07 May 2014

சாதி மோதல்களுக்கு அடிப்படை காரணம் திராவிடமே....!!!

பொதுவாக தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்  , பிரச்னையை வரலாற்று ஆய்வு ரீதியான கண்ணோட்டத்தை விட, தர்க்க ரீதியான பார்வையிலேயே அணுகுகிறது. இந்த அடிப்படையில் தமிழகத்தில் ஆதிக்க சாதி, தாழ்த்தபப்ட்ட சாதி போன்ற விசயங்களில் யார் திட்டமிட்டு ஈடுபட்டு உள்ளார்கள் என்பதையும் நடுவம் தர்க்க ரீதியில் அணுகுகிறது. அதற்க்கு முன்பு சில விசயங்களை தெளிவு படுத்த விரும்புகிறது.

* தமிழகத்தில் பறையரை விட, அருந்ததியினரை விட, மோசமான தீண்டாமை கொடுமைக்கு ஆளாகி இருந்த சமூகம் 'நாடார்' சமூகம். இந்த நாடார் சமூகம் இன்று BC (அதாவது பிராமணிய பார்வையில் சாதி இந்து என்றும், திராவிட பார்வையில் ஆதிக்க சாதி) என்றும் கூறுகின்றனர்.
Ref: http://kumarikantam.blogspot.in/2011/01/blog-post_17.html

இனி விசயத்துக்கு போவோம்.
தமிழகத்தில் BC / ஆதிக்க சாதி அரசியல் அடிப்படை
1. பிராமணியம் ஒருவனை சூத்திரன் என்று வரையறுத்தால் அதை எந்த காலத்திலும் தலைகீழாக இருந்தாலும் மற்ற முடியாது. அப்படி என்றால் நாடார் சமூகம் மேற்ப்படி சூத்திர நிலையில் இருந்து, சாதி இந்துவாக மாற அனுமதித்தது பிராமணிமா, திராவிட அரசியலா....?
பதில்: திராவிட அரசியல்.

2. நாங்கள் SC பட்டியலில் இருக்க விரும்பவில்லை. எனவே BC பட்டியலுக்கு செல்ல விரும்புகிறோம் என்று நாடார் சமூகம் முன்வைத்த கோரிக்கையை நீதி கட்சி ஆமோதித்து ஆதரவு தெரிவித்தது. நீ தாழ்த்தப்பட்டவன், நீ 2000 வருட அடிமை என்று எந்த நீதி கட்சி தலைவரும், பெரியாரும் மேற்ப்படி நாடார் சமூக மக்களை எதிர்க்கவில்லை. ஆமோதித்தனர். எனவே, ஒருவர் SC அல்லது தாழ்த்தப்பட்ட சாதி/வகுப்பில் இருக்க dynamic ஆக மற்றம் செய்யும் அதிகாரம் படைத்தது பிராமணிமா ? திராவிடமா...?
பதில்: திராவிடம்

3. SC / ST பட்டியலை பொருத்தவரை மாநில அரசு தலையிட முடியாது. மாற்றம் செய்யவும் முடியாது. மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க முடியும். ஆனால், BC பட்டியலில் மாற்றம் செய்யா மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. உண்மையில் தமிழகத்தில் பிறபடுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் சாதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மக்கள். இருப்பினும், அவர்களை அந்த பட்டியலிலே இங்கு வைத்து இருப்பது பிராமணிமா ? திராவிடமா ?
பதில்: திராவிடம்

ஆக சாதி இந்துக்களை உருவாக்குவதும், நீக்குவதும் உள்ளாக அதிகாரம் படைத்தது இங்கே திராவிடமா ? பிராமணிமா ? பதில்: திராவிடம். சாதி சண்டை போட ஒரு தரப்பு இப்போ ரெடி.


தமிழகத்தில் SC / தாழ்த்தப்பட்டவர்கள் அரசியல் அடிப்படை
1. பெரியார் நடத்தியதாக சொல்லப்படும் தோல் சீலை போராட்டம், வைக்கம் போராட்டம் எல்லாம் நாடார் தலைமையிலான,அவர்களை காக்கும் போர்த்து நடத்திய போராட்டங்களாக இருக்க, பெரியார் தாழ்த்தப்பட்டவர்கள் என்று இன்று சொல்லப்படும் மக்களுக்கே அதை எல்லாம் செய்தார் என்று திசை திருப்புவது ஏன்?

