29 April 2014

பெரியார் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்

பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறினார் என்பதற்கு ஆயிரம் விளக்கம் கொடுக்கும் புண்ணியவான்கள், உண்மையில் தமிழின் மீதோ,தமிழரின் மீதோ பெரியார் வைத்திருந்த கண்ணோட்டத்தை பற்றி கவலை பட்டது இல்லை. ஒருக்காலும் பெரியார் தமிழை ஆட்சிமொழி ஆக்கவோ, பாட மொழியாக்கவோ முயன்றதே இல்லை. அதற்காக அவர் இந்தியை எதிர்த்து போராடியதும் இல்லை. அவர் இந்திக்கு பதிலாக ஆங்கிலத்தையே முன்வைத்தார். இதில் தமிழுக்கு எந்த இடத்தில் பெரியார் தொண்டாற்றி உள்ளார் என்று நீங்களே பார்த்து சொல்லுங்களேன்.



விடுதலை 1965 மார்ச் 3 அன்று எழுதிய ஆசிரிய உரையில்,
"நீதானே முன்பு இந்தியை எதிர்த்தாய்? இப்போது ஏன் இப்படி('தமிழ்நாடு தமிழருக்கே') சொல்கிறாய்?  என்று கேட்பீர்களானால், சொல்கிறேன். இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால், நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டுவிடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன்! இந்தி எதிர்ப்பு மொழி சிக்கல் அல்ல;அரசியல் சிக்கல் தான்!"

குடி அரசு ஏட்டில் இந்திப் புரட்டு என்னும் தலைப்பில் 20.1.1929 அன்று பெரியார் எழுதிய ஆசிரியர் உரையில்,
"இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும் -- அல்லது வணிகத்திற்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்ச்சிக்க வேண்டுமேயன்றி,வேறு மொழியைப்பற்றி எண்ணுவது முட்டாள்த் தனமோ சூழ்ச்சியோ தான் ஆகும்".

""---- தமிழ்ப் படிப்பதனாலாவது, தமிழ்தாய்ப் பற்றினாலாவது மனிதனுக்கு தன்மான உணர்ச்சியும் பகுத்தறிவு உணர்ச்சியும் வருமா என்று ஐயப்பட வேண்டி இருக்கிறது"

பெரியார் 14.8.1948 அன்று சென்னையில் ஆற்றிய ஓர் உரையில்,
"காலையில் நான் இம் மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், 'தமிழை விட ஆங்கிலத்தைக் கட்டாயப்பாட மாக்கினால், அதற்க்கு வாக்களிப்பேன்' என்று கூறினேன்' -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், மூன்றாம் தொகுதி , ப.1763

ஈ.வே.கி. சம்பத் நடத்தி வந்த தமிழ் செய்தி ஏட்டின் பொங்கல் மலரில்,
"தமிழ் ஒரு 'நியூசென்ஸ்'! தமிழ் புலவர்கள் யாவரும் குமுக எதிரிகள்" -- கவிஞர் கருணானந்தம், தந்தை பெரியார்,ப.414

"சனியனான தமிழுக்கு" விடுதலை 16.3.1967, ஆசிரியவுரை, கவிஞர் கருணானந்தம், தந்தை பெரியார், ப.477

விடுதலை ஏட்டில் 'தாய்ப்பால் பைத்தியம்' என்னும் தலைப்பில் பெரியார், 'எனக்கு தமிழ் பற்றும் இல்லை! நான் தமிழனும் இல்லை!" என்று எழுதியுள்ளார். -- புலவர் வி.போ.பழனிவேலன், ஈ.வே.இரா. பெரியாரும், இந்தியும் (கட்டுரை), தென்மொழி தி.பி.1996, பங்குனி (1964 மார்ச்),ப.59

தாய்மொழிக் கல்வி என்னும் அடிப்படை மனித உரிமையை கடுமையாக விமரிசித்து பெரியார் கூறியதாவது,
"இன்றைய நாளில் கூட மேற்கண்ட தமிழ் தாயின் பாலை நேரே அருந்தி வளர்த்த பிள்ளைகள் ஆங்கிலப் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால்,(இந்த அன்பர்கள் உட்பட) எவ்வளவோ ஆற்றலும் திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள வாழ்க்கை நிலையே வேறாக -- அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக -- ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரமுள்ள உழைப்பாளர்களாகி இருப்பார்கள்  என்று உறுதியோடு கூறுவேன்" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991 - 93

"தாய்ப்பாலை (தமிழை) எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு, அஃது எதற்குப் பயன்படுகிறது?" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991 - 93

"இன்றைய முற்ப்போக்குக்கு முதல் எதிரி தாய்ப்பால் குடித்த மக்கள்தானே?" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93

பெரியாரின் கூற்றுப்படி தாய் மொழி மீது பற்று வைத்தால் அது பிற்போக்கு! பற்று இல்லை எனில் முற்போக்கு! என்ன ஒரு சித்தாந்தம்.....? மேலும் வாசியுங்கள்.

"இன்றைக்கு எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்ப்பட வேண்டுமானால், (ஆங்கில) புட்டிப் பால் தானே எண்ணங்கள், செயல்முறைகள், நடைமுறையின் பெயர்கள், அடிப்படை கருத்துகள் முதலியவற்றை அறிந்து வரும்படி, நம் மக்களை மேல்நாடுகளுக்கு அனுப்பிவைக்க முடிகிறதே தவிர, நமது தாய்ப்பால் (தமிழ்) இதுபோல் எதற்காவது பயன்படுகிறதா?" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93

பெரியார் வானளாவ புகழும் எந்த ஆங்கிலேயரும் 'முற்போக்கு' என்னும் சாக்கில் தத்தம் தாய்மொழியை என்றாவது மறந்தது உண்டா? யோசியுங்கள் தமிழர்களே....!!!

ஸ்டாலின் மொழியியல் கொள்கையானது, தமிழகத்தில் உள்ள பொதுவுடைமை கட்சிகளை தமிழ் மக்களோடும் மண்ணோடும் ஓட்டம்விடாமல் செய்த கொள்கை ஆகும். அதன்படி "மொழி என்பது ஒருவருக்கு ஒருவர் தத்தம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள உதவுகின்ற வேர்ருக்கருவியே அன்றி வேறில்லை" என்பதை பெரியார் அப்படியே முன்மொழிகிறார்.

"இதை தவிர, மொழியில் வேறு என்ன இருக்கிறது? இதற்காகத் தாய்மொழி என்பதும், தகப்பன் மொழி என்பதும், நாட்டுமொழி என்பதும், மொன்னோர் மொழி என்பதும், மொழிப்பற்று என்பதும் ஆனவற்றை எல்லாம் மொழிக்கு எதை பொருத்துவது?" என்று சொல்லி சீறுகிறார் பெரியார்.-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93

அட தமிழருக்கு இயல்பாய் தோன்றிய தாய் மொழி பற்றுக்கு கூட பிராமணர் தான் காரணம் என்பது பெரியாரின் அறிய கண்டுபிடிப்பு.
"இந்தி கட்டாயம் என்பதால் தானே தமிழ் மொழிப் பைத்தியம் நமக்கு ஏற்ப்பட்டது? இது பார்ப்பனர்களின் திறமையே ஆகும்" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93

"ஆங்கில எழுத்துக்களையே தமிழ் எழுத்துக்களுக்கு நெடுங்கனக்காக -- அகர வரிசையாக --- எடுத்துக் கொள்ளலாம் என்றும், தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற எழுத்து ஆங்கிலத்தில் ஏதாவது ஒன்றிரண்டு குறையுமானால், அதற்க்கேற்ற தமிழ் எழுத்தையே எடுத்து கொள்ளலாம் எனும் சொன்னதோடு, மற்றும் ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்ப்பட்டால் நான் மிக மிக மகிழ்ச்சியும் நிறைவும் அடைவேன் என்றும் பேசியிருக்கிறேன்" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் ,இரண்டாம் தொகுதி , பப 988-89

"உங்கள் வீட்டில் மனைவியுடனும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள்;பேச பழகுங்கள்;பேச முயலுங்கள்;! தமிழ்ப் பைத்தியத்தை விட்டு ஒழியுங்கள்" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் ,இரண்டாம் தொகுதி , பப 988-89
என்றும் தமக்கே உரிய பாணியில் தமிழ் தொண்டாற்றி உள்ளார் பெரியார்.

தமிழர்களே,

'ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அதனுடைய மொழியை அழி' என்பது தான் வல்லரசு நாடுகளின் உத்தி. தேவநேய பாவாணர் கிட்டத்தட்ட கெஞ்சி கேட்டும் ஒரு தமிழ் வழி பள்ளியை கூட திறக்க உதவி செய்யாத பெரியார், புற்றீசல் போல ஆங்கில வழி பள்ளிகளையே திறந்தார்/திறக்க முன் நின்றார். அந்த ஆங்கில வழி பள்ளிகளே இன்று சமச்சீர் கல்வி போன்ற குறைந்த பட்ச உரிமையை எதிர்த்து கொடி பிடிக்கின்றனர் என்பது உபரித் தகவல்.

வாழ்க பெரியாரின் தமிழ் தொண்டு.....!!! வளர்க அவரின் புகழ்.....!!!

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

4 comments:

  1. சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் வேலைக்கு ரூ.81, சமஸ்கிருதப் பேராசிரியர் வேலைக்கு ரூ.300, பெரியார் இதை பற்றி எழுத, நீதிக்கட்சி ஆட்சியில் வேறுபாடு நீக்கப்பட்டது....

    மருத்துவம் படிக்கவேண்டும் என்றால் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்னும் தடையை நீக்கியது திரவிட கழகம்....

    ReplyDelete
  2. ----------------------------------------------------

    வாதீடு: 094

    "உலகின் ஆதிமொலி ஆவது யாதோ?"

    பொருல்:
    உலகின் ஆதி காலத்தில் தோன்ரிய மொலியில், ஒரே ஒரு "க-ச-ட-த-ப, ன-ர-ல" எலுத்து வகய்யே இருந்திருக்க வேன்டும். அப்படிப்பட்ட தொன்மய்யான மொலியாக, தென்புலத்தின் தமிலு மொலி வெலங்கலாகுது என்ப.

    இப்பொலுதய்ய கனினி உலகத்துக்கும், தமிலு போன்ர எலுத்து என்னிக்கய்க் குரய்வாகக் கொன்ட (19 எலுத்து) விசய்ப்பலகய்யே, விரய்வான செயல்பாட்டுக்குத் தேவய்யாக உல்லது என்ப. சிரப்பு எலுத்துக் குரியீட்டய், அரிவியல் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்துதல் வேன்டும்.

    ----------------------------------------------------

    வாதீடு: 095

    "உலகின் ஆட்சிமொலி ஆவது யாதோ?"

    பொருல்:
    உலகின் ஆட்சி மொலி ஆவதில்,
    1) அடிப்படய்யான எலுத்து விடுபடாமல் இருத்தல் வேன்டும்
    (எடுத்துக்காட்டு: எ/ஏ, ஒ/ஓ),
    2) எலுத்தின் என்னிக்கய் குரய்வாக இருத்தல் வேன்டும்
    (எடுத்துக்காட்டு: N = ன/ண, R = ர/ற, L = ல/ள/ழ),
    3) எலுத்தின் ஒரு வரி வடிவுக்கு ஒரு ஒலி வடிவம் மட்டும் இருத்தல் வேன்டும்
    (எடுத்துக்காட்டு: I = அ, E = இ, U = உ, A = எ, O = ஒ),
    4) ஒரு சொல்லுக்கு ஒரு பொருல் மட்டும் இருத்தல் வேன்டும்,
    5) கர்ப்பதுக்கு மிகச் சுலபமானதாக இருத்தல் வேன்டும்.

    ----------------------------------------------------

    வாதீடு: 096
    "மொலியின் தனித்தன்மய் இன்பமா, துன்பமா?"

    பொருல்:
    1) "ஒரு மொலியில்
    னானான்கு_க,
    னானான்கு_ச,
    னானான்கு_ட,
    னானான்கு_த,
    னானான்கு_ப,
    உன்டு என்ப."

    2) "ஒரு மொலியில்
    F, Z,
    உன்டு என்ப."

    3) "ஒரு மொலியில்
    ற, ழ,
    உன்டு என்ப."

    அவ்வாரு ஒவ்வொரு மொலியும் தன்னிடத்தில் சிரப்பு எலுத்தய்க் கொன்டு தனித் தன்மய்யுடன் வெலங்கினால், உலக மொலியாக, ஆட்சி மொலியாக, இனய்ப்பு மொலியாக எந்த மொலியய் ஏர்க்க இயலும்?

    உலக மொலி அனய்த்திலும் உல்ல பொதுவான எலுத்தய் மட்டும், எந்த மொலி கொன்டுல்லதோ, அந்த மொலியே உலக மொலியாக, ஆட்சி மொலியாக, இனய்ப்பு மொலியாக ஆதலும் கூடும் என்பதில் அய்யம் ஏதும் உன்டோ? அப்படிப்பட்ட மொலியாக, தனித்தன்மய் னீக்கப்பட்ட மொலியாக, சிரப்பு எலுத்து னீக்கப்பட்ட மொலியாக தமிலு மொலி உல்லது.

    சிரப்பு எலுத்துக் குரியீட்டய், அரிவியல் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்துதல் வேன்டும்.

    ----------------------------------------------------

    ReplyDelete


  3. வாதீடு: 097
    "எலுத்துப் பிலய், மொலியின் குட்ரமே"

    "I (=அ), E (=இ), U (=உ), A (=எ), O (=ஒ)" என்பதே, சரியான ஒலிப்பு முரய் ஆகலாம். எந்த ஒரு மொலியின் வரி வடிவுக்கும், ஒலி வடிவுக்கும் இடய்யே குலப்பமும் வேருபாடும் இருந்திட்டால், அதிகம் படித்த மேதய்யரின் எலுத்திலேயும் கூட பிலய் ஏர்ப்படலாகும். எலுத்துப் பிலய் என்பது, மொலியின் குட்ரமே ஆகும்.

    அ = I = Ice,
    ஆ = II,
    இ = E = English,
    ஈ = EE,
    உ = U = Union,
    ஊ = UU,
    எ = A = Age,
    ஏ = AA,
    ஒ = O = One,
    ஓ = OO,
    --------------------
    க = K,
    ங = G (NG),
    ச = S,
    ஞ = J (NJ),
    ட = T,
    ன = N,
    த = D,
    ந = H (NTH),
    ப = P,
    ம = M,
    ய = Y,
    ர = R,
    ல = L,
    வ = V,
    --------------------
    தமிலு மொலியில் ஆக மொத்த எலுத்து = 24.
    இதில், உயிர் எலுத்தின் இரட்டிப்பு னெடில் எலுத்து ஆதலாலும், மெய்யெலுத்துடன் உயிரெலுத்தின் சேர்க்கய் உயிர்மெய்யெலுத்து ஆதலாலும், கனினித் தமிலு மொலியின் விசய்ப்பலகய் எலுத்து = 19 ஆகும்.

    ----------------------------------------------------

    வாதீடு: 098
    "எ-ஏ, ஒ-ஓ ஒலினுட்பம் தேவய்யே?"

    பொருல்:
    உலக மொலி, ஆட்சி மொலி, இனய்ப்பு மொலி எது ஆனாலும், அனய்த்துக்கும் எ-ஏ, ஒ-ஓ குரில்-னெடில் ஒலி னுட்பம் மிகத் தேவய்யானது ஆகும். இந்த ஒலி னுட்பம் ஆனது, பேச்சு உனர்தலில் (Speech Recognition) மிக முக்கியமானது ஆகும்.

    உலக மொலி, ஆட்சி மொலி, இனய்ப்பு மொலி என்ரு போட்ரப்படும் மொலியில், அ_ஆ, இ_ஈ, உ_ஊ என்னும் எலுத்து வேருபாடு இருப்பது உன்டு. அது போன்ரு எ_ஏ, ஒ_ஓ என்னும் எலுத்து வேருபாடும் இருத்தல் வேன்டாமா? எ_ஏ, ஒ_ஓ எலுத்து வேருபாடு இருந்தால்தானே "எடு_ஏடு, கெடு_கேடு, ஒடு_ஓடு, கொடு_கோடு, தொடு_தோடு, எட்டு_ஏட்டு, கெட்டு_கேட்டு, தெக்கு_தேக்கு, ஒட்டு_ஓட்டு, கொட்டு_கோட்டு, தொட்டு_தோட்டு" ஆகிய சொல்லின் பொருல் வேருபாட்டய் உனர்த்துதல் இயலும்.

    உலக மொலி, ஆட்சி மொலி, இனய்ப்பு மொலி எது ஆனாலும், அதிலே எ-ஏ, ஒ-ஓ குரில்-னெடில் ஒலி னுட்பம் இல்லாவிட்டால், எடு = ஏடு ஆகி, ஒடு = ஓடு ஆகி, கொடு = கோடு ஆகி, தொடு = தோடு ஆகி, எட்டு = ஏட்டு ஆகி, கெட்டு = கேட்டு ஆகி, தெக்கு = தேக்கு ஆகி, ஒட்டு = ஓட்டு ஆகி, கொட்டு = கோட்டு ஆகி, தொட்டு = தோட்டு ஆகி மொலியிலே பெருங் குலப்பம் ஏர்ப்படலாகுமே.

    ----------------------------------------------------

    ReplyDelete

  4. ----------------------------------------------------

    வாதீடு: 099
    "ன_ண, ர_ற, ல_ள_ழ தேவய்யோ?"

    பொருல்:
    எது சுலபமான மொலி ஆதல் கூடுமோ, அதுவே உலகின் பொதுவான மொலி ஆதல் கூடும் என்பதில் அய்யம் ஏதும் உன்டோ?

    "WONDER" என்ர சொல்லய் = "WOன்DER, WOண்DER" என்ரும்,
    "WORLD" என்ர சொல்லய் = "WOர்LD, WOற்LD" என்ரும்,
    "WORLD" என்ர சொல்லய் = "WORல்D, WORள்D, WORழ்D" என்ரும்,
    ஒலி னுட்ப வேருபாட்டுடன் எலுதிட்டாலும், பொருல் வேருபாடு உன்டாவது இல்லய். அதனால்
    "N" என்ர எலுத்துக்கு, = "ன், ண்" என்ரும்,
    "R" என்ர எலுத்துக்கு, = "ர், ற்" என்ரும்,
    "L" என்ர எலுத்துக்கு, = "ல், ள், ழ்" என்ரும்,
    வரி வடிவ வேருபாடு தேவய் இல்லய். அது போன்ரு

    "கப்பல்" என்ர சொல்லய் = "Kaப்பல், Gaப்பல், Haப்பல்" என்ரும்,
    "சங்கு" என்ர சொல்லய் = "CHaங்கு, Jaங்கு, Saங்கு" என்ரும்,
    "கடல்" என்ர சொல்லய் = "கTaல், கDaல்" என்ரும்,
    "தலய்" என்ர சொல்லய் = "THaலய், DHaலய்" என்ரும்,
    "படம்" என்ர சொல்லய் = "Paடம், Baடம், Faடம்" என்ரும்,
    ஒலி னுட்ப வேருபாட்டுடன் எலுதிட்டாலும், பொருல் வேருபாடு உன்டாவது இல்லய். அதனால்
    "க" என்ர எலுத்துக்கு = "Ka, Ga, Ha" என்ரும்,
    "ச" என்ர எலுத்துக்கு = "CHa, Ja, Sa" என்ரும்,
    "ட" என்ர எலுத்துக்கு = "Ta, Da" என்ரும்,
    "த" என்ர எலுத்துக்கு = "THa, DHa" என்ரும்,
    "ப" என்ர எலுத்துக்கு = "Pa, Ba, Fa" என்ரும்,
    வரி வடிவ வேருபாடு தேவய் இல்லய்.

    ----------------------------------------------------

    வாதீடு: 100
    "மொலியின் வலர்ச்சிக்கு எல்லய் உன்டோ?"

    பொருல்:
    சுலபமான, விரய்வான கருத்துப் பரிமாட்ரத்துக்கு ஏட்ரவாரு, சிந்தனய்க் கருவி ஆகிய மொலியய்க் காலம்தோரும் மேம்படுத்தி வருதல் வேன்டும். பனய் ஓலய்யிலும், பொன் ஏட்டிலும் எலுதப்பட்டக் காலம் கடந்து, இன்ரு கனினிக் காலம் தோன்ரி உல்லது. கனினியின் செயல் திரனய் விரய்வுபடுத்தும் வகய்யில், எலுத்தின் வரிவடிவ என்னிக்கய் மிகாதவாரு, மொலியய்ப் பேனுதல் வேன்டும்.

    தமிலு மொலியில் உயிர் எலுத்தின் இரட்டிப்பு னெடில் எலுத்து ஆதலாலும், மெய்யெலுத்துடன் உயிரெலுத்தின் சேர்க்கய் உயிர்மெய்யெலுத்து ஆதலாலும், கனினித் தமிலு மொலியின் விசய்ப்பலகய் எலுத்து = 19 ஆகும். அவய் வருமாரு:
    உயிர்க் குரில் எலுத்து = 5,
    மெய் வல்லின எலுத்து = 5,
    மெய் மெல்லின எலுத்து = 5,
    மெய் இடய்யின எலுத்து = 4.

    ----------------------------------------------------

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி