08 July 2013

இட ஒதுக்கீடும், திராவிட அயோக்கியதனமும்

கேள்வி: தமிழனுக்கு சட்டை போட சொல்லி கொடுத்ததே பெரியார் தான். மண்ணுக்குள் கிடந்தவனை தூசி தட்டி எடுத்து மனிதன் ஆக்கினதே பெரியார் தான். அவர் தான் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து, தமிழனை வளர்த்து விட்டது. அவரை விமர்சிப்பவர்கள் நன்றி கெட்டவர்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள். சரி தானே?

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:
இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன்பு, பெரியாரின் விடாப்பிடியான பொல்லாத திராவிட கொள்கையால் 'தமிழன்' என்ற ஒரு தேசிய இனம் எவ்வாறு உருவாகாமல் தடுக்கப்பட்டது என்பதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்பு, கன்னடர்கள்,மலையாளிகள்,தெலுங்கர்கள் போன்ற திராவிடர்கள் தமிழரின் கண் முன்னேயே தமிழ் பிரதேசங்களை பறித்து சென்றனர். பெங்களூர்,கோலார்,மூணார்,சித்தூர்,திருப்பதி,தேவி குளம்,பீர் மேடு என்று தமிழன் இழந்த நிலம் ஏராளம் ஏராளம். இவை எல்லாம் பெரியார் இருக்கும் போது தான் நடந்தது.இன்னும் சொல்லப்போனால், அவரின் ஆசியுடன் ஜோராக நடந்தது. அப்படி மொழி வாரி மாநிலங்கள் பிரிந்து சென்ற பின்பு, அவர்கள் தங்களை திராவிட இனமாக அறிவிக்கவில்லை. தனி தனி தேசிய இனங்களாகவே அறிவித்து கொண்டு, ஆட்சி அமைத்து கொண்டனர். அன்று முதல் இன்று வரை, எந்த தமிழனுக்கும் மேலே சொன்ன எந்த மாநிலத்திலும் எந்த வகையிலும் பிரதிநிதி துவமோ, அந்தஸ்தோ கிடையாது. அவ்வளவு இறுக்கமாகவும், தீவிரமாகவும் அவர்கள் தங்கள் மேலாண்மையை அந்த அந்த பிரதேசங்களில் செய்து வருகின்றனர். இருந்தாலும் மற்றவர்கள் போல, 'தமிழர்' என்ற தேசிய இனம் உருவாவதை பெரியார் ஒருக்காலும் விரும்பியது இல்லை. மீண்டும் மீண்டும் தமிழன் என்பதற்கு பதிலாக திராவிடன் என்றும், தமிழ் நாடு என்பதற்கு பதிலாக திராவிட நாடு என்றே சொல்லியும், செயலாற்றியும் வந்தார்.



"மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர,கர்னாடக,மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை" --- குடியரசு இதழில் பெரியார்.

மொழி வாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்பு இருந்த 'சென்னை மாகாணத்தில்' இன்றைய ஆந்திர,கேரளா,கன்னடம் போன்றவற்றின் ஒரு சில பிரதேசங்கள் இருந்தன. அப்படி ஒன்றாக இருந்த போது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது தான் அன்றைய BC / SC சாதி பட்டியல்கள். அப்போது MBC கிடையாது. அந்த சாதி பட்டியல்களில் மராட்டியர்,கன்னடர்,தெலுங்கர்,மலையாளி என சகல திராவிட சாதிகளும் இருந்தன.

அப்படி இருந்த அந்த சாதி பட்டியல், மொழி வாரி மாநிலங்கள் உருவான பின்பு தமிழ் நாட்டில் (மற்ற மாநிலங்களை போல) திருத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? ஆனால், இன்று வரை அந்த பழைய பட்டியலின் அடிப்படையில் தான் இங்கே BC / SC பட்டியலில் இட ஒதுக்கீடு தமிழ் நாட்டில் வழங்கப்பட்டு கொண்டு இருக்கிறது என்ற மிக அயோக்கியத் தனமான உண்மை எத்தனை தமிழர்களில் பேருக்கு தெரியும்? எந்த திராவிட அரசாவது திருத்த முயற்சித்தது உண்டா? குறைந்த பட்சம் வெளியில் தெரிவித்ததாவது உண்டா? இது தமிழ் சாதிகளுக்கு திராவிடர்கள் இழைக்கும் வரலாற்று துரோகத்தின் எச்சம் தானே?

இந்த அயோக்கியத் தனமான சாதி பட்டியலினால் ஒரு குஜராத்தியர் (உம்: சவுராஷ்டிரா) ென்னையில் குடியேறி, அங்கேயே படித்து, தமிழக BC பட்டியலில் வழங்கப்படும் 27 சதேவீத இட ஒதுக்கீட்டால், தனக்கு மருத்துவம்,பொறியியல் என இட ஒதுக்கீட்டை அனுபவித்து கொழிக்க முடியும். எந்த தமிழனாவது இதை குஜராத் மண்ணில் செய்ய முடியுமா? அதற்க்கு குஜராத் சட்டம் இடம் கொடுக்குமா? என்ன அநியாயம் அய்யா இது?

Referrence: 
தமிழக அரசின் இன்றைய சாதி பட்டியல்
http://www.tnpsc.gov.in/communities-list.html

குஜராத் அரசின் இன்றைய சாதி பட்டியல்
http://www.ncbc.nic.in/pdf/gujarat.pdf

* தமிழர் அல்லாத சாதிகள் அந்த அயோக்கிய தனமான சென்னை மாகாண சாதி பட்டியலில் சுமார் 20 சதவீதத்துக்கும் மேல். அவர்களுக்கு இன்றும் தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு BC / SC பட்டியலில் இருந்து கொடுத்து கொண்டு தான் இருக்கிறோம். யார் வீட்டு சலுகையை யார் அனுபவிப்பது?

* இன்றைய ஆந்திர கர்னாடக கேரளாவில் யாராவது இது மாதிரி தமிழனுக்கு ஒதுக்கீடு தருகிறார்களா...? மாநிலம் பிரிச்ச உடனே அவரவர் தங்களுக்கு சாதகமாக  சாதி பட்டியலை தயாரிச்சி, அவனுக்கு மட்டுமே பயன்படும் படி இட ஒதுக்கீடு அமைத்து கொண்டனர். ஒரு உதாணத்திற்கு:
"1957 க்கு முன்பு இருந்து வசிப்பவர்களுக்கு மட்டும் தான் இனி கேரளாவில்  இட ஒதுக்கீடு". அங்கு வாழும் தமிழன் எப்படி 1957 இல் கேரளாவில் வாழ்ந்தான் என்று நிரூபிக்க முடியும்? கேரளாவின் பல பகுதிகள் 1957இல் கிடையாதே? இதில் இருந்து என்ன தெரிகிறது. மலையாளிகளை தவிர வேற எவருக்கும் எந்த சலுகையும் தர கூடாது என்பதற்கு திட்டமிட்டு மலையாளிகள் செயலாற்றுகிறார்கள் என்பது தானே உண்மை?

"400 வருடங்களுக்கு மேலாக அவர்கள் இங்கேயே வாழ்ந்து விட்டார்கள், அதனால் அவர்களுக்கும் இட ஒதுக்கீடு தர வேண்டும்" என்று சொல்லும் திராவிட சிகாமணிகளே, இதே போல மற்ற மாநிலங்களில் தமிழனுக்கு அங்கே சலுகையும்,ஒதுக்கீடும் வாங்கி தர உங்களுக்கு துப்பு இருக்கா? அவர்களும் திராவிடர்கள் தானே? முடியுமா உங்களால்? ..... அடி சக்கை....அடிச்சான் பாரு பல்டி......ஆக, தமிழன் மட்டும் ஏமாந்த சோனகிரியா இருக்கணும்.....!!!

மக்களே, வெறும் 20 சதவீதம் மட்டுமே உள்ள தமிழர் அல்லாத சாதிகளால் என்ன நிகழ்ந்துவிட போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். அதை சில தரவுகளின் மூலம் அலசுவோம்.

* ஒரு கோடிக்கும் மேல் வன்னியர்கள் உண்டு. ஆனால் அரசு பணியாளர்களில் அவர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் கூட இல்லை. ஆக BC இட ஒதுக்கீட்டால் வன்னியருக்கு பிரயோஜனம் இல்லை.
* MBBS சீட்டில் 180 இல் கோனாருக்கு வெறும் 5 தான். அப்போ மீதியை யார் ஆட்டையை போடுறா...?
* முக்குலத்தோர் தொடங்கி கவுண்டர் என அனைத்து தமிழ் சாதிகளின் நிலையும் இது தான்.
* BC யில் இப்படி என்றால், SC பிரிவில் எந்த அடிப்படையில் அருந்ததியினருக்கு 3% சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொடுத்தீங்க...?

அப்போ யார் தான் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறா...?
* தமிழக அரசு செகரட்டியெட்டில் தெலுங்கர்கள் மட்டும் சுமார் 40%க்கும் மேல். இது எப்படி சாத்தியமானது? இன்னும் மராட்டியர்,கன்னடர்,மலையாளி என்று கணக்கெடுத்தால் தலை சுற்றும்.
* இருக்கும் அனைத்து திராவிட கட்சிகளின் தலைவர்களும், பெரும்பான்மை அமைச்சர்களும் தெலுங்கர்களே.
* கோவை உள்ளிட்ட பல மாநகரங்களில் பெரு வணிகர்களும், ஆலை முதலாளிகளும் தெலுங்கர்களே.
* PSG உட்பட பெரும்பாலான ஆங்கில வழி கல்வி நிறுவனங்களின் முதாளிகளும் தெலுங்கர்களே. இவர்களே 'சமச்சீர் கல்வி, மற்றும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியையும்' எதிர்த்து கடுமையாக தடுக்கின்றனர்.

ஆக, தமிழர் அல்லாதோரின் விகிதாச்சாரத்துக்கு அதிகமாகவே அவர்கள் இட ஒதுக்கீட்டால் இங்கே பயன் அடைத்துள்ளனர் என்பதும், தமிழ் சாதிகள் திருவோடு ஏந்தி கொண்டு தான் உள்ளனர் என்பதற்கும் இவை சில உதாரணங்கள் மட்டுமே.

இப்படி பெரும்பான்மை தமிழ் சமூகத்துக்கு வர வேண்டிய சலுகை எல்லாத்தையும் கமுக்கமாக,அயோக்கியமா நீங்க அனுபவிச்சுக்கிட்டு இருக்குறதும் இல்லாம, 'கவுண்டரோட இட ஒதுக்கீட்டை ஒரு பறையர் தான் பறித்துக் கொண்டார்' என்று எங்களுக்குள்ளையே சண்டையை மூட்டி விட்டுகிட்டு இருக்கீங்களே.....எவ்ளோ பெரிய அயோக்கியர்கள் நீங்கள்...? இனியும் உங்களை எம் சமூகம் மன்னிக்காது. எனவே வேண்டும் 'சாதி வாரி இட ஒதுக்கீடு'.

(குறிப்பு: 'தமிழர் வரலாறு ஆய்வு நடுவம்' சார்பில் அனைத்து தமிழ் சாதிகளையும் ஒருங்கிணைத்து இந்த இட ஒதுக்கீடு என்ற அயோக்கிய தனத்தை எதிர்த்தும், 'சாதி' வாரி இட ஒதுக்கீடு வழங்க கோரியும் ஒரு மாநாடு நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டில் தெரிவிப்பதற்காக 'சுதந்திரம் வாங்கிய நாள் முதல் இன்று வரை சாதி வாரியான இட ஒதுக்கீடு தமிழகத்தில் யார் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளது' என்று RTI மூலம் தமிழகத்துக்கு கேள்வி அனுப்பப்பட்டு உள்ளது. பதிலை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்)

ஆக தமிழக அரசு