள் கொணருவதற்கே என் ஆர்வம் அன்றி வேறு எதுவும் இல்லை. நன்றி. பிடித்தால் பகிரவும்.
1. தமிழ் கலாச்சார நாக பட்டம்
2,4. மொகல் வடிவமைத்த நாக பட்டம்
3. பழம் ஐயர் உருதிராட்ச்ச தலையணியில்வெள்ளி நாக பட்டம்
4. பார்சி உணவு அட்டை

12 May 2014

பண்டிட் என்பவர்கள் ஆரியர்கள் அல்ல

நவீன இந்தியா வின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்த ஜவர்லால் நேரு அவர்கள்,
காசிமீரத்தை சேர்ந்த பண்டிட் எனும் பிராமண பிரிவை சேர்ந்தவர்!!!
சமஸ்கிருதத்தில் பண்டிட் என்றால் ஆசிரியர் அல்லது நிபுணத்துவம் பெற்றவர் என்று பெயர்.சமஸ்கிருதம் ஐரோப்பாவில் இருந்து வந்த ஆரியர்களின் மொழி என்ற ஆங்கிலேயே பொய்யன் மாக்ஸ் முல்லரின் அடி வருடி பிராமணர்களும்!,
அவர்களை காட்டிலும் உலக மகா அறிஞரான ராமசாமி நாயக்கரின் அடி வருடிகளும்,
இன்று வரை கதைக்கின்றனர்!!!



ஆனால் உண்மையான அறிஞர்களும், அதிலும் குறிப்பாக பிராமண மொழி ஆய்வாளர்களிலேயே பலரும், சமஸ்கிருதம் என்பது, தமிழ் + பிராகிருதம் கலந்து செயற்கையாக செய்யப்பட்ட மொழி என்கின்றனர்!!!


இக் கருத்தை வலுப்படுத்தும் முதன்மையான சமஸ்கிருத சொல் இந்த பண்டிட் என்பது!!!

தமிழில் வேளாண்மையை குறிக்கும் சொல் " பாண்டியம் ". இதன் பொருட்டே வேளாண்மைக்கு பயன்பட்ட காளையை தமிழில் பாண்டி என்றும்,
அவ் வேளாண்மையை செய்தவனை பாண்டியன் என்றும் அழைத்தனர்!!!
வேளாண்மை சார்ந்த குடிகளிடமே மொழியும், அறிவியலும், கலைகளும் இன்ன பிறவும் செழித்து வளர்ந்ததால், அத்தகைய அறிவிற்கு பாண்டித்துவம் / பண்டிதம் என்றும்!, அதில் உயர்ந்த அறிவு பெற்றவர்கள் பண்டிதர் என்றும் அழைக்கப்பட்டனர்!!!

பிற்காலத்தில் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக சமஸ்கிருதம் என்ற மொழி (கி.பி. 1-2 நூற்றாண்டு),செயற்கையாக உருவாக்கப்பட்ட போதும், அம் மொழியில் உயர் அறிவு பெற்றவர்களை பண்டிதன் என்று தூய தமிழிலேயே அழைத்தனர். உண்மைகள் இவ்வாறு இருக்க,இந்த பண்டிட்கள் தான் தூய ஆரியர்கள் என்று, பிராமணர்களை விட அதிகம் கூப்பாடு போடுவது திராவிட வடுகர்களும். அவர்கள் சொல்வதை அப்படியே நம்பும் பகுத்தறிவற்ற போலி பகுத்தறிவாதிகளுமே. பிராமணர்களே இவ் உண்மையை ஏற்றுக்கொண்டாலும், இவர்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார். பகுத்தறிவு அவ்வளவு முற்றி போய்விட்டது நம் திராவிட தோழர்களுக்கு???



பண்டிட்கள் எல்லாம் ஆரியர்கள் என்றால்? தமிழர் என்ற இனத்தின் அடிப்படை வேர்களான  ண்டியர்கள், நாங்களும் ஆரியர்களே!!! எங்களையெல்லாம் ஆரியராக்கி விட்டு? பிறகு எந்த தமிழர்களுக்காக இங்கே புரட்சி நடத்துகிறீர் திராவிட தோழர்களே!!!
ஒரு வேலை எங்களையும் ஆரியர் என்று இம்மண்ணை விட்டு விரட்டியடித்து விட்டால்? உங்கள் வடுகர்களுக்கு தொல்லையே இல்லை என முடிவெடுத்து விட்டீரோ!!! நல்ல இராஜ தந்திரம் தான்,

ஆனாலும் எம்மை முற்றிலும் அழிக்க இன்னும் உங்களுக்கு அறிவு போத வில்லை தோழர்களே??? இவ்வளவு சீக்கிறமா மாட்டிக்கொள்வது??? உங்கள் காலம் முடிய போகிறது திராவிடர்களே!!! முடிந்தால் இன்னொரு பெரியாரை கண்டுபிடியுங்கள்,
எம்மை மீண்டும் ஆதிக்கம் செய்வதற்கல்ல! எம்மிடமிருந்து உம்மை காப்பாற்ற!!!....


 இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

10 May 2014

திராவிடம் என்பது பிராமணிய அடிமை கருத்தியல்

"பார்ப்பான் கிழக்கே போக சொன்னால் நீ மேற்க்கே போ. பார்ப்பான் செய் என்று சொன்னால் அதை செய்யாதே, செய்யாதே என்றால் அதை செய்" --- ராமசாமி நாயுடு (எ) பெரியாரின் நிலைப்பாடு.
### எல்லாம் சரி. அதை செஞ்சீங்களா திராவிடர்ஸ்....?
1. 'நாங்கள் ஆரியர்கள்' என்று பார்ப்பான் சொன்னால், நீங்க இல்லை என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்? ஆனால் அவனை விட நீங்க தான் 100 மடங்கு ஆரியன் ஆரியன் என்று அதிகமாக கூவுகிறீர்கள்...? --- இந்த ஒரே விசயத்திலேயே 99.99 சதவீதம் திராவிட நிலைப்பாடு கோவிந்தா.....கோ......விந்தா......!!!
2. நாங்க தான் நால்வர்ணத்தை உருவாக்கினோம் என்று பார்ப்பான் சொன்னால், நீங்க இல்லை என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட நீங்க தானே 100 மடங்கு 'நால்வர்ணத்தை உருவாக்கியவன் பார்ப்பான்' என்று சொல்கிறீர்கள்...?
3. இந்து மதத்தை பார்ப்பான் தான் உருவாக்கினான் என்று சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லாவ மறுத்திருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு இந்து மதம் ஆரிய மதம், பார்ப்பான் மதம் என்று தானே சொல்கிறீர்கள்...?
4. 'இந்திரன் ஆரிய கடவுள். சிவன்,முருகன் என அனைவருமே ஆரிய கடவுள்' என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் அப்படி அல்ல என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு நீங்கள் தான் மேற்ப்படி கடவுள்களை ஆரிய கடவுள்கள் என்று முழங்குகிறீர்கள்?
5. சாதி என்பதை ஆரிய பார்ப்பான் தான் உருவாக்கினான் என்று அவன் சொன்னால், நீங்கள் இல்லை என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு நீங்கள் தானே 'சாதியை விதைத்தவன் பார்ப்பான்' என்று சொல்லி கொண்டு திரிகிரீகள்?
6. கோவில்கள் பிராமனர்களுக்கானது என்று அவன் சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லவா மறுத்து இருக்க வேண்டும்? மாறாக, நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு, அதே கோவில்களை அவனுக்கு தாரை வார்த்து கொண்டு தானே இருக்கிறீர்கள்?
7. இன்னார் தாழ்த்தப்பட்டவன் என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லவா மறுத்து இருக்க வேண்டும்? மாறாக, நீங்கள் தானே அவனை விட மூச்சுக்கு முன்னூறு தடவை தாழ்த்தப்பட்ட என்று முழங்கி கொண்டு இருக்கிறீர்கள்?
8. 'பார்ப்பனர்கள் நாங்கள் ஒருங்கிணைத்தே இருக்கிறோம்' என்று அவன் சொன்னால், அப்படி அல்ல ஒரு சில குரூர பார்ப்பனர்களின் புத்தி தான் இது, தமிழ் பார்ப்பனர்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என்று அல்லவா கூறி இருக்க வேண்டும்? அதற்க்கான முயற்ச்சியில் இறங்கி இருக்க வேண்டும்? மாறாக, 100 மடங்கு அவனை விட அவனது ஒருங்கிணைப்பை 'பாம்பை கண்டால் விடு, பார்ப்பானை கண்டால் அடி' என்று வளர்த்தது நீங்கள் தானே திராவிடர்ஸ்....?
9. சமஸ்கிருதம் ஆரிய மொழி என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் அபப்டி அல்ல என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால் அவனை விட 100 மடங்கு நீங்கள் தானே சமஸ்கிருதம் ஆரிய மொழி என்று சொல்லி திரிகிறீர்கள்?
10. தமிழன் என்று யாரும் இல்லை பார்ப்பான் சொன்னால், நீங்கள் தமிழன் இருக்கிறான், இது தான் அவனுக்கான வரையறை என்று சொல்லி இருக்க வேண்டும்? அதை விட்டு விட்டு, 'யார் தமிழன், எங்கே இருக்கிறான் அவன்?' என்று பார்ப்பானை விட 100 மடங்கு தமிழன் என்கிற அடையாளத்தையே ஒழிக்க நினைப்பது நீங்கள் தானே...?
சுருக்கமாக,
பார்பானை விட திராவிடம் பேசுவோர் தான் மிக அதிகமாக பார்ப்பனியத்தை தாங்கு தாங்கு என்று தாங்கி இருக்கிறீகள் என்று தெளிவாகிறது. எமக்கு ஒரே ஒரு கேள்வி தான்.
மேற்ப்படி எந்த இடத்தில் நீங்கள் பிராமணியத்தை எதிர்த்து இருக்கிறீர்கள் திராவிடர்ஸ்....? அவனை விட, அவனின் கொ.ப.செ ஆக மட்டுமே செயல்பட்டு இருக்கிறீர்கள்...?
தமிழர்கள் ஒரு உண்மையை விளங்கி கொள்ள வேண்டும்.
"நாங்கள் பிராமணியத்தை எதிர்க்கிறோம் என்று திராவிடர்கள் கூறுவது பொய். உண்மையில் பிராமணியம் என்ற ஒன்று இல்லை என்றால், இவர்களுக்கு அரசியல் இல்லை என்பதே மெய். எனவே, பிராமணிய வீழ்ச்சியில் பிராமணர்களை விட, இவர்களுக்கே இழப்பு அதிகம். இவர்கள் ஒருக்காலும் மேற்ப்படி இத்யாதிகளை எதிர்த்து ஒரு சுண்டு விரலை கூட நீட்ட மாட்டார்கள் என்று அறிக."
இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

07 May 2014

சாதி மோதல்களுக்கு அடிப்படை காரணம் திராவிடமே....!!!

பொதுவாக தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்  , பிரச்னையை வரலாற்று ஆய்வு ரீதியான கண்ணோட்டத்தை விட, தர்க்க ரீதியான பார்வையிலேயே அணுகுகிறது. இந்த அடிப்படையில் தமிழகத்தில் ஆதிக்க சாதி, தாழ்த்தபப்ட்ட சாதி போன்ற விசயங்களில் யார் திட்டமிட்டு ஈடுபட்டு உள்ளார்கள் என்பதையும் நடுவம் தர்க்க ரீதியில் அணுகுகிறது. அதற்க்கு முன்பு சில விசயங்களை தெளிவு படுத்த விரும்புகிறது.

* தமிழகத்தில் பறையரை விட, அருந்ததியினரை விட, மோசமான தீண்டாமை கொடுமைக்கு ஆளாகி இருந்த சமூகம் 'நாடார்' சமூகம். இந்த நாடார் சமூகம் இன்று BC (அதாவது பிராமணிய பார்வையில் சாதி இந்து என்றும், திராவிட பார்வையில் ஆதிக்க சாதி) என்றும் கூறுகின்றனர்.
Ref: http://kumarikantam.blogspot.in/2011/01/blog-post_17.html

இனி விசயத்துக்கு போவோம்.
தமிழகத்தில் BC / ஆதிக்க சாதி அரசியல் அடிப்படை
1. பிராமணியம் ஒருவனை சூத்திரன் என்று வரையறுத்தால் அதை எந்த காலத்திலும் தலைகீழாக இருந்தாலும் மற்ற முடியாது. அப்படி என்றால் நாடார் சமூகம் மேற்ப்படி சூத்திர நிலையில் இருந்து, சாதி இந்துவாக மாற அனுமதித்தது பிராமணிமா, திராவிட அரசியலா....?
பதில்: திராவிட அரசியல்.

2. நாங்கள் SC பட்டியலில் இருக்க விரும்பவில்லை. எனவே BC பட்டியலுக்கு செல்ல விரும்புகிறோம் என்று நாடார் சமூகம் முன்வைத்த கோரிக்கையை நீதி கட்சி ஆமோதித்து ஆதரவு தெரிவித்தது. நீ தாழ்த்தப்பட்டவன், நீ 2000 வருட அடிமை என்று எந்த நீதி கட்சி தலைவரும், பெரியாரும் மேற்ப்படி நாடார் சமூக மக்களை எதிர்க்கவில்லை. ஆமோதித்தனர். எனவே, ஒருவர் SC அல்லது தாழ்த்தப்பட்ட சாதி/வகுப்பில் இருக்க dynamic ஆக மற்றம் செய்யும் அதிகாரம் படைத்தது பிராமணிமா ? திராவிடமா...?
பதில்: திராவிடம்

3. SC / ST பட்டியலை பொருத்தவரை மாநில அரசு தலையிட முடியாது. மாற்றம் செய்யவும் முடியாது. மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க முடியும். ஆனால், BC பட்டியலில் மாற்றம் செய்யா மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. உண்மையில் தமிழகத்தில் பிறபடுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் சாதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மக்கள். இருப்பினும், அவர்களை அந்த பட்டியலிலே இங்கு வைத்து இருப்பது பிராமணிமா ? திராவிடமா ?
பதில்: திராவிடம்

ஆக சாதி இந்துக்களை உருவாக்குவதும், நீக்குவதும் உள்ளாக அதிகாரம் படைத்தது இங்கே திராவிடமா ? பிராமணிமா ? பதில்: திராவிடம். சாதி சண்டை போட ஒரு தரப்பு இப்போ ரெடி.


தமிழகத்தில் SC / தாழ்த்தப்பட்டவர்கள் அரசியல் அடிப்படை
1. பெரியார் நடத்தியதாக சொல்லப்படும் தோல் சீலை போராட்டம், வைக்கம் போராட்டம் எல்லாம் நாடார் தலைமையிலான,அவர்களை காக்கும் போர்த்து நடத்திய போராட்டங்களாக இருக்க, பெரியார் தாழ்த்தப்பட்டவர்கள் என்று இன்று சொல்லப்படும் மக்களுக்கே அதை எல்லாம் செய்தார் என்று திசை திருப்புவது ஏன்?

2. நாடாருக்கு தான் பெரியார் தீண்டாமையை எதிர்த்து போராடினார் என்றால், இன்று வரை நாடாரை 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்று கூறியதே இல்லையே ஏன்?

3. 2000 வருட அடிமைகள் என்று பள்ளர் பறையரை திராவிடம் கூறுகிறது. பறையர்களை தெய்வமாக வணங்கும் கோவில்கள் உண்டு. பள்ளருக்கு இன்றுவரை கோவிலும்,கோவில் நிலங்களும், கோவில் உரிமைகளும் மேற்ப்படி 2000 வருட அடிமைகளாக அவர்கள் இருந்து இருந்தால், அவர்களை பிராமணியம் விட்டு வைத்து இருக்குமா...? ஆனால், அவற்றை எல்லாம் மறைத்து, இவர்களை 'தீண்டத்தகாதவர்கள், அதனால் தாழ்த்தப்பட்டவர்கள்' என்று திட்டமிட்டு பொய் பரப்புரை செய்வது பிராமணிமா திராவிடமா?
பதில்: திராவிடம்.

4. மேற்ப்படி கோவில் உரிமைகளை காக்கிறேன் பேர்வழி என்று பள்ளர் உரிமை பெற்று வந்த பல கோவில்களை அவர்களிடம் இருந்து பறித்து, 'இந்து சமய அறநிலையத்துறை' என்கிற பெயர்களில் எல்லாம், அதை பிராமணனுக்கு தாரை வார்ப்பது பிராமணிமா ? திராவிடமா?
பதில்: திராவிடம்

5. மேற்ப்படி பள்ளர்கள் 2000 வருட அடிமை என்று அவன் நம்பி இருந்த போது அதை ஆதரித்த திராவிடம், இன்று அப்படி இல்லை என்று அவர்கள் வெகுண்டு எழும் போது, வரிந்து கட்டி கொண்டு எதிர்ப்பது ஏன்? SC பட்டியலில் சேர்க்க வேண்டாம் என்று நாடார் சொன்ன போது அதை ஏற்ற திராவிடம், அதே மாதிரி SC பட்டியலில் நாங்கள் இருக்க விரும்பவில்லை என்று பள்ளர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அதை கண்டு கொள்ளாமலும், இன்னும் சொல்லப்போனால் அதை எதிர்ப்பதும் ஏன்? ஆக பள்ளர்கள்,பறையர்கள் என்றைக்குமே தாழ்த்தப்பட்டவர்களா சித்தரிப்பது பிராமணிமா, திராவிடமா...?
பதில்: திராவிடம்

சாதி சண்டை போட 'தாழ்த்தப்பட்ட படை' தயார் இப்போது....!!! மோதுங்கள்.....!!! ---- இது தான் இன்றுவரை தமிழகத்தில் நடக்கும் சாதிய மோதல்களின் பின்னணி. இன்னும் முடியவில்லை. மேற்கொண்டு வாசிக்கவும்.

1. சாதி சண்டைகள் ஏன் எப்போதும் தமிழ் சாதிகளுக்கு உள்ளே நடக்கிறது? அருந்ததியினர் மீது மிக கொடூரமாக இன்றும் தீண்டாமை கடைபிடிப்பது நாயுடு,ரெட்டி போன்ற மக்களே.....இவர்களை பற்றியோ, நாயுடு ஆதிக்க சாதி வெறி என்றோ திராவிடம், தமிழ் சாதி பிரச்சனைகளை பேசும் அளவுக்கு பேசாமல் மறைப்பது ஏன்?

2. அப்படி மறைக்க நினைக்கும் உங்கள் நோக்கம் என்ன? தமிழர்கள் சாதி வெறி பிடித்தவர்கள், தெலுங்கர்கள் அப்படி அல்ல என்று மக்கள் மனதில் பதிய வைப்பது தானே...?

3. இது நாள் வரை மேற்ப்படி திராவிடம் சாதி பாகுபாடு பார்க்காமல், அனைத்து சாதி வெறி உணர்வையும் கடித்து வந்துள்ளது, பள்ளர் பறையர் என எல்லாருக்கும் போராடியது என்று கூறி வந்ததன் நோக்கம் போலித்தனம் இல்லையா?

4. தமிழக வரலாற்றில் அதிகபட்ச தீண்டாமையை அனுபவித்த நாடார் சமூகம், BC பட்டியலில் இருப்பதாலும், கடின உழைப்பாலும், அரசியலாலும் முன்னு வந்த சூத்திரத்தை, மேற்ப்படி பள்ளர் பறையருக்கும் கூறி இருக்கலாமே திராவிடம்? அதை செய்யாமல், யாரை ஏமாற்ற இன்று வரை அவர்களை பட்டியல் சாதி லிஸ்ட்இல் வைத்து, அவர்களுக்கு நல்லது செய்கிறேன் பேர்வழி என்று ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள்? ஆக உங்கள் நோக்கம் சாதி சண்டை போட 'தாழ்த்தப்பட்ட பிரிவில்' உங்களுக்கு ஆள் தேவை என்பதை தாண்டி வேறென்ன இருக்க முடியும்?

5. நாடார் சமூகம் இன்று BC பட்டியலில் இருப்பதால், தங்களின் மீதான தீண்டாமை கறையை கிட்டத்தட்ட அறவே இல்லாமல் பார்த்து கொண்டுள்ளனர். ஆனால் 'உன்னை நீ முதலில் நீ தாழ்த்தப்பட்டவனாக உணர். அது தான் உன் விடுதலைக்கு உதவும்' என்று பள்ளர் பறையருக்கு திரும்ப திரும்ப போதிக்கும் திராவிடம், என்ன தான் செல்வமும், படிப்பும் படித்து இருந்தாலும் பறையர் சாதி ஆண் எல்லா காலத்திலும் தாழ்த்தப்பட்டவன் என்கிற நிலையை தக்க வைப்பது யார்? பிராமணிமா திராவிடமா? பதில்: திராவிடம்

6. BC பட்டியலில் இருக்கும் சாதிகள் திருமணம் செய்யும் போது வராத சிக்கல், SC பட்டியலில் இருக்கும் சாதிகளுண்டன் BC பட்டியலில் உள்ள சாதி செய்யும் போது வருவது ஏன் ? இதற்க்கு காரணம், இவன் சூத்திரன், இவன் வைசியன், இவன் சத்திரியன் என்று பிரித்து பார்க்கும் பிராமணிமா? இல்லை, இன்னார் BC யாக இருக்க வேண்டும், இன்னார் SC யாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யும் ஆளும் திராவிடம் செய்யும் பிரித்தாளும் அரசியலா....?

பதில்களை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்.

###
குறிப்பு: பெரியார் தொண்டர்கள் இது நாள் வரை பெரியார் சாதி எதிர்ப்பு பற்றியோ, ஆதிக்க சாதி எதிர்த்து குரல் கொடுத்ததை பற்றியோ, ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடினார் என்பது பற்றியோ பல பதிவுகளை கட்டுரைகளை எழுதி இருப்பார்கள். அதை எல்லாம் தேடி பிடித்து இங்கே கமெண்ட்டாக போடவும். மேற்ப்படி நடுவத்தின் பதிவை வாசித்து முடித்தவுடன், அதை நீங்கள் வாசிக்க தொடங்கினால், வேறொரு கோணத்தில் உங்களுக்கு பெரியாரும்,திராவிடமும் தெரிவார்கள்.

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

04 May 2014

இந்து மதம் --- ஒரு மார்க்சிய பார்வை

மனித பரிணாமம்: சுருக்கம்

     இயற்கையே பெருமளவில் மனிதனை அச்சமூட்டியது. குகைகளில் வாழ்ந்த  காலம் தொட்டு அந்த இயற்கையிடம் இருந்து தம்மை பாதுக்காக்க அவன் அந்த இயற்கையையே வழிபட தொடங்கினான். காட்டு மிராண்டியாக மனிதன் சுற்றிக் கொண்டு இருந்த காலத்தை அடுத்து, மனிதன் முல்லை நிலத்தில் கூட்டு வாழ்வும், அவர்களுக்குள் தலைவரும், இயற்க்கைய ஒட்டிய வழிபாடும் தெய்வங்களும் உருவாகி விட்டன. அந்த தெய்வங்களுக்கு பூசை செய்தல் என்பதை ஒட்டி பூசாரிகளும் நியமிக்கப்பட்டனர். இந்த பூசாரிகள் 'தலைவருக்கு' அடுத்தப்படியாக இருந்துள்ளனர். சில சமயங்களில் தலைவரையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வலிமையாகவும், ஆற்றல் மிக்கவர்களாகவும் இருந்து உள்ளனர். எல்லாவற்றுக்கும் காரணம் கடவுளின் மீது மனிதன் கொண்டு இருந்த அபரிமிதமான பக்தி தான். எனவே பூசாரிகளை கடவுளுக்கு அடுத்தபடியாக பார்க்க வைத்தது கடவுள் மீதான பயமும், மரியாதையுமே...!!! இப்படி தலைவர்,பூசாரி,மக்கள் என்ற பிரிவுகளே அரசாங்கம் என்று சொல்லப்படும் மக்கள் நிர்வாக கட்டமைப்புக்கு அடிப்படையானதாகும். மேற்ப்படி அரசு தோற்றம் மற்றும் கூட்டு வாழ்க்கை, முல்லை நிலத்தில் தோற்றம் பெற்று இருந்தாலும், முல்லை நில வாழ்வு என்பது நிலையற்ற வாழ்வு என்பதால், அங்கு குடும்பம் என்ற சமூக கட்டமைப்பு அடிப்படை தோன்றி இருக்கவில்லை. அதற்க்கான தேவையும் அங்கு இருந்திருக்க வில்லை.

மனிதன் என்று மருத நிலத்தில், ஆற்றம் கரையில் நிலையாக வாழத் தொடங்கினானோ, அன்றில் இருந்தே உற்பத்தி சமூகமாக மாறத்தொடங்குகிறான். இது என் நிலம் என்றும், அந்த நிலத்தை அதில் உருவாகும் உற்பத்தியை ஆண்டு அனுபவிக்க வாரிசுகள் வேண்டும் என்பதால், குடும்பம் என்ற சமூக கட்டமைப்பை உருவாக்குகிறான். இவள் மனைவி, இவளை யாரும் தீண்டக்கூடாது, இவளுக்கும் எனக்கும் பிறக்கும் மகவுகள் என் வாரிசுகள் என அந்த அமைப்பு உருவாகிறது. பல குடும்பங்கள் இணைந்து தெரு,ஊர்,சிறு ஊர், பேரூர், நகரம்,நாடு என்று வளர்க்கிறது. வேளாண் விலை பொருட்களும், வேளாண்மையும், அதில் முக்கியமாக நெல்லுமே அதுவரை இருந்து வந்த பண்டமாற்று பொருள்களான ஆடு,மாடுகளை விடுத்து, முக்கிய பண்டமாற்று பொருளாக மாறுகிறது. வேளாண்மையே உச்சபட்ச நாகரிக கண்டுபிடிப்பு என்பதை உலகறியும். இவ்வாறு இருவானா வேளாண்மையில், அந்த வேலால்ன்மைக்கு உதவும் பொருட்டு, அவர்களிடமே தொழில் சார்ந்த பிரிவுகள் உருவாகின்றன.

கலப்பைகள் செய்பவர், நெல் விதைப்பவர், பண்ணையை கவனிப்பவர், ஆறு ஏறி குளங்களை கவனிப்பவர், ஊர் தலைவர், கோவில் பூசாரி, நாவிதர், வண்ணார் என உருவாகிய அந்த பதினென் குடிகளும், அவர்களின் பிரிவுகளுமே நாம் மருத நில மகள் அல்லது மள்ளர் என்கிறோம். ஒரு சிறு ஊரில் வாழும் மனிதர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை பக்கத்து ஊருக்கு கூட அன்று செல்ல வேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. காரணம் ஒவ்வொரு ஊரும் நிர்வாக அமைப்பை பொருத்தவரை ஒரு நாடு போலவே செயல்பட்டது. மருத நிலக்கடவுள் இந்திரனாக இருந்ப்பினும், பல திணை மக்களையும் அரவணைக்கும் பொருட்டு, புதிய கடவுள்களாக சிவன்,திருமால்,பிள்ளையார்,இவர்களுக்குள் உள்ள குடும்ப உறவுகள் போன்றவை உருவாக்கப்படுகின்றன.

சாதி எப்படி உருவாகியது?
    மேற்ப்படி தொழில் செய்வோர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருந்தாலும் அவர்களுக்குள் (ஒரு ஊர் பூசாரிக்கு இன்னொரு ஊர் பூசாரியை தெரியாது) எந்த ஒருங்கிணைப்பும் இல்லை. இருப்பினும் பல ஊர்கள் சேர்ந்து ஒரு பேரூர் என்ற அடுத்த கட்ட நிர்வாக ஆட்சிமுறைகள் உருவாகும் போது, அதை நிர்வாகிப்பவர் மேற்ப்படி ஊர்களை நிர்வாகிக்க தொழில் சார் மக்களை ஒருங்கிணைக்க நினைத்தனர். அதன் மூலம் நிர்வாகம் ஒழுங்கான நடக்கும் என்றும், பொதுமனெ மக்கள் என்று இல்லாமல், இவ்வாறு தொழில் சார் வகைப்படுத்துதல் மூலம் அவர்களின் நிறைகுறைகளை தீர்த்து வைக்க முடியும் (உம்: வாரியம் அமைத்தல், சங்கம் அமைத்தல் போல) என்று செயல்ப்பட்டனர். இவ்வாறு உருவான தொழில் சார் பிரிவுகளே இன குழுக்கள் அல்லது சாதி என்பதாகும். எனவே சாதி என்பது தேசிய இனங்களுக்கு இடையே இயல்பாகவே உருவாகிய ஒரு இத்யாதி. இதை எந்த ஆரிய பார்ப்பானும் நம்மிடம் வந்து திணிக்கவில்லை. ஆரிய கதைகளை அவிழ்த்து விடும் திராவிட புளுகர்கள், ஏன் ஒரு ஆடு மாய்க்கும் ஆரிய கூட்டம் மக்களை ஒருங்கிணைக்க இப்படி மக்களை தொழில் சார் பிரிக்க வேண்டும் என்று ஒருக்காலும் கேட்டதில்லை. வேளாண்மை செய்பவர்களுக்கு இவ்வாறு தொழில் பிரிவுகள் உருவாக தேவை உண்டு. ஆடு மாடு மேய்க்கும் கூட்டத்துக்கு என்ன தேவை என்று எந்த திராவிட புளுகர்களும் இதுவரை சொன்னது இல்லை.

சமூக கட்டமைப்பில் பூசாரிகளின் பலம்
      பூசாரிகள் அல்லது பார்ப்பனர் என்போர் எல்லா தேசிய இனத்திலும் இறை பணிக்காக பணிக்கப்பட்டனர். ஆளும் வர்கத்துக்கு அடுத்த கட்டத்தில் இருப்பவர்கள் இவர்கள். இவர்களை எப்படி கையாள வேண்டும் என்பதில் தான் தலைவர்/அரசனின் புத்திசாலித் தனமே உண்டு. அரசு நிர்வாக கட்டமைப்பு என்பது ஒரு ஊர் என்கிற வகையில் (அதாவது பார்ப்பனர்களின் ஒருங்கிணைப்பு என்று ஏற்ப்படாத போதே) இருக்கும் போதே பூசாரிகளின் பலம் என்பது அபரிமிதமானது. 'சுடலை மாட சாமி வந்திருக்கான், இந்த தலைவனை கொன்னு பலி கொடுங்கடா' என்றால், அந்த தலைவன் காலி.....!!!

ராஜ ராஜன் பல நேரங்களில் பார்ப்பனர்களை அனைத்து இருக்கிறான். பல நேரங்களில் இராஜ தந்திரமாய் அவர்களை வீழ்த்தியும் இருக்கிறான். ஆகவே தனித்து இயங்கிய காலத்திலேயே பூசாரிகளின் பலம் பெரியது என்றால், இனக்குழுக்கள் ஒருங்கிணைந்த பின்பு (அதாவது பல ஊர் பூசாரிகளின் ஒருங்கிணைப்பு) என்ற ஒன்று உருவாகிய பின்பு அவர்களின் பலத்தை கேட்கவா வேண்டும்...?

இது ஏதோ தமிழ் சமூகத்தில் மட்டும் தான் அப்படி என்று என்ன வேண்டாம்...? உலகில் நாகரிகம் இருக்கும் அனைத்து இடங்களிலும் பூசாரிகள் நிலை இப்படி தான்.
* உதாரணம்: கிரேக்க நாகரிகத்தில் ராஜகுருக்களை அந்த நாட்டு மன்னர்கள் கொன்று இருக்கின்றனர். ஆனால், இன்று அந்த ஒட்டு மொத்த கிரேக்கத்துக்கும் தலைவர் 'போப்' என்னும் preist தானே..?

fuedal system என்பதில் பூசாரிகளின் பங்கு
மேற்ப்படி ஊர்கள் சேர்ந்து பேரூர் என்றும், அந்த பேரூர்கள் சேர்ந்து நாடு என்றும் உருவாகும் போது, எவ்வாறு நிர்வாகம் செய்ய சாதி என்ற ஒன்று உருவாகியதோ, அதோ போல பலர் பேரூர்,நாடுகளை நிர்வாகம் செய்ய உருவாகியதே நால்வர்ணம் (fuedal system ) என்பதாகும். மனித வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக வரலாற்று அறிஞர்களால் நோக்கப்படும் இந்த (feudal system ) என்பது, மருத நிலத்திலேயே தோன்றி ஏற்றம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்ப்படி பார்ப்பனர்களின் ஒருங்கிணைப்பு என்பது தற்போது வேறு ஒரு வடிவத்தை எட்டுகிறது. ஒட்டு மொத்த நாடு என்கிற அமைப்பில், பூசாரிகளின் பலம் இன்னும் அதிகமாகிறது.

எகிப்திய feudal system த்தில் பூசாரியின் நிலை.

மேற்ப்படி பதிவுகளில் இருந்து நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளலாம். நிர்வாக கட்டமைப்பு என்பது வளர, வளர பார்ப்பனர்களின் ஒருங்கிணைப்பும், பலமும் அதிகம் ஆகி கொண்டே செல்கிறது. மேலும் எந்த ஒரு ஆட்சியாக இருந்தாலும், யார் ஆட்சி செய்தாலும் பூசாரிகள் தங்களது நிலையை அண்டி பிழைத்தோ, அதிகாரம் செலுத்தியோ தக்க வைத்தே வந்துள்ளனர் என்பது உண்மை.இந்தியா மட்டும் அல்ல, உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாகரிகங்களிலும் இதுவே நிதர்சனம்.


சம்ஸ்கிருத மொழி ஏற்ப்படுத்திய தாக்கம்
     சமஸ்கிருதத்தின் தாய் மொழி என்பது தமிழ் என்பது அறிஞர் பெருமக்களால் நிறுவப்பட்ட ஒன்று. மிக சமீபத்தில் அதாவது கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே சமஸ்கிருதம் என்கிற மொழி ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்படுகிறது. இந்த மொழி உருவாக்கப்பட்டதர்க்கான காரணங்கள்.

> அரசனுக்கும், பார்ப்பனருக்கும் மட்டுமே அறிவு சார் விஷயங்கள் இருக்க வேண்டும், போதிக்கப்பட வேண்டும் என்கிற ஒரு நெருக்கடி.
> மேற்ப்படி மற்ற தொழில் செய்பவர்களுக்கு அறிவு சார் விஷயங்கள் (வானியல் சாஸ்த்திரம் உட்பட) தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவர்களின் தொழில் அவர்கள் கவனம் செலுத்துவதே போதுமானது என்ற முடிவு.
> வாரிசு அரசியல் போன்ற பல விசயங்களுக்கு இப்படி ஒரு மொழி பயன்பாடு என்பது மிகவும் பயன்படும் என்பதால் அனைத்து அரசர்களும்,மன்னர்களும் அதை ஏற்றுக் கொள்கின்றனர்.

என்ன தான் சமஸ்கிருத மொழியை தமிழன் உருவாக்கி இருந்தாலும், அவன் அதை ஊறுகாய் போல பயன்படுத்திநானே ஒழிய, தமிழே ஆட்சி மொழி என்ற நிலையில் அவன் தெளிவாகவே இருந்தான். என்ன தான் பல தமிழ் மன்னர்களின் பெயர்கள் சமஸ்கிருத மொழியில் இருப்பினும், நாயக்கரின் காலம் வரை தமிழே ஆட்சி மொழி என்பதை அறிக.

இவ்வாறு உருவான 'சமஸ்கிருத மொழி என்பது அறிவு மொழி,அது ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமே' என்கிற பரப்புரையை இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து ஆளும் வர்க்கமும் ஏற்றுக் கொள்கின்றனர். இருப்பினும், தமிழகத்தில் அதற்க்கு எதிர்ப்பு கிளம்புகிறது. காரணம், மற்ற தொழில் செய்பவர்கள் 'அறிவு ஜீவி'களாக ஆக முடியாது என்பதே.....!!!

தமிழ் மண்ணில் சைவமும்,வைணவமும்
     மேற்ப்படி 'இன்னாருக்கே அறிவு சார் மொழி' என்பதை தமிழ் சமூகத்தில் வாழ்ந்த, பின்னால் வந்த மக்கள் ஏற்க்கவில்லை. இதை எதித்து கலகம் பிறக்கிறது. புதிதாக சைவம்,வைணவ நெறிகள் உருவாகின்றன. இதுவே இன்றைய ஒடுக்கப்பட்ட சாதியாக சொல்லப்படும் பறையர் சமூகம், அன்று  அறிவு ஜீவியாக (சாக்கியர்,வள்ளுவர்) இருந்ததன் பின்னணி.

ஆனால், இதே போன்ற ஒரு நிலையை (அதாவது ஒடுக்கப்பட்ட ஒரு சாதி அறிவு ஜீவியாக வணங்கப்படுவது) , சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொண்ட மற்ற தேசிய இனங்களில் நீங்கள் பார்ப்பது கடினம். இந்த சமஸ்கிருத எதிர்ப்பு நிலை என்பதே இன்று வரை தமிழ் நாட்டுக்கும், ஏனைய மற்ற தேசிய இனங்களுக்கும் இடையே காழ்ப்புணர்வு இருந்து வர அடிப்படை காரணம்.

தமிழன் வீழ்ந்த கதை
    தமிழனை வீழ்த்தியது விஜயநகர பேரரசான நாயக்கர்களே. இது எப்படி என்பதை சுருக்கமாக பார்ப்போம். மேற்ப்படி விஜயநகர பேரரசு நாயக்கர்கள், முல்லை நிலத்தில் ஆடு மாடு மேய்த்து கொண்டு இருந்த அநாகரிக குடிகள். மேற்ப்படி தமிழ் மன்னர்கள், பார்ப்பனர்களை அவ்வப்போது அடக்கி ஆள்வதும், அவர்களை மதிக்காமல் நடப்பதும், அவர்களுக்கு கடுமையான எரிச்சலை ஏற்ப்படுத்தி உள்ளது இயல்பே. இதை சரியாக பயன்படுத்திய தெலுங்கு பார்ப்பனர்கள், மேற்ப்படி நாயக்கர்களை கூர் தீட்டி, தமிழ் மன்னர்களுடன் மோத விட்டு, தமிழனை வீழ்த்தி உள்ளனர். அவ்வாறு தமிழன் வீழ்த்தப்பட்டுடன் நாயக்கர் செய்த முதல் காரியமே 'ஆட்சி மொழியாக இருந்த தமிழை தூக்கி எறிந்து,சமஸ்கிருதத்தை உள்ளே கொண்டு வந்தது தான்'. கோவிலில் தமிழ் தூக்கி எறியப்பட்டது,சமஸ்கிருதம் உள் நுழைந்தது  நாயக்கர் காலத்திலேயே.....!!! அதுவரை இருந்து வந்த குடும்பு ஆட்சி முறையை ஒழித்து விட்டு, தமிழ் மண்ணில் தனது இராணுவத்தை நிறுத்தினர். அப்படி நிலையாக நிறுத்தப்பட்ட இராணுவ பிரிவுக்கு பாளையங்கள் என்று பெயர். தமிழ் நாட்டில் இருக்கும் பாளையம் (பாளையம் என்பது தெலுங்கு பெயர்) அனைத்தும், தமிழன் வீழ்ந்ததன் நினைவாக இன்றும் நிற்கும் எச்சமே....!!! தொழில் ரீதியாக இங்கே இருந்த தமிழ் பார்ப்பனர்களும், தானாகவோ அல்லது மிரட்டப்பட்டோ மேற்ப்படி தெலுங்கு பார்ப்பனர்களுடன் கரம் சேர்க்க வர்ப்புருத்தப்பட்டனர். பல தமிழ் அய்யர்களும் இன்று தமிழனுக்கு எதிராக இருக்க இதுவே அடிப்படை காரணம். இருப்பினும் சில தமிழ் பார்ப்பனர்கள், மேற்ப்படி தெலுங்கு பார்ப்பனர்களின் போக்கை ஏற்க்கவில்லை. அது நாள் வரை இருந்து வந்த 'அரசன், அந்தணன், வணிகன், வேளாளன்' என்கிற தமிழனின் நிர்வாக பிரிவானது, 'பிராமணன், சத்ரியன்,வைசியன்,சூத்திரன்' என்று நாயக்கர் காலத்தில் மாற்றம் கொள்கிறது. மண்ணின் மைந்தர்களும், மன்னரின் வாரிசுகளும் வீழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டனர்.கால ஓட்டத்தில் பல பேரரசுகள், தோன்றினாலும், வீழ்ந்தாலும் பிராமணர்கள் தங்களது மேலாண்மையை தக்கவைத்தே வந்துள்ளனர்.


இந்து மதம் என்ற மத நிறுவனம் துவக்கம்

"இப்போது ஹிந்து மதம் என்று ஒன்றைச் சொல்கிறோமே, இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ஹிந்து என்றால் அன்பு என்று அர்த்தம். ஹிம்சையை தூஷிப்பவன் ஹிந்தூ என்று சிலர் சொல்கிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும், ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது.
ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான். மேல்நாட்டுக்காரர்கள் ஸிந்து நதியாக கடந்தே நம் பாரத நாட்டுக்கு வரவேண்டியிருக்கிறதல்லவா. ஆனபடியால் ஸிந்துவை இந்து என்றும், அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும், அதன் மதத்தை இந்து என்றும் குறிப்பிட்டார்கள்."

முகலாயருக்கு பின்பு வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயரே முதன் முதலில் இந்தியா முழுவதையும் நிர்வாகம் செய்யும் பொருட்டு, அதை ஒரே குடையின் கீழ் கொண்டு வர விரும்பினர். ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பு, இந்து மதம் என்கிற ஒரு மதம் இருந்திருக்க வில்லை. என்ன தான் சிறிதும், பெரிதுமாக பல்வேறு அரசுகள் இந்தியா முழுக்க பிரிந்து இருப்பினும், அவை அனைத்திலும் பிராமணர்களின் கை ஓங்கி இருப்பதை உணர்ந்து இருந்தனர். எனவே அந்த பிராமணர்களுடன் கை கோர்த்து, எல்லா காலத்துக்கும் இந்தியாவை நிர்வாகம் செய்ய 'ஆங்கிலேயர்' உருவாக்கிய பிராமணர்களுக்கான ஒருங்கிணைப்பே 'இந்து' மதம் என்பதாகும்.

மாக்ஸ் முல்லர் என்ற தில்லு முல்லர்
     ஆங்கிலேயர் பிராமணருடன் கை குலுக்க அவர்கள் உருவாக்கியதே 'ஆரிய தியரி' ஆகும். மாக்ஸ் முல்லர் என்கிற தில்லு முல்லர் இதை செய்து முடித்தார். இதன் அடிப்படையில், அதுவரை இருந்து வந்த அனைத்து தேசிய இனங்களின் (குறிப்பாக, தமிழர்கள்) அடையாளமும் 'இந்து' மதத்தின் அடையாளமாக மாக்ஸ் முல்லர் சித்தரித்தார். (உம்: ஆரிய கடவுள், ஆரிய இனம், ஆரிய பண்பாடு etc ). இது இந்தியா முழுவதும் இருக்கும் பிராமணர்கள் ஒருங்கிணைய மட்டும் இன்றி, ஆங்கிலேயருக்கும் அது நலம் பயக்கும் நோக்கில் திட்டமிட்டே உருவாக்கப்பட்ட நிறுவனம் ஆகும். இது தான் இந்து மதம் உருவான கதை.

இன்றைய இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 'இந்து' என்பதற்கு கூறும் வரையறை 'எவன் கிருத்துவன் இல்லையோ, எவன் இசுலாமியன் இல்லையோ, எவன் பவுத்தன் இல்லையோ, எவன் சீக்கியன் இல்லையோ, அவன் எல்லாம் இந்து' என்பதாகும். இதில் இருந்து, 'இந்து' என்பவன் துல்லியமாக வரையறை செய்யமுடியாதவர்கள் என்பதை எளிதில் உணரலாம். மேலும், 'இந்து' என்பதற்கு, 'பிராமணிய ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டவன்' என்பதும் அரசியல் சட்டம் சொல்லும் விளக்கத்தில் ஒன்றாகும். ஏற்றுக் கொள்ளாதவர்களை இந்து மதம் சண்டாளர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் ஒதுக்கி வைப்பது அனைவரும் அறிந்ததே....!!!

மாக்ஸ் முல்லர் அவிழ்த்த ஆரிய கதைகளில் முக்கியமானவை இவை.
* ஆரியர்கள் கைபர்,போலன் கணவாய் வழியாக வந்தனர்.
* பிராமணர்களும் ஆங்கிலேயரும் ஆரியர்கள்.
* ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள்.
* ஆரியர்களே நால்வர்ணத்தை உருவாக்கினர்.
* ஆரியர்களே சாதியை கண்டு பிடித்தனர்.
* பிராமணர்களின் நிறமும், ஆங்கிலேயரின் நிறமும் ஒன்று.

இவற்றை கொஞ்சமும் ஆராய்ச்சி செய்யாமல், அப்படியே ஏற்றுக் கொண்டு நம்மிடம் கும்மி அடிப்பவர்கள் தான் 'திராவிட பகுத்தறிவு வாதிகள்'. பெரியார் உட்பட....!!!

கால்டுவெல் என்கிற பொய்யர்
  சரி. இந்தியா முழுவதும் இருந்த பிராமணர்களை ஒருங்கினைத்தாகி விட்டது. மீதி இருப்பவர்களை எப்படி ஒருங்கிணைப்பது? அப்படி ஒருங்கிணைத்தால் தானே, இவர் ஆதிக்க வர்க்கம், இவர் மீதி உள்ளவர்கள் என்று தெரியும். அதன் படி பிரித்தாண்டு, நிர்வாகமும் செய்ய முடியும். அதற்காக உருவாக்கப்பட்டது தான் கால்டுவெல் என்கிற ஆங்கிலேயர் உருவாக்கிய 'திராவிடம்' என்கிற கருத்தியல். ஆக, பிராமணர்கள் அனைவரும் ஆரியர்கள், மற்றவர்கள் திராவிடர்கள். வேலை முடிந்தது.

மக்களை எப்போதும் பிரித்தே வைத்து இருந்து, சாதியத்தை காத்து, தந்து சுயநலனை நிலை நாட்ட, பிராமணர்கள் இன்று வரை காத்து வரும் நிறுவனமே 'இந்து மதம்'. பிராமணர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒருங்கிணைந்தே இருப்பார்கள். எந்த தேசிய இனத்துடனும் கலக்காமல் இருப்பார்கள். எப்படி எல்லாம் மக்களை (தங்களை தவிர),கூறு போட முடியுமோ, அப்படி எல்லாம் கூறு போடுவார்கள். கூறு போட ஊக்குவிப்பார்கள். தேசிய இனங்களின் விடுதலையை ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள்.

அம்பேத்கார் முன்வைத்த பல விசயங்களை உதாசீனம் செய்த பிராமணியம், அவர் முன் மொழிந்த 'வகுப்புவாதம்' என்கிற விஷயத்தை ஏற்றது. இதன் மூலம் 'பிராமணர் அல்லாதோர்' என்பவர்களை SC / BC / ST என்று வகையாக பிரித்து, காலம் முழுவதும் அவர்களின் ஒருங்கிணைப்பை தடுக்க எதுவாக இருக்கும் என்பதே ஆகும்.

பிராமணியம்: இந்தியாவின் அடிப்படை நிர்வாக கருத்தியல் 
    "பிராமணர்களின் ஆதிக்கத்தை தக்க வைத்து, அதற்க்கு வலு சேர்க்கும் வகையில், நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவும் ,தேசிய இனங்களின் அடையாளத்தை அழித்து, மக்களை கூறும் போடும் அனைத்து செயல்களையும்,நிகழ்வுகளையும் ஒன்றாக குறிப்பதே 'பிராமணியம்' என்பதாகும்". இந்நாளில்,

> பிராமணியம் என்ற கருத்தியலுக்கு வருவதற்கு நீங்கள் பிறப்பால் பிராமணராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. (உம்: ராமசாமி நாயுடு என்று அழைக்கப்படும் பெரியார் அவர்கள், எதிர் தரப்பில் இருந்து பிராமணியத்துக்கு முட்டு கொடுத்தார், எனவே இவர் ஒரு பிராமணிய அடிமை)

> தமிழுக்காக இன்னுயிர் ஈத்த உ.வே.சா அவர்கள் பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும், சமஸ்கிருத மேலாதிக்கம் என்பதை தாண்டி, தேசிய இனமான தமிழ்  மொழிக்காக பாடு பட்டதால்  அவர் பிராமணிவாதி அல்ல.

> மக்களை ஒருங்கிணைய விடாமல் சதா சர்வ காலமும் சாதிய தில்லுமுல்லுகளை திட்டமிட்டு அரங்கேற்றும் தமிழக திராவிட அரசியல் சார்ந்த அனைத்து கட்சிகளும்,அமைப்புகளும் 'பிராமணிய அடிமைகள்' ஆவர்.

இந்த பிராமணியமே இன்று இந்தியாவை ஆளும் கருத்தியல். இதில் எந்த கட்சி பாகுபாடும் இல்லை. தேசிய கட்சிகளும், திராவிட கட்சிகளும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் பிராமணியத்தை ஆதரிக்கும் கட்சிகளே.....!!! திராவிட கட்சிகள் பிராமணியத்தை எதிர்ப்பதாக பம்மாத்து செய்கின்றனர். ஆனால், பிராமணியம் என்பதை ஒழியும் பட்சத்தில் இவர்களுக்கு வேலை இல்லை, அரசியல் செய்ய முடியாது, எனவே பிராமணியம் அழிவதில் அவர்களை விட இவர்களுக்கே பாதிப்பு அதிகம் என்பதை தமிழர்கள் உணர வேண்டும்.

திராவிடமும், இந்து மத எதிர்ப்பும்
உண்மையில் பெரியார் உள்ளிட்டோர் இந்து மதத்தை எதிர்க்கவில்லை. அதை நோக்கி ஒரு சுண்டு விரலை கூட நகர்த்தியது இல்லை. அந்த சாக்கில் அவர் செய்தது இவைகளை தான்.
> ஒருக்காலத்தில் மேற்ப்படி நாயக்கர் ஆட்சி காலத்தில் பிராமணர்கள் நன்கு கவனிக்கப்பட்டு இருந்தனர்.
> பல ஆட்சி மாற்றங்கள் நடந்தாலும், பிராமணர்கள் இன்று வரை தங்கள் ஆதிக்கத்தை தக்க வைத்தே வந்துள்ளனர். ஆனால், நாயக்கர் ஆட்சி உட்பட பல ஆட்சிகள் இருந்த இடமே தெரியவில்லை.
> இந்த காழ்ப்புணர்வின் வெளிப்பாடே 'பெரியாரின் பிராமன் எதிர்ப்பும், இந்து மத எதிர்ப்பும்'.

பெரியாரின் திராவிட அரசியல் என்பது தனது வடுக நாயக்கரின் ஆதிக்கத்தை மீண்டும் பிராமணரிடம் மீட்டு எடுக்க வேண்டி நடந்த ஒரு இராஜதந்திர காய் நகர்த்தல் ஆகும். இதனால் தமிழனுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. காரணம், திராவிட அரசியல் முழுக்க முழுக்க , தெளுங்கரிகளின் ஆதிக்கத்தை மீண்டும் தமிழ் மண்ணில் நிலை நாட்டவே இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

பெரியார் செய்த முக்கிய சதி செயல்
தனது வடுக ஆதிக்கத்தை தக்க வைத்து கொண்டே, தமிழனை மேலும் தாழ்த்த தனது முன்னோர்களை போலவே பல காரியங்களை நிகழ்த்தினார்.
> பிராமணர்களின் ஒருங்கிணைப்பை உடைக்க பெரியார் எதையும் செய்யவில்லை. மாறாக, அதை வலுப்படுத்த அவர்கள் கூறியவற்றை அப்படியே மீண்டும் கூறி இந்து மதத்தை வலு படுத்தினார். உண்மையில், அவர் இந்து மதம் என்கிற மத உருவாக்கத்தின் பின்பு உள்ள அரசியலை சுட்டிக் காட்டி, அது திருடி சென்ற தமிழரின் அடையாளங்களை தமிழருக்கு மீட்டு கொண்டு வந்து இருக்க வேண்டும். ஆனால்,அதை அவர் தலைகீழாகவே செய்தார். அதாவது இந்து மதத்தை காத்தார்.
> தெலுங்கு உட்பட பல தேசிய இனங்களில் உள்ள அநாகரிக செயல்களை (உடன் கட்டை ஏறுதல், வீட்டில் மலம் கழித்து அதை அல்ல ஒரு சாதியை உருவாக்குதல், கோவிலுக்கு பெண்களை நேர்ந்து விடுதல்) போன்ற செயல்களை திராவிட அநாகரிக செயல்கள் என்று கூறி, இறுதியில் அதை தமிழரின் மீதே திணித்து 'தமிழன் ஒரு அநாகரிகன்' என்கிற ரீதியில் பரப்புரை செய்தார்.
> அப்படிப்பட்ட தமிழனை மீட்டெடுக்கும் மீட்பராக திராவிடத்தையே காட்டி வந்தார்.

தலித்தியம் என்ற சாத்தான்
   தலித்தியம் என்பது 90 களில் இந்திய அரசால் திட்டமிடப்பட்டே உருவாக்கப்பட்டு போற்றி வளர்க்கப்பட்ட ஒரு கருத்தியல் ஆகும். ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலையே இதன் அடிப்படை நோக்கம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதை நன்கு உள்வாங்கியவர்கள் 'SC / BC ' என்ற வகுப்பு வாத அடிப்படையில் மக்கள் பிரிவினைகளை ஊக்குவித்த பிராமணியம், மேற்ப்படி வகுப்ப்வாத மக்களிடையே அடுத்தக்கட்டமாக குழப்பத்தையும், பதட்டத்தையும், ஒற்றுமை இன்மையையும் உருவாக்கவே தயாரிக்கப்பட்டது என்றும் எளிதில் விளங்கும். சுருக்கமாக, தலித்தியம் என்பது பிராமணியத்தின் இன்னொரு குழந்தை.

அம்பேத்காரை ஏற்காத பிராமணியம், திட்டமிட்டே அம்பேத்கார் தான் ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதி என்று பரப்புரை செய்யும் நோக்கம், அந்த அந்த தேசிய இனங்களில் உள்ள ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளை ஓரம் கட்டி விட்டு, அம்பேத்காரை அவர்களின் அடையாளமாக மாற்றுவதே ஆகும். இதன் மூலம் தலித்தியம், அதன் அடையாளம் என அனைத்தையும் தனது பிடியில் வைத்திருந்து ஆட்டுவிப்பதே பிராமணியத்தின் நோக்கம்.

தமிழர்கள் நாம் செய்ய வேண்டியது என்ன..?
* தலித்தியம் முதலில் தமிழ் நாட்டில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும்.
* திராவிடம் தமிழர்களுக்கு ஒரு துரோகி என்பதை உணர வேண்டும். அது முழுக்க முழுக்க பிராமண அடிமை கருத்தியல் என்பதை உள்வாங்க வேண்டும். திராவிடத்தை அரசியலை வேரோடும் மண்ணோடும் பிடுங்கி ஏறிய வேண்டும்.
* பிராமணர்களுக்கு உதவ ஆரியம், தெலுங்கருக்கு உதவ திராவிடம் என்பது போல, தமிழருக்கு என்று ஒரு கருத்தியல் உருவாக்கப்பட வேண்டும்.
* தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சி அமைய தமிழர்கள் ஒருங்கிணைய வேண்டும். இதுவே தமிழன் என்ற தேசிய இனத்துக்கான விடுதலை.
* மேற்ப்படி இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து தேசிய இனங்களின் விடுதலைக்கும், ஆரிய கதையின் பிடியில் இருந்து அவர்களை விடுவிக்க எதிர்காலத்தில், பாடுபட வேண்டும். இதன் மூலம் ஆதிக்கம் என்பது அந்த அந்த தேசிய இனத்தின் பிடியில் வருவதால், தனித்து ஆதிக்கம் செய்யும் பிராமணர்கள் அந்த அந்த தேசிய இனத்துடன் கலக்கவோ, பிரியவோ வர்புருத்தப்படுவார்கள். இது பிராமணியம் என்ற கருத்தியல் அழியவும், அவர்களுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பை உடைக்கவும் வழி செய்யும்.

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

29 April 2014

தமிழரை காட்டி கொடுத்த பெரியார்

பெரியாரின் திராவிட மொழிகள் பற்றிய பார்வை என்பது கன்னட,தெலுங்கு,மலையாளிகள் உள்ளிட்ட மாற்று இனத்தவர்கள் மட்டுமே தமிழர்களை மொட்டை அடிக்க குத்தகை எடுத்தவர்கள் என்பதை இந்த கட்டுரை ஆணித்தரமாக நிரூபிக்கும்.



தமிழரை காட்டி கொடுத்த பெரியாருக்கு தமிழ் மண்ணில் இருக்கும் சிலைகளில் ஒன்று

தமிழுக்கும், தமிழிய(திராவிட) மொழிகளுக்கும் இடையேயான உறவைப்பற்றிப் பெரியார் கொண்டிருந்த நிலைப்பாடு, இயற்கைக்கும் அறிவியலுக்கும் என்றும் பொருந்தவே பொருந்தாது. பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைப்படி பால்,தயிர்,மோர் இவை மூன்றும் ஒன்றே.....!!! புரியவில்லையா....? வாசியுங்கள்.

பெரியாரின் கருத்துப்படி பழைய சென்னை மாநிலத்தில் தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகிய தனித்தனி மொழிகள் கிடையாதாம்! அவை யாவுமே தமிழ் தானாம்! ஆகவே, தெலுங்கும், கன்னடமும் மலையாளமும் துளுவும் தமிழில் இருந்து தோன்றவில்லையாம். அவை யாவும் போக்குவரத்து குறைவு, தட்ப வெட்ப வேற்றுமை ஆகியவற்றால், தமிழே பல்வேறு வகைகளில் பேசப்பட்டமையால் வந்த தமிழின் வடிவங்கள் மட்டுமாம்!  தலை சுற்றுகிறதா? பெரியார் எழுதியதை படியுங்கள்.

"தமிழன்,தெலுங்கன்,கன்னடியன்,மலையாளி ஆகியோர் பேசுவதெல்லாம் தமிழ் தான். இவர்கள் பேசுவது வெவ்வேறு மொழி என்று கூறுபவன் தமிழ்மகன் அல்லன்;தமிழை அறியாதவன்;ஆரியத்துக்கு சோரம் போனவன்;நம்மைக் காட்டிக் கொடுத்து ஆரிய மேலாண்மைக்கு ஆக்கம் தேட முயற்சிப்பவன். இந்த நான்கும் வேறுவேறு மொழிகள் என்று கூறுபவர்கள் 'தமிழர் என்று தம்மை நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்; கருதிக் கொண்டு இருக்கிறார்கள்' என்று கூறலாமே ஒழிய இவர்களைத் தமிழறிந்தவர்கள் என்று நாம் ஒப்புக் கொள்ள முடியாது.

நம் புலவர்களில் சிலர், இந்த நான்கும் ஒன்றில் இருந்து வந்தவை; ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த அக்கை தங்கைகள் என்று கருதுகிறார்கள். இது பித்தலாட்டம் என்பது தான் என் கருத்து. இத்திராவிட தாய்க்கு பிறந்தது ஒரே ஒரு மகள் தான்; அது தான் தமிழ். அந்த ஒன்றைத்தான் நாம் நான்கு பெயரிட்டு அழைக்கின்றோம். நான்கு இடங்களில் பேசப்படுவதால் நான்கு பெயரில் வழங்குகிறதே ஒழிய, நான்கிடத்திலும் பேசப்படுவது தமிழ் தான். நான்கும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவது தான் தவறு; ஒன்று தான் நான்காக,நமது அறியாமையால் கருதப்பட்டு வருகிறது. இதை மெய்ப்பித்து காட்டவும் முடியும்" (-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 978-80) என்றும்,

"ஒன்று நான்கா வகுக்கப்பட்டது என்பதற்கும், ஒன்றில் இருந்து நான்கு பிறந்தன,கிளைத்தன என்பதற்கும் வேற்றுமை உண்டு. ஆகவே, தமிழ் நீண்ட தொடர்பற்ற காரணத்தால் நான்காகப் பிரிந்து இருக்கிறதேயன்றி, தமிழில் இருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பவை தோன்றியவை அல்ல;உண்டாக்கப்பட்டவை அல்ல என்று திராவிடர்கள் உணர வேண்டும். இந்த உண்மையைத் தெரிந்துகொண்டால் ஒழிய, இந்த நான்கு நாட்டாருக்குள்ளும் வேற்றுமை உணர்வு தோன்றாமல் இருக்காது. இந்த நான்கும் தமிழ்மொழியே தான் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை" (-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 978-80)

இப்படி இயற்க்கைக்கு ஒவ்வாத ஒரு விஷயத்தை கூறியதோடு மட்டும் இன்றி, தமிழ் புலவர்களை இன்னும் ஒரு படி மேலே சென்று மட்டம் தட்டுகிறார்.

"தெலுங்கர்,கன்னடியர்,மலையாளிகளுக்கு உள்ள மொழிப்பற்றில், மொழி உணர்ச்சியில் தமிழ் புலவர்களுக்கு நூறில் ஒரு பங்கு கூட இல்லை" -- (-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 978-80)

"மற்றும் தெலுங்கர்,கனடியர்,மலையாளி இவர்களை தமிழர்கள் ஆக்க வேண்டும் என்றால், 'திராவிடர்' என்று சொல்லித் தான் ஆக்க முடியும்; 'திராவிடமே தமிழ்; தமிழே திராவிடம்' என்னும் புத்துணர்ச்சியைத் திராவிட மக்கள் பெறுவார்களாக!" (-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 978-80)

நிற்க.

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்பும், முன்பும் இங்கே தாய் தமிழ் மண்ணில் தமிழர்கள் அல்லாதோர் ஆதிக்கமே இன்றும் நீடித்து கொண்டு இருக்கிறது என்பதை நன்கு அறிந்த பெரியாரின் திராவிட மொழிகள் பற்றிய சிந்தனை என்பது தமிழரை காலம் காலமாக மற்றவர்களிடம் காட்டி கொடுக்கும் ஒரு செயல் என்பதை நிறுவ இதுவே போதுமானது.

இருப்பினும், உண்மையில் பெரியார் 'என்னால் நிரூபிக்க முடியும்' என்று கூறினாரே, அந்த அடிப்படையில் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மட்டும் தானா திராவிட மொழிகள் என்று அவர் கூறியது உண்மை தானா என்பதை தமிழர்கள் உங்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறோம். உண்மையில் தமிழில் இருந்து உருவாகிய மொழிகள் சுமார் 60க்கும் மேல். அவற்றில் ஒருசிலவற்றை இங்கு காண்போம்.

* தமிழுக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு.
Ref: http://www.faculty.ucr.edu/~legneref/bronze/dravid.htm

* தமிழுக்கும், கொரிய மொழிக்கும் இடையே உள்ள தொடர்பு.
Ref: http://en.wikipedia.org/wiki/Dravido-Korean_languages

தமிழுக்கும், சப்பான் மொழிக்கும் இடையே உள்ள தொடர்பு.
http://japanese-dravidian.blogspot.in/

* தமிழுக்கும், சிங்கள மொழிக்கும் இடையே உள்ள தொடர்பு
"Rev. S. Gnanapiragasam - `There are more than 4,000 Tamil words in the Sinhala vocabulary. If the Sinhala vocabulary is stripped of all the Tamil words there will be no Sinhala language."
Ref: http://www.lankanewspapers.com/news/2007/10/20510_space.html

ஆகவே தமிழில் இருந்து உதித்த மொழிகள் பல இருந்தும், திராவிட மொழிகள் எனில் அது தெலுங்கு,கன்னடம்,மலையாளம் மட்டுமே என்றும், இவை நான்குமே தமிழ் தான் என்றும், அதை தம்மால் நிரூபிக்க இயலும் என்று மார்தட்டிய பெரியாரின் நோக்கம் தமிழர் அல்லாதோரிடம் தமிழரை காட்டி கொடுப்பது மட்டுமே......மட்டுமே.....மட்டுமே.....!!!

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்


பெரியார் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்

பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறினார் என்பதற்கு ஆயிரம் விளக்கம் கொடுக்கும் புண்ணியவான்கள், உண்மையில் தமிழின் மீதோ,தமிழரின் மீதோ பெரியார் வைத்திருந்த கண்ணோட்டத்தை பற்றி கவலை பட்டது இல்லை. ஒருக்காலும் பெரியார் தமிழை ஆட்சிமொழி ஆக்கவோ, பாட மொழியாக்கவோ முயன்றதே இல்லை. அதற்காக அவர் இந்தியை எதிர்த்து போராடியதும் இல்லை. அவர் இந்திக்கு பதிலாக ஆங்கிலத்தையே முன்வைத்தார். இதில் தமிழுக்கு எந்த இடத்தில் பெரியார் தொண்டாற்றி உள்ளார் என்று நீங்களே பார்த்து சொல்லுங்களேன்.



விடுதலை 1965 மார்ச் 3 அன்று எழுதிய ஆசிரிய உரையில்,
"நீதானே முன்பு இந்தியை எதிர்த்தாய்? இப்போது ஏன் இப்படி('தமிழ்நாடு தமிழருக்கே') சொல்கிறாய்?  என்று கேட்பீர்களானால், சொல்கிறேன். இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால், நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டுவிடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன்! இந்தி எதிர்ப்பு மொழி சிக்கல் அல்ல;அரசியல் சிக்கல் தான்!"

குடி அரசு ஏட்டில் இந்திப் புரட்டு என்னும் தலைப்பில் 20.1.1929 அன்று பெரியார் எழுதிய ஆசிரியர் உரையில்,
"இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும் -- அல்லது வணிகத்திற்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்ச்சிக்க வேண்டுமேயன்றி,வேறு மொழியைப்பற்றி எண்ணுவது முட்டாள்த் தனமோ சூழ்ச்சியோ தான் ஆகும்".

""---- தமிழ்ப் படிப்பதனாலாவது, தமிழ்தாய்ப் பற்றினாலாவது மனிதனுக்கு தன்மான உணர்ச்சியும் பகுத்தறிவு உணர்ச்சியும் வருமா என்று ஐயப்பட வேண்டி இருக்கிறது"

பெரியார் 14.8.1948 அன்று சென்னையில் ஆற்றிய ஓர் உரையில்,
"காலையில் நான் இம் மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், 'தமிழை விட ஆங்கிலத்தைக் கட்டாயப்பாட மாக்கினால், அதற்க்கு வாக்களிப்பேன்' என்று கூறினேன்' -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், மூன்றாம் தொகுதி , ப.1763

ஈ.வே.கி. சம்பத் நடத்தி வந்த தமிழ் செய்தி ஏட்டின் பொங்கல் மலரில்,
"தமிழ் ஒரு 'நியூசென்ஸ்'! தமிழ் புலவர்கள் யாவரும் குமுக எதிரிகள்" -- கவிஞர் கருணானந்தம், தந்தை பெரியார்,ப.414

"சனியனான தமிழுக்கு" விடுதலை 16.3.1967, ஆசிரியவுரை, கவிஞர் கருணானந்தம், தந்தை பெரியார், ப.477

விடுதலை ஏட்டில் 'தாய்ப்பால் பைத்தியம்' என்னும் தலைப்பில் பெரியார், 'எனக்கு தமிழ் பற்றும் இல்லை! நான் தமிழனும் இல்லை!" என்று எழுதியுள்ளார். -- புலவர் வி.போ.பழனிவேலன், ஈ.வே.இரா. பெரியாரும், இந்தியும் (கட்டுரை), தென்மொழி தி.பி.1996, பங்குனி (1964 மார்ச்),ப.59

தாய்மொழிக் கல்வி என்னும் அடிப்படை மனித உரிமையை கடுமையாக விமரிசித்து பெரியார் கூறியதாவது,
"இன்றைய நாளில் கூட மேற்கண்ட தமிழ் தாயின் பாலை நேரே அருந்தி வளர்த்த பிள்ளைகள் ஆங்கிலப் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால்,(இந்த அன்பர்கள் உட்பட) எவ்வளவோ ஆற்றலும் திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள வாழ்க்கை நிலையே வேறாக -- அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக -- ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரமுள்ள உழைப்பாளர்களாகி இருப்பார்கள்  என்று உறுதியோடு கூறுவேன்" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991 - 93

"தாய்ப்பாலை (தமிழை) எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு, அஃது எதற்குப் பயன்படுகிறது?" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991 - 93

"இன்றைய முற்ப்போக்குக்கு முதல் எதிரி தாய்ப்பால் குடித்த மக்கள்தானே?" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93

பெரியாரின் கூற்றுப்படி தாய் மொழி மீது பற்று வைத்தால் அது பிற்போக்கு! பற்று இல்லை எனில் முற்போக்கு! என்ன ஒரு சித்தாந்தம்.....? மேலும் வாசியுங்கள்.

"இன்றைக்கு எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்ப்பட வேண்டுமானால், (ஆங்கில) புட்டிப் பால் தானே எண்ணங்கள், செயல்முறைகள், நடைமுறையின் பெயர்கள், அடிப்படை கருத்துகள் முதலியவற்றை அறிந்து வரும்படி, நம் மக்களை மேல்நாடுகளுக்கு அனுப்பிவைக்க முடிகிறதே தவிர, நமது தாய்ப்பால் (தமிழ்) இதுபோல் எதற்காவது பயன்படுகிறதா?" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93

பெரியார் வானளாவ புகழும் எந்த ஆங்கிலேயரும் 'முற்போக்கு' என்னும் சாக்கில் தத்தம் தாய்மொழியை என்றாவது மறந்தது உண்டா? யோசியுங்கள் தமிழர்களே....!!!

ஸ்டாலின் மொழியியல் கொள்கையானது, தமிழகத்தில் உள்ள பொதுவுடைமை கட்சிகளை தமிழ் மக்களோடும் மண்ணோடும் ஓட்டம்விடாமல் செய்த கொள்கை ஆகும். அதன்படி "மொழி என்பது ஒருவருக்கு ஒருவர் தத்தம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள உதவுகின்ற வேர்ருக்கருவியே அன்றி வேறில்லை" என்பதை பெரியார் அப்படியே முன்மொழிகிறார்.

"இதை தவிர, மொழியில் வேறு என்ன இருக்கிறது? இதற்காகத் தாய்மொழி என்பதும், தகப்பன் மொழி என்பதும், நாட்டுமொழி என்பதும், மொன்னோர் மொழி என்பதும், மொழிப்பற்று என்பதும் ஆனவற்றை எல்லாம் மொழிக்கு எதை பொருத்துவது?" என்று சொல்லி சீறுகிறார் பெரியார்.-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93

அட தமிழருக்கு இயல்பாய் தோன்றிய தாய் மொழி பற்றுக்கு கூட பிராமணர் தான் காரணம் என்பது பெரியாரின் அறிய கண்டுபிடிப்பு.
"இந்தி கட்டாயம் என்பதால் தானே தமிழ் மொழிப் பைத்தியம் நமக்கு ஏற்ப்பட்டது? இது பார்ப்பனர்களின் திறமையே ஆகும்" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93

"ஆங்கில எழுத்துக்களையே தமிழ் எழுத்துக்களுக்கு நெடுங்கனக்காக -- அகர வரிசையாக --- எடுத்துக் கொள்ளலாம் என்றும், தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற எழுத்து ஆங்கிலத்தில் ஏதாவது ஒன்றிரண்டு குறையுமானால், அதற்க்கேற்ற தமிழ் எழுத்தையே எடுத்து கொள்ளலாம் எனும் சொன்னதோடு, மற்றும் ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்ப்பட்டால் நான் மிக மிக மகிழ்ச்சியும் நிறைவும் அடைவேன் என்றும் பேசியிருக்கிறேன்" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் ,இரண்டாம் தொகுதி , பப 988-89

"உங்கள் வீட்டில் மனைவியுடனும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள்;பேச பழகுங்கள்;பேச முயலுங்கள்;! தமிழ்ப் பைத்தியத்தை விட்டு ஒழியுங்கள்" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் ,இரண்டாம் தொகுதி , பப 988-89
என்றும் தமக்கே உரிய பாணியில் தமிழ் தொண்டாற்றி உள்ளார் பெரியார்.

தமிழர்களே,

'ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அதனுடைய மொழியை அழி' என்பது தான் வல்லரசு நாடுகளின் உத்தி. தேவநேய பாவாணர் கிட்டத்தட்ட கெஞ்சி கேட்டும் ஒரு தமிழ் வழி பள்ளியை கூட திறக்க உதவி செய்யாத பெரியார், புற்றீசல் போல ஆங்கில வழி பள்ளிகளையே திறந்தார்/திறக்க முன் நின்றார். அந்த ஆங்கில வழி பள்ளிகளே இன்று சமச்சீர் கல்வி போன்ற குறைந்த பட்ச உரிமையை எதிர்த்து கொடி பிடிக்கின்றனர் என்பது உபரித் தகவல்.

வாழ்க பெரியாரின் தமிழ் தொண்டு.....!!! வளர்க அவரின் புகழ்.....!!!

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

07 January 2014

குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கியது தமிழனே...!!!

கேள்வி: தமிழ் மொழியை விடுத்து எல்லோரும் ஆங்கிலம் பேசுங்கள். ஆங்கில அறிவே நமக்கு உதவும். வீட்டில் உள்ள வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்திலேயே உரையாடுங்கள். ஆங்கிலமே அறிவு மொழி என்று பெரியார் முன்மொழிந்தார். இதில் தவறென்ன...?

பதில்: பெரியாருக்கு ஆங்கில மோகத்தை விட, தமிழை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கி இருந்ததை பல வழிகளில் நிறுவலாம். ஒரு உதாரணத்துக்கு இந்த வீடியோ பதிவை பார்க்கவும்.



மேலும், ஆங்கில மோகத்தால் ஏற்ப்பட்ட இன ரீதியான சீரழிவை கீழே உள்ள பதிவு விளக்குகிறது.

Book name: Chariots of the Gods
Author: Erich von Daniken 


வெள்ளைக்காரன் தான் எல்லாத்துலையும் கில்லாடி என்றும், அவனுக்கு தான் அறிவு இருக்கு தமிழன் வெள்ளைக்காரனை பாத்து கத்துக்கணும் என்று ராமசாமி நாயக்கர் போன்ற திராவிட வாதிகள் முன்மொழிந்த, குப்பைக்கு கூட புரோஜனம் இல்லாத மெக்காலே கல்வித் திட்டத்தால் நம்மில் பெரும்பாலோர் மேற்கத்திய மாயையில் இருந்திருப்போம். இன்றும் அதே தி.க நபர்கள் இந்த 'Chariots of Gods ' என்ற புத்தகத்தை ஒருவேளை வாசித்தால், அதில் சுவிஸ் ஆய்வாளர் சொல்லியதை அப்படியே நம்மிடம் வந்து வாந்தி எடுப்பார்கள். அப்படி என்ன தான் கூறுகிறார் எரிக் வான் டனிகென்?
மனிதன் காட்டுமிராண்டியாக உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டு இருந்த காலத்தில்,

> விவசாயத்தை கற்றுக் கொடுத்தது.
> அதனை ஒட்டி குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கியது.
> தொழில் நுட்ப அறிவை கொடுத்தது.

இதையே திராவிட தலித்தியவாதிகள் இப்படி நம்மிடம் வந்து சொல்வார்கள்.
> குடும்பம் என்ற அமைப்பின் உருவாக்கத்துக்கும் தமிழனுக்கும் சம்பந்தமே கிடையாது.
> விவசாயத்தை கண்டு பிடிச்சி நாகரிகம் சொல்லித் தந்தது ஆரியன் கூட இல்ல....ஏலியன்.....!!!
> கோவில், அணைக்கட்டு என எல்லாத்தையும் கட்டுனது ஏலியன் தான்....பாரு வெள்ளைக்காரனே ஆராய்ஞ்சு சொல்லிட்டான்....!!!

உண்மையிலேயே இந்த வெள்ளைக்கார ஆராய்ச்சி வெங்காயங்கள் ஆராய்ச்சி தான் பண்ணுதா.....இல்ல, மோசடியான ஆரிய கொள்கை மாதிரி, இதுங்களா ஒன்னு சேர்ந்து மறுபடியும் வேற ஒரு மோசடியான இருட்டடிப்பு வேளையில் இறங்குதா....? இவனுங்களுக்கெல்லாம் சரியான பதிலடி கொடுக்கணும்னா குறைஞ்ச பட்சம் தமிழ் நாட்டை தமிழர் ஆளனும். வெள்ளைக்காரனுக்கு சொம்படிக்கிற எந்த திராவிட ஈர வெங்காயமும் இதை செய்யும் என்று எதிர் பார்க்க முடியாது.

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

இது தான் தமிழகத்தின் அரசியல் சிக்கல்

உலக தமிழர்களின் கவனத்துக்கு

இந்த பதிவு தமிழகத்தில் இது நாள் வரை உள்ள அரசியல் குழப்பம் பற்றி போதிய புரிதலை உங்களுக்கு தரும் என்று நம்புகிறோம். இந்த பதிவு அதற்க்கான ஆரம்பமாய் இருக்கும் என்று நினைக்கிறோம். 6 கோடிக்கும் அதிகமான தமிழர்கள் இருந்தும், ஈழமே என் மூச்சு என்று தொடை தட்டிய திராவிட இயக்கங்கள்,தலைவர்கள் உட்பட பலர் இருந்தும், அவர்கள் கையில் அதிகாரம் இருந்தும் எப்படி ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை தமிழக தமிழர்களான நாங்கள் இறக்க விட்டோம் என்று இது நாள் வரை நீங்கள் குழம்பி இருந்து இருப்பீர்கள். இது போன்ற கேள்விகளுக்கும் இந்த பதிவில் விடை கிடைக்கும் என்று நம்புகிறோம்.

நாயக்க மற்றும் நாயுடு நண்பர்களிடம் உரையாடிய போதும், தமிழ் நண்பர்கள் வழங்கிய முக்கிய புள்ளிவிவரங்கள் அடிப்படையிலும் தமிழகத்தில் ஊடகம், அரசியல், கல்வி, தொழில் துறை என அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருவது தெலுங்கர்கள் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு விட்டனர். தாங்களே தமிழகத்தில் பெரும்பான்மையானவர்கள், தாங்கள் இல்லை எனில் தமிழகத்தில் ஒரு புல் பூண்டு கூட அசைய முடியாது என்று பெருமை பொங்க தெரிவித்தனர். மகிழ்ச்சி. அந்த தெலுங்கு நண்பர்களிடம் சில கேள்விகளை முன்வைக்கிறோம். அதற்க்கு முன்பு சில விசயங்களை தெளிவாக கூறிவிடுகிறோம்.

என்ன தான் வரலாற்று ரீதியாக தமிழர்களை, தெலுங்கர்கள் வீழ்த்தி இருந்தாலும், அவற்றை மறந்து இங்கிருக்கும் நாயக்கர் உள்ளிட்ட தெலுங்கு மக்களை வேற்றுமை பாராட்ட தமிழர்கள் விரும்பவில்லை. நீங்கள் மற்ற மாநிலங்களில் தமிழர்களை கேவலமாக நடத்துவது போல, நாங்கள் உங்களை இங்கே அப்படி நடத்த ஒருகாலும் எண்ணியது இல்லை, எண்ணப் போவதும் இல்லை. நாங்கள் எதிர்ப்பது உங்களை அல்ல. எங்கள் மீதான உங்களின் ஆதிக்கத்தையே......!!!

கண்ணோட்டம் 1
--------------------------
தமிழகத்தில் நாயக்கர்களே பெரும்பான்மை மக்கள் (சுமார் 3 கோடி) என்று நீங்கள் சொல்வது உண்மை எனில், கீழ்க்கண்ட, உலக தமிழர்களின் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்க கடமை பட்டு உள்ளீர்கள்.
1) தமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, தெலுங்கர்களான திராவிடன் தான் என்ற உண்மையை ஈ.வே.ராமசாமி நாயக்கர்,கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ்ணன், மு.கருணாநிதி,வைகோ, விஜயகாந்த் உட்பட தெலுங்கர்கள் அனைவரும் மறைத்தது ஏன்? என்ன காரணம்?

2) சிங்களன் ஈழத்தமிழனை அகதியாக உலவவிட்டது போல, நாயக்கர்கள் மறவர்,பள்ளர் உள்ளிட்ட தமிழ் சாதிகளை பர்மா போன்ற நாடுகளுக்கு அகதியாய் விரட்டி விட்டது ஏன்? மூவேந்தர் காலத்தில் வராத பஞ்சம், உங்கள் காலத்தில் எப்படி வந்தது? வந்ததா , வரவழைக்கப்பட்டதா? நிலம்,உடமைகள் பிடுங்கப்பட்டும், அவை பாழ் படுத்தப்பட்டும் ஆன பிறகு,பிழைக்க சென்ற தமிழர்கள் பர்மாவை செழிப்பாக்கியது சாத்தியம் என்றால், இங்கு அவர்களை பஞ்சத்தில் தள்ளியது யார்? இந்த வரலாற்று பதிவை எந்த திராவிட சிகாமணியும் பதிவு செய்யவில்லையே. ஏன்?

3) உங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆட்சி அதிகாரம் அனைத்தும் தெலுங்கர்களான உங்களிடம் தான் இன்றும் உள்ளது என்று நீங்கள் நியாயம் கற்பித்தால், மணல் கொள்ளை, அறிவியல் பூர்வமான ஊழல், இயற்க்கை வளங்களை சுரண்டுதல், விவசாய நிலங்களை நாசமாக்கியது, சுருக்கமாக தமிழ் நாட்டில் ஜனநாயக போவையில் கொள்ளை மட்டுமே அடிப்பது தெலுங்கர்களான நீங்கள் தான் என்ற உண்மையை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள தயாரா...? அப்படி ஒப்புக் கொண்டால், உண்மையில் இங்கே தமிழகத்தில் என்ன அரசியல் சிக்கல் உள்ளது என்பது ப்லைச்சென்று அனைவருக்கும் தெரியும் அல்லவா?

4) நீங்கள் பெரும்பான்மையான மக்கள் என்றால், 'தெலுங்கர் முன்னேற்ற கழகம்' என்று வெளிப்படையாக நீங்கள் அரசியல் செய்யலாமே? யாரை ஏமாற்ற 'திராவிடர்' என்ற வார்த்தையும், தி.க, தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க போன்ற கட்சிகள் இங்கே இருக்கின்றன?

5) சாதியை வைத்து பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் இங்கே இருக்கும் எந்த தமிழ் சாதிக்கும் இல்லாத பட்சத்தில், இங்கே நடக்கும் அனைத்து சாதி மோதல்களுக்கும் அடிப்படை காரண கர்த்தாக்கள் தெலுங்கர்களான உங்களின் பிரித்தாளும் தந்திரம் தான் என்பதை ஒப்புக் கொள்ள தயாரா...? நீங்கள் தான் 3 கோடி பேர் இருக்கிறீர்களே....? நேரடியாகவே ஆதிக்கம் செய்ய முடியுமே....? எதற்கு எங்களுக்குள் சாதி சண்டையை மூட்டிவிட்டு அய்யம்பேட்டை வேலை செய்கிறீர்கள்...? எதற்கு அவற்றுக்கு 'கலப்பு திருமணம், சாதி ஒழிப்பு' என்று முற்போக்கு முகமூடி வேறு போட்டு கொள்கிறீர்கள்....?இது எதிரியை களத்தில் நேருக்கு நேர் சந்தித்த நாயக்க மன்னர்களின் புகழுக்கு களங்கம் கற்பிப்பது போல இல்லையா....?

6) 'இது தான் நிலைமை, இதை எல்லாம் மாற்ற முடியாது. தமிழர்கள் நீங்கள் அப்படியே இங்கு இருந்துவிட்டு போங்கள்' என்பது தான் கோபால்சாமி நாயுடு (என்கிற) வைகோ உள்ளிட்டோரின் கூற்று என்றால், அதை பகிரங்கமாக பொது ஊடகத்தில் சொல்ல தயாரா...? இந்த கூற்று சரி என்றால், சிங்களனும், ஈழத்தமிழனும் இலங்கையில் ஒன்றிணைந்து வாழ முடியுமே....? அதை ஏன் திராவிட சிகாமணிகள் எதிர்க்கிறீர்கள் (அல்லது நடிக்கிறீர்கள்?). கடலுக்கு இந்த பக்கம் ஒரு நியாயம், அந்த பக்கம் ஒரு நியாயம் என இரட்டை நியாயம் கடை பிடிப்பது ஆதிக்கம் செலுத்தும் தெலுங்கர்களுக்கு அழகா? பதில்களை எதிர் பார்க்கிறோம்.

கண்ணோட்டம் 2
--------------------------
1. நீங்கள் சொல்வது போல தமிழகத்தில் நீங்கள் பெரும்பான்மை இல்லை எனில், திரும்பிய பக்கம் எல்லாம் உங்களின் ஆதிக்கம் உங்களின் எண்ணிக்கைக்கும், விகிதாசாரத்துக்கும் விட மிக அதிகமாக இருப்பது தவறு இல்லையா? இதற்க்கு நீங்கள் என்ன நியாயம் வைத்து இருக்கிறீர்கள்?
Ref: http://namvaralaaru.blogspot.in/2014/01/blog-post.html

2. வெறும் 10000 பேர் கூட இல்லாத தெலுங்கு சின்ன மேளம் சாதியை சேர்ந்த மு.கருணாநிதி அவர்கள், பல கோடி தமிழருக்கு தலைவராக ஆதிக்கம் செய்வது நியாயமா?

3. நீங்கள் தமிழர்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் ஆதிக்கத்தை வைத்து இருப்பதே நியாயமற்ற செயல் என்று கூறுகிறோம். ஆனால், வரலாறை ஒழித்து, வாழ்வாதாரத்தை நசுக்கி, தமிழர்களை ஓட்டாண்டி ஆக்குவதற்கு தான் அந்த அதிகாரத்தை இன்று வரை பயன்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள் என்பது தெரிந்தும், எங்கள் மீதான உங்கள் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?

சொல்லுங்க பாஸ்....சொல்லுங்க.....!!!

09 July 2013

தமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, திராவிடனே...!!!

கேள்வி: பார்ப்பன அடிவருடிகளான சேர,சோழ,பாண்டியர்களால் தான் தமிழன் தீண்டத்தகாதவன் ஆக்கப்பட்டான். தமிழன் இன்று தலைகுனிய காரணமே ஆரிய பார்ப்பானும், மூவேந்தர்களும் தான். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:
பொதுவாக தமிழக வரலாறை பேசும் எவரும், குறிப்பாக திராவிட இயக்கத்தாரும் மூவேந்தர் வரலாறு, ஆரியர் வருகை, பார்ப்பனியம் என்று பேசி விட்டு, ஒரே தாவாக தாவி தமிழக வரலாறை முகலாயர்,ஆங்கிலேயர் என்று கடத்திவிடுவார்கள். இடைப்பட்ட சுமார் 500 வருட வரலாறை அவர்கள் பேசவே மாட்டார்கள். அப்படி பேசினாலும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அப்படி அந்த 500 வருட இடைப்பட்ட வரலாற்றில் என்ன தான் நடந்தது? அதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

அதற்க்கு முன்பு எமக்கு 'ஆரியம்,திராவிடம்,தலித்தியம்' என்ற கருத்தியல்களில் நம்பிக்கை இல்லை என்பதையும், இங்கே யாம் பேசும் ஆரியம்,திராவிடம் அனைத்தும் திராவிட இயக்கங்களின் பார்வையில், அவர்கள் இது நாள் வரை கூறி வந்த விசயங்களின் அடிப்படையிலேயே அலசப்படுகிறது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

தமிழனை வீழ்த்தியது திராவிடன்(வடுகர்கள்)..!!

மூவேந்தர்கள் மீது இது வரை எந்த ஆரிய பார்ப்பானும் படை எடுத்து வந்து வீழ்த்தியது இல்லை. அப்படி என்றால் யார் தான் வீழ்த்தியது? இந்த வரலாறு தான் அந்த 500 வருடத்தில் அடங்கி இருக்கிறது. அதை தான் திராவிட சிகாமணிகள் மறைக்கிறார்கள். ஏன் மறைக்கிறார்கள்? காரணம், தமிழனை வீழ்த்தியதே இந்த திராவிட சிகாமணிகளின் முன்னோர்களான தெலுங்கர்கள் தான் என்பதால்.

* தமிழரின் தாயகம் கடைக் கழக காலத்திலேயே வேங்கடம் முதல் குமரி வரை என சுருங்கி விட்டது. அதன் பின்னர் எந்த நேரடி ஆரிய படை எடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்தது உண்டா? எந்த ஆரிய பார்ப்பனா தமிழன் மீது போர் தொடுத்தான்? பதில் உண்டா? வடக்கில் இருந்து எந்த ஆரிய படை எடுப்பும் விந்திய மலைக்கு தெற்க்கே வந்து வெற்றி பெற்றதே இல்லை. மாறாக, தமிழ் பேரரசர்களே வடக்கு நோக்கிப் படை செலுத்தி வென்று கொடிநாட்டிய வரலாறுகள் உண்டு. இருப்பினும், வென்ற இடங்களை யாதொரு தமிழரசனும், பிடித்தாண்ட வரலாறு இல்லை. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பல வடக்கத்திய நாடுகளை வென்று திரை கொண்டு வந்தாரே அன்றி, அவற்றை பிடித்து ஆள எண்ணியதே இல்லை.

* பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய 'மனு நூல்', ஆரியரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல. அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கருனாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்ட நூல். மானவக் குலம்  என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது. 'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கருனாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும். அதையொத்த ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதாலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்.
Source: http://www.ourkarnataka.com/states/history/historyofkarnataka10.htm

* தமிழன் மீது ஆரியன் படை எடுத்து வெல்லவில்லை என்றால், வேறு யார் தான் அவர்களை வென்றார்கள் என்ற கேள்வி இயல்பாய் எழும். குலுத்துங்க சோழனுக்கு பிறகு சோழப் பேரரசில் சாளுக்கிய ஆதிக்கம் ஓங்கி வளர்ந்ததும், அதுவே சோழ பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்றும் கருதலாம். இது மண உறவால் சோழர் வீழ்ந்த வரலாறு.

* என்ன தான் மூவேந்தர்கள் வீழ்ச்சி நேரடியாகவும் மறைமுகமாவும் தொடர்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை உயர்த்தியே பிடித்தனர். சமஸ்கிருத கலப்பு இருப்பினும் ஆட்சி மொழி தமிழே.  அதில் ஒருக்காலும் அவர்கள் சமரசம் செய்துகொண்டது இல்லை. இந்த இடத்தில் தான் நாம் 'விஜயநகர பேரரசின்' (திராவிட) படை எடுப்பை கவனிக்க வேண்டும். பாண்டிய பேரரசில் சக்களத்தி மக்களுக்கிடையே நிலவிய அதிகார போட்டியில் தலையிடுவதன் மூலம், Trojan Horse போல் உள்ளே நுழைந்தது இந்த விஜயநகர வடுக பேரரசு (அதாவது பெரியார்,வைகோ உள்ளிட்ட திராவிட தலைவர்களின் முன்னோர்கள்). பின்னர் நாகம நாயக்கன் என்பானின் வழியாக மதுரை அரசையே கைப்பற்றி கொண்டு, 'நாயக்கர் அரசு' என்னும் ஒரு வந்தேறி ஆட்சியை அமைத்தது.


நாயக்கர் ஆட்சியின் கேடுகள்
* உண்மையில் தமிழர் மீதான நாயக்கரின் போர் என்பது இனப் போர் அல்ல. தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நடந்த மொழிப் போர். தமிழை தூக்கி எறிந்து விட்டு,சமஸ்கிருதத்தை முன்னிறுத்த நடந்த போர்.
* > இந்த நாயக்கர் ஆட்சியில் தான் கோவிலில் இருந்த தமிழ் தூக்கி எறியப்பட்டு சமஸ்கிருதம் உள்ளே வந்தது.
> அதுவர இருந்த தமிழ் பிராமணர்களை(அய்யர், அய்யங்கார்) வெளியேற்றி தெலுங்கு பிராமணர்களை பணிக்கு அமர்த்தியது.
> தமிழ் மக்கள் கீழ் நிலை படுத்தப்பட்டு தெலுங்கர்கள் ஆட்சி அதிகாரம், நிலம் உடமைகளை கைப்பற்றினர்.
> தமிழ் ஆட்சி மொழி அந்தஸ்தை இழந்து, சமஸ்கிருதம் ஆட்சி மொழியானது. பெரியார் உள்ளிட்டோர் தமிழை சாடுவதும், ஆங்கிலத்தை பேணுவதும் அவரின் முன்னோர்கள் வழி வந்த எண்ணம் தான்.
> அது வரை இருந்த ஆட்சி கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டு, தமிழர் நிலம் முழுவதும் 'பாளையங்களாக' பிரிக்கப்பட்டு, பாளையப்பட்டு முறை கொண்டுவரப்பட்டது.
தமிழனை வீழ்த்தியதற்கு அடையாளமாய் ஆமையை கொல்லும் நாயக்கர் சிலை (Source: Mr.Orissa Balu)

> ஒவ்வொரு பாளையத்திலும் "இனி தமிழன் எழ கூடாது" என தெலுங்கர்கள் இராணுவத்தை ஆங்காங்கே நிறுத்தி வைத்தனர். தமக்கு உதவிய சில கைக்கூலி தமிழ் சாதிகளுக்கு வறண்ட, புழகத்துக்கு புரோஜனம் இல்லாத பாளையங்கள் சன்மானமாக வழங்கப்பட்டன.
> மண்ணின் மைந்தர்களை இழித்தும் பழித்தும் பேச புது இளைக்கிய வகையான 'பள்ளு இலக்கியம்' போன்றவை உருவாக்கப்பட்டன.
> 'பார்த்தாலே தீட்டு, தொட்டாலே தீட்டு' என்று தமிழ் இனம் சாதி புதை சேற்றில் புதைத்து ஒழிக்கப்பட்டது.

* பின்பு குல்பர்கா அரசின் அரசனான வெங்காசி என்ற மராட்டிய வந்தேறியின் படை எடுப்பைத் தொடர்ந்து சோழர்களின் தலைநகராம் தஞ்சையில் மராத்தியர் ஆட்சி அமைந்தது. இன்று வரை எம் பாட்டன் ராஜ ராஜனின் திரு உருவ சிலை கோவிலுக்கு வெளியில் கேட்பாரற்று கிடக்க முக்கிய காரணமே இன்று தஞ்சை பெரிய கோவிலுக்கு நிர்வாகியாக விளங்கும் மராட்டியரே ஆகும்.

இதில் இருந்து யாம் தெரிந்து கொள்வது:
* தமிழும், தமிழரும் ஆரியப்படை எடுப்பால் கெட்டதாக வரலாறு இல்லை. 'திராவிடராம்' கன்னடர்,தெலுங்கர்,மராத்தியர் ஆகியோரின் படைஎடுப்பாலே தமிழன் வீழ்ந்தான். இது மறுக்க முடியாத கசப்பான உண்மை.
* தமிழக மண்ணில் எந்த காலத்துக்கும் வடுகர்களின்(கன்னடர்,தெலுங்கர்) ஆதிக்கமே நீடிக்க வேண்டும் என்பதற்காக, இல்லாத ஆரிய பூச்சாண்டியை காட்டியதே திராவிடர்களின் உக்தி என்பதும் தெளிவாகிறது.

மூவேந்தர்கள் யோக்கியர்களா? 

    மூவேந்தர்களை பார்ப்பன அடி வருடி என்றும், இன்றும் தமிழன் தாழ்ந்ததற்க்கு அவர்கள் தான் காரணம் என்று திட்டமிட்டு பரப்புரை செய்து வரும் திராவிட இயக்கத்தினரின் போக்கிற்கு ஒரு உதாரணத்தையும், அவர்களின் பார்வையில் இருக்கும் ஓட்டைகளையும் இங்கே பார்க்கலாம். இதன் மூலம் தங்களது 'ஆரிய திராவிட' கருத்தியலை நிலை நிறுத்த மட்டுமே திராவிடர்கள் மூவேந்தர்களை அணுகி உள்ளார்கள் என்றும், அவர்களின் நோக்கம் தமிழன் தாழ்வுற்ற பழியை அனைத்தையும் பார்ப்பனர்களின் மீதும், மூவேந்தர்களின் மீதும் திணிப்பது மட்டுமே என்பதும் தெளிவாக விளங்கும்.

திராவிட பார்வையில் ராஜ ராஜன்
ராஜ ராஜ சோழன் நான்…. -- பாமரன்

மார்க்சிய பார்வையில் ராஜ ராஜன்
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–1  -- ஜெயமோகன்
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–2  -- ஜெயமோகன்

இருப்பினும் மூவேந்தர்கள் தொட்டு தமிழ் மன்னர்களின் வாழ்வியலை உலக கண்ணோட்டத்தில் முதலில் அலசுவோம்.

* பல்லவர்களின் காலத்துக்கு முன்பு பிராமணர்கள் என்ற ஒருங்கிணைப்பு இந்தியாவில் எங்கும் கிடையாது. அந்த அந்த கோவிலில் பூசாரிகள், அந்த அந்த பகுதி கோவிலை பராமரித்தனர். திராவிட இயக்கத்தினர்கள் சொல்வது போல பிராமணர்கள் ஆரியர்களோ, வெளியில் இருந்து வந்தவர்களோ அல்ல. அவர்கள் இந்த மண்ணிலேயே இருந்து வாழ்ந்து, பின்னர் 'ஆரிய கருத்தியலால்' தங்களின் நலம் பேண தங்களை தாங்களே ஆரியர்கள் என்று சொல்லி கொண்டனர். அவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் அல்ல என்பதற்கும், அவர்கள் இந்த மண்ணிலேயே இருந்து உதித்தவர்கள் என்பதற்கும் இந்த மரபணு ஆய்வு ஒரு உதாரணம்.



ஆதாரம்: 
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf

* சாதிகள் என்பது (உண்மையில் சாதி என்ற வார்த்தை தமிழில் இல்லை. சாதி என்பதற்கு பதிலாக இனக்குழு என்றே பயன்படுத்த வேண்டும்) ஆரிய பார்ப்பனர்களால் தமிழ் சமூகத்தில் புகுந்தது இல்லை. அது கைபர்,போலன் கணவாய் மூலம் அவர்கள் இங்கே வந்ததாக திராவிடர்கள் கூறும் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழரிடம் இன்னும் சொல்லப்போனால் இந்தியா முழுவதும் இருந்து வந்துள்ளது. எனவே சாதி கட்டமைப்பை உருவாக்கினது தமிழனே. ஆரியன் அல்ல.
உதாரணம்: சிந்து சமவெளி நாகரிகம் என்ற திராவிட நாகரிகத்தில் மக்கள் பிரிவுகள் (சாதிகள்) இருந்துள்ளன.
"Both civilizations, India and China, utilized a feudalistic political system"
"The Indus Valley had a strong centralized government led by a priest king"
Source: 
http://www.studymode.com/essays/Early-Civilizations-Comparison-China-And-The-428024.html
* "The Rise and Spread of Civilization in India and China

* எல்லாவற்றிக்கும் மேலாக நால்வர்ண பிரிவுகள் (fuedal system) என்ற சமூக கட்டமைப்பு உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து நாகரிகங்களிலும் உள்ளது குறிப்பிடத் தக்கது. இதில் இருந்து ஆரிய பிராமணர்கள் தான் தமிழனிடம் சாதியை,நால்வர்ணத்தை விதைத்தார்கள் என்னும் திராவிடர் இயக்கங்களின் கட்டுக்கதை பொய் என்று நிரூபணம் ஆகிறது.

உதாரணங்கள்:



எனவே ஆரியர்கள் வந்தார்கள், அவர்கள் தான் சாதியை கண்டு பிடித்தார்கள், மூவேந்தர்களை கையில் போட்டு கொண்டு தமிழரை அடிமை படுத்தினார்கள் என்ற திராவிடர்களின் கட்டு கதைகள் பொய்யாகி விட்டன. 

அப்படியானால் இந்த நால்வர்ண பிரிவுகள் சரியா என்று நீங்கள் கேட்கலாம். அது அந்த காலத்துக்கு பொருந்தி இருக்கலாம். ஆனால் இந்த காலத்துக்கு அது ஒத்து வராது. இன்னும் சொல்லப்போனால் அந்த நால்வர்ணத்தை யார் உருவாக்கினார்களோ அவர்கள் தான் அதை சரிசெய்யவோ, தூக்கி எறியவோ, அதில் திருத்தம் செய்யவோ வேண்டும். ஆனால், தமிழனை வீழ்த்திய திராவிடர்களிடம்(தெளுங்கர்களிடம்) இந்த பொறுப்பை ஒப்படைப்பது, சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்வதற்கு சமம். இத்தனை காலம் சாதி ஒழிப்பு,கலப்பு திருமணம், சாதி மறுப்பு திருமணம் என்ற போர்வையில் திராவிடர்கள் இங்கே செய்து கொண்டிருப்பது தமிழனை ஒட்டு மொத்தமாக அழித்து ஒழிக்க கையாண்டு கொண்டிருக்கும் தந்திரம் ஆகும்.

எனவே தமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, திராவிடனே....திராவிடனே....திராவிடனே....!!!

-- இவண் --
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்