2. நாடாருக்கு தான் பெரியார் தீண்டாமையை எதிர்த்து போராடினார் என்றால், இன்று வரை நாடாரை 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்று கூறியதே இல்லையே ஏன்?

3. 2000 வருட அடிமைகள் என்று பள்ளர் பறையரை திராவிடம் கூறுகிறது. பறையர்களை தெய்வமாக வணங்கும் கோவில்கள் உண்டு. பள்ளருக்கு இன்றுவரை கோவிலும்,கோவில் நிலங்களும், கோவில் உரிமைகளும் மேற்ப்படி 2000 வருட அடிமைகளாக அவர்கள் இருந்து இருந்தால், அவர்களை பிராமணியம் விட்டு வைத்து இருக்குமா...? ஆனால், அவற்றை எல்லாம் மறைத்து, இவர்களை 'தீண்டத்தகாதவர்கள், அதனால் தாழ்த்தப்பட்டவர்கள்' என்று திட்டமிட்டு பொய் பரப்புரை செய்வது பிராமணிமா திராவிடமா?
பதில்: திராவிடம்.

4. மேற்ப்படி கோவில் உரிமைகளை காக்கிறேன் பேர்வழி என்று பள்ளர் உரிமை பெற்று வந்த பல கோவில்களை அவர்களிடம் இருந்து பறித்து, 'இந்து சமய அறநிலையத்துறை' என்கிற பெயர்களில் எல்லாம், அதை பிராமணனுக்கு தாரை வார்ப்பது பிராமணிமா ? திராவிடமா?
பதில்: திராவிடம்

5. மேற்ப்படி பள்ளர்கள் 2000 வருட அடிமை என்று அவன் நம்பி இருந்த போது அதை ஆதரித்த திராவிடம், இன்று அப்படி இல்லை என்று அவர்கள் வெகுண்டு எழும் போது, வரிந்து கட்டி கொண்டு எதிர்ப்பது ஏன்? SC பட்டியலில் சேர்க்க வேண்டாம் என்று நாடார் சொன்ன போது அதை ஏற்ற திராவிடம், அதே மாதிரி SC பட்டியலில் நாங்கள் இருக்க விரும்பவில்லை என்று பள்ளர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அதை கண்டு கொள்ளாமலும், இன்னும் சொல்லப்போனால் அதை எதிர்ப்பதும் ஏன்? ஆக பள்ளர்கள்,பறையர்கள் என்றைக்குமே தாழ்த்தப்பட்டவர்களா சித்தரிப்பது பிராமணிமா, திராவிடமா...?
பதில்: திராவிடம்

சாதி சண்டை போட 'தாழ்த்தப்பட்ட படை' தயார் இப்போது....!!! மோதுங்கள்.....!!! ---- இது தான் இன்றுவரை தமிழகத்தில் நடக்கும் சாதிய மோதல்களின் பின்னணி. இன்னும் முடியவில்லை. மேற்கொண்டு வாசிக்கவும்.

1. சாதி சண்டைகள் ஏன் எப்போதும் தமிழ் சாதிகளுக்கு உள்ளே நடக்கிறது? அருந்ததியினர் மீது மிக கொடூரமாக இன்றும் தீண்டாமை கடைபிடிப்பது நாயுடு,ரெட்டி போன்ற மக்களே.....இவர்களை பற்றியோ, நாயுடு ஆதிக்க சாதி வெறி என்றோ திராவிடம், தமிழ் சாதி பிரச்சனைகளை பேசும் அளவுக்கு பேசாமல் மறைப்பது ஏன்?

2. அப்படி மறைக்க நினைக்கும் உங்கள் நோக்கம் என்ன? தமிழர்கள் சாதி வெறி பிடித்தவர்கள், தெலுங்கர்கள் அப்படி அல்ல என்று மக்கள் மனதில் பதிய வைப்பது தானே...?

3. இது நாள் வரை மேற்ப்படி திராவிடம் சாதி பாகுபாடு பார்க்காமல், அனைத்து சாதி வெறி உணர்வையும் கடித்து வந்துள்ளது, பள்ளர் பறையர் என எல்லாருக்கும் போராடியது என்று கூறி வந்ததன் நோக்கம் போலித்தனம் இல்லையா?

4. தமிழக வரலாற்றில் அதிகபட்ச தீண்டாமையை அனுபவித்த நாடார் சமூகம், BC பட்டியலில் இருப்பதாலும், கடின உழைப்பாலும், அரசியலாலும் முன்னு வந்த சூத்திரத்தை, மேற்ப்படி பள்ளர் பறையருக்கும் கூறி இருக்கலாமே திராவிடம்? அதை செய்யாமல், யாரை ஏமாற்ற இன்று வரை அவர்களை பட்டியல் சாதி லிஸ்ட்இல் வைத்து, அவர்களுக்கு நல்லது செய்கிறேன் பேர்வழி என்று ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள்? ஆக உங்கள் நோக்கம் சாதி சண்டை போட 'தாழ்த்தப்பட்ட பிரிவில்' உங்களுக்கு ஆள் தேவை என்பதை தாண்டி வேறென்ன இருக்க முடியும்?

5. நாடார் சமூகம் இன்று BC பட்டியலில் இருப்பதால், தங்களின் மீதான தீண்டாமை கறையை கிட்டத்தட்ட அறவே இல்லாமல் பார்த்து கொண்டுள்ளனர். ஆனால் 'உன்னை நீ முதலில் நீ தாழ்த்தப்பட்டவனாக உணர். அது தான் உன் விடுதலைக்கு உதவும்' என்று பள்ளர் பறையருக்கு திரும்ப திரும்ப போதிக்கும் திராவிடம், என்ன தான் செல்வமும், படிப்பும் படித்து இருந்தாலும் பறையர் சாதி ஆண் எல்லா காலத்திலும் தாழ்த்தப்பட்டவன் என்கிற நிலையை தக்க வைப்பது யார்? பிராமணிமா திராவிடமா? பதில்: திராவிடம்

6. BC பட்டியலில் இருக்கும் சாதிகள் திருமணம் செய்யும் போது வராத சிக்கல், SC பட்டியலில் இருக்கும் சாதிகளுண்டன் BC பட்டியலில் உள்ள சாதி செய்யும் போது வருவது ஏன் ? இதற்க்கு காரணம், இவன் சூத்திரன், இவன் வைசியன், இவன் சத்திரியன் என்று பிரித்து பார்க்கும் பிராமணிமா? இல்லை, இன்னார் BC யாக இருக்க வேண்டும், இன்னார் SC யாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யும் ஆளும் திராவிடம் செய்யும் பிரித்தாளும் அரசியலா....?

பதில்களை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்.

###
குறிப்பு: பெரியார் தொண்டர்கள் இது நாள் வரை பெரியார் சாதி எதிர்ப்பு பற்றியோ, ஆதிக்க சாதி எதிர்த்து குரல் கொடுத்ததை பற்றியோ, ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடினார் என்பது பற்றியோ பல பதிவுகளை கட்டுரைகளை எழுதி இருப்பார்கள். அதை எல்லாம் தேடி பிடித்து இங்கே கமெண்ட்டாக போடவும். மேற்ப்படி நடுவத்தின் பதிவை வாசித்து முடித்தவுடன், அதை நீங்கள் வாசிக்க தொடங்கினால், வேறொரு கோணத்தில் உங்களுக்கு பெரியாரும்,திராவிடமும் தெரிவார்கள்.

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

15 comments:

  1. பிராமனீயமும் திராவிடமும் ஒழித்துக்கட்ட வேண்டிய பேயும் பிசாசும்.

    ReplyDelete
  2. எனக்குத்தெரிந்த தேவர் சமூகத்தைச்சேர்ந்த ஒருவர் அவரின் தமிபிக்கு பெண் பார்க்கும்படியும் அது நிச்சயமானால் திருமண அழைப்பிதழில் தேவர் என்ற சாதிப்பெயரை போடுவதற்கு பெண் வீட்டார் சம்மதிக்க வேண்டும் என்று ஒரு முன்நிபந்தனையை வைத்தார்.உடனே நான் கேட்டேன் அழைப்பிதழில் சாதி பெயர் போடுவதின் மூலம் உமது சாதி பெருமையை சக தமிழனிடம் மட்டும்தானே காட்ட முடியும்.ஒரு பார்ப்பனன் ,மலையாளி கன்னடன் மாரவாடி இடம் காட்டினால் உனக்கு ஏதாவது பெரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்குமா? அவர்கள் எல்லொருடைய பார்வையிலும் நீ தமிழன் தான்.அதுவும் அவனுக்கு அடிமை என்பதை மனதில் கொள் என்றேன்.திருந்தினாரா என்று தெரியவில்லை. திருட்டு திராவிடம்இப்படியெல்லாம் தமிழனை பாழ்படுத்தியும் கேவலப்படுத்தியும் வைத்திருக்கின்றது.

    ReplyDelete
  3. நாடார்கள் தென் இந்தியாவையே ஆட்சி செய்த அரசவம்சத்தை சேர்ந்தவர்கள்: ஜெயலலிதா

    தமிழ்நாட்டில் நாடார் இன மக்களுக்கு பாரம்பரியம் உள்ளது. சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களின் வழித் தோன்றர்களாக நாடார்கள் கருதப்படுகிறார்கள். அந்த மரபு நிலமைக்காரர்களால் தொடரப்படுகிறது. முந்தைய பாண்டிய மன்னர்களின் வாரிசுகளாக இந்த நாடார்கள் தென் மாவட்டங்களில் அதிகம் உள்ளனர். நாடார்களின் ஆட்சி திருச்செந்தூர் தேரி மணல் காட்டுப்பகுதியில் கோலோச்சும் வகையில் இருந்தது. அவர்களது தலைநகராக கொற்கை திகழ்ந்தது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் கிடைத்த 2 தொல்பொருள் ஆவணங்கள் மூலம் சேர, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நாடார் இன மக்கள் மிகச்சிறந்த நிர்வாகிகளாக திகழ்ந்தது தெரியவந்துள்ளது. அரசின் வரவு- செலவை அவர்கள் கவனித்ததற்கான ஆவணச் சான்றுகள் உள்ளன. அவர்கள் ஒரு காலத்தில் தென் இந்தியாவையே ஆட்சி செய்த அரசவம்சத்தை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் நாடார் இன மக்கள் செய்துள்ள சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு சாதனைகள் போற்றத்தக்கது. கல்வி மற்றும் தொழில் துறையில் அவர்கள் பெற்றுள்ள வெற்றி, அவர்களது கடின உழைப்பையும், உறுதியையும் காட்டுகிறது. மறைந்த தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராசர் நாடார் இனத்தை சேர்ந்தவர். அவர் தமிழ்ச் சமுதாயத்துக்கு செய்துள்ள சேவைகளும், பங்களிப்பும் ஏராளம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையான தகவல் முதல்வர் ஜெலலிதாஅவர்கள் கல் வெட்டு ஆவனங்ககளை சரிபார்தபிறகே நாடார்களை சேர சோழ பாண்டியர் வம்சம் என்று கூறினார் அதைக்கூட மறைக்க முயல்கிறார்கள் இந்த தேவேந்திர குலத்தாரும் மறவர் கள்ளரும் தேவேந்திரர் வைய்க்கும் ஆதாரம் அனைத்தும் கோவிலில் எங்களுக்கு முதல் மரியாதை சேர சோழ பாண்டியர்கள் அற வேந்தர்கள் அவர்கள் உழு குடிகளுக்கு முதல் மரியாதை கொடுப்பது இயல்பு அதன் பின் வந்த மன்னர்கள் நயக்ர் மறவர் கள்ளர் மன்னர்கள் அவர்கள்தான் சேர சோழ பாண்டியர்களையும் தேவேந்திரர்களையும் இழிவு நிலைக்கு தள்ளியவர்கள் இதுதான் உண்மையான வரலாறு

      Delete
    2. நாடார் எனும் இனம் சமீபகாலமாகவே அவர்களாக பிரிட்டிஷாரிடம் கோரிக்கை வைத்து பறைசாற்றிக்கொண்டது...சாணார் என்பதே நாடாரின் உண்மையான பெயர்...சான்றுகள் ஏராளம்.அவர்களுக்கே தெரியும்...ஜெயலலிதாவுக்கு தென்மாவட்ட சாதி விபரங்கள் தெரியாது.இலங்கை மகிந்த மன்னனால் 8 ம் நூற்றாண்டு வாக்கில் பாண்டிய மன்னனிடம் சம்பந்தம் கொண்டபோது அடிமைகளாய் அனுப்பப்பட்டவர்களே சாணார் எனும் நாடார்..அவர்களின் வரலாறு தெரிய நினைத்தால் திருச்செந்தூர் முருகன் சிலைக்கு நேராய் ஒரு ஓட்டை கடலைப்பார்த்து இருக்கும்...அதன் வெளிப்பக்க சுவரில் புடைப்புச்சிற்பமா வள்ளி தெய்வானைச்சிலையின் கீழ் ஒரு வாசகம்... இவ்விடத்தில் நின்றுதான் சாணாரும் பறையரும் ஸ்வாமி தரிசனம் செய்யவேண்டும்....என இருக்கும்...இப்போதும் உள்ளது...தோள் சீலைப்போராட்டம் எனும் நூலை படித்தால் சாணாரின் சமூக நிலை நன்றாக அறிவீர்கள்...பெண்கள் மாராப்புகூட போடக்கூடாது.முலைவரி கட்டியவர்களும் சாணாரே...அப்படி சக்கிலியருக்கும் கீழ் சாணாரைப் பார்த்தாலே தீட்டு எனும் வரலாறு கொண்டவர்கள்...இவர்கள் எப்படி நாடாள தகுதி கொண்டவர்கள்....இன்று வணிகத்தால் உயர்ந்து விட்ட தா ல் சிவண்தி ஆதித்தன் கோவில் தர்மகர்த்தா ஆனபடியால் போலி வரலாறைப்படைத்து சட்டசபையில் மனல்மாபியா நியூஸ்7 ,தந்திடிவி,நுயூஸ் 18,வசண்த் டிவி,விஜிபி,சில அரசியலவாதிகள்,ஸ்டீல் இண்டஸ்ட்ரீ,பிரிண்ட்டிங்க் இண்டஸ்ட்ரீ,பலசரக்கு மொத்த வியாபாரம் ,தமிழ் நாடு மெர்க்கண்டைல் வங்கி,,,கணம் ஷன் கடைகள் என வணிக உயர்வினால் பெரிய முதலாளிகள் ஆனபடியால் இனப்பெருமையை உயர்த்த நினைப்பதில் தவறில்லை...ஆனால் போலி பிம்பத்தை வரலாற்றில் கட்டமைக்க் முடியாது...

      Delete
    3. குமரி மாவட்டத்தில் நாடான் என்ற பெயர் கொண்ட மக்கவளி நாடான் நிலங்களோடு பலதலைமுறையாக உயர்நிலையில் வாழ்ததற்கான நிலஆவணம் என் கையிலும் இருக்கிறது சாணார் நாடார் என்று பெயர் மாற்றம் பெற்றனர் என்பது பொய் குமரிமாவட்டத்தில் மக்கவளி நாடார் மருமக்கவளி நாடார் பனையேறி நாடார் புழுக்கை நாடார் என குமரி மாவட்டத்திற்கு உள்ளேயும் இருந்தாக முன்னோர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன் என் கையில் உள்ள பழைய நில ஆவணத்தில் என்னுடைய பாட்டனுடைய பெயருக்கு முன்னால் மக்கவளி நாடார் என குறிப்பிடபட்டுள்ளது என் பாட்டன் பிறந்து வளர்ந்தது பழைய நாலு கெட்டு வீடு வீட்டில் ஒரு கிணறு என் முன்னோர்கள் செழிப்போடு வாழ்ததற்கான அடையாளம் இருக்கிறது வரலாறு பொய்யாக புனையபட்டது இன்றும் பழைய வீடு கிணறு இருக்கிறது ஆராச்சி செய்து பாருங்கள்

      Delete
  4. NADARIN valarchi tamil inathil vaarum unakku ithanay kaal punarchi varugirathu yental ithu than vadugathin veeti......................naangal odukka pattom , thaltha pattom athay kooriya nee yemathu varalaru muluvathyum koora villay.....................naangal ulaytrhom , pooradinoom veti pettom ......................ithu oru nallil nadanthathu alla 300 andu kala poorattam........................naangal ulagai paarthu urakka soonoom yengalluku thevai illay unathu salugai galum , ida othukiidum yentu ..................mudinthal neeyum unathu inathy alaythu perani moolamaga uraythu sollungal tevai illay inth talit ida oothukidu yentu.......................mudiiyuma..................unathu inam oothu kolluma..................suthanthiram adayvathrkku munnal nangal koorinoom appothum sari ippothom sari yenathu inathil yeelaigal iirukirargal yentalum naangal urakka koorinoom yemakku veendam unathu saalugaigal yentu......................neeyum mudithall solli paar.................................nadargalin valarchi india desam mattum alla ulagam ariyum.....................athu poorukkamal intha alavoo keel tharamaga oru katturai unnal ithu than mudiyum ................ithanal naangal kurainthu vida povathu illai ....................meel makkal meel makkale...............intha katturai yengaluuku mayirukku samanam laaaaaaaaaaaaaaaaa.

    ReplyDelete
  5. நாடார் ஏன்பது சான்றோர் ஏன்பது பொருள் நாடார் அதாவது கர்ணன் என்னதான் சத்திரியன் ah இருந்தாலும் அவன் சுத்திரனாகவே கருத பட்டான் அவன் சத்திரிய திறமை வெளிப்படது அது போல எனதான் நாடார் சத்திரிய வம்சம் ah பிறப்பு இருந்தாலும் அவர்கள் ஏவரையும் அடிமை படுத்தாத அன்பு இருந்ததா நாள் அவர்கள் சத்திரிய மகத்துவத்தை இழந்தனர் போர் மீதும் பெரிதும் நாட்டம் கோலாத வர்கள் தோல்வி உற்று அடிமை படுத்த பட்டன இருந்தாலும் அதை கூட யாரும் மறுக்க வில்லை நாடார் ஏன்பது சான்றோர் ஏன்பதால் பிற சாதி இந்துக்கள் கூட கல்யாணம் பொன்ற்ற தொடர்புகள் வைத்து கோலாத ஓரரே காரணத்துக்கு அவர்கள் மீது தாக்குதல் போஅன்ற செயல்கள் ஈடுபட்டனர் பின்பு சில திண்டான்மை போன்றைவை அனுபவித்தனர் இருந்தாலு தனது இரதம் சத்திரியன் ஏன்பதனால் எனவோ அதை எல்லாம் தாண்டி ஒரு சத்திரிய வம்சம் எனபதை நிலை நாட்டி மாபெரும் வம்சம் மற்றவார்கள்லை தீண்டாமை கூ உட்படுத்தும் சாதி யாக திகழும் நாடார் தனது பிறப்பு ஏன்பது சத்திரியன் வாழ்த்து சுத்திரனாக இருந்தாலும் இப்போ வாழ்வது ஒரு சதிரியனாக ஏன்பத்தில் பெருமை கோல்கிறோம்

    ReplyDelete
  6. தேவர் என எவரிடமும் சாதி சான்றிதழ் இல்லை...ஆனால் தேவேந்திரர் என சாதி சான்றிதழ் உண்டு...தேவர் என்பது பட்டம்...அது இனக்குறியீடல்ல...பிள்ளை,முதலி,பள்ளர்,கோனார் என பலரும் ஒருகாலத்தில் பெயருக்குபின் போடப்பட்டதே

    ReplyDelete
  7. வில்லவர் மற்றும் பாணர்

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும்.

    இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும்.

    பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர்.
    அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். எ.கா

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின.

    பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.


    வில்லவர் பட்டங்கள்

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்


    பாணா மற்றும் மீனா

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

    சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்குஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது.

    மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களுக்கும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில்தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    ReplyDelete
  8. வில்லவர் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.


    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர்
    2. குகன்குலத்தோர்
    3. கவுரவகுலத்தோர்
    4. பரதவர்
    5. களப்பிரர்கள்
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர். கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் தெலுங்கு பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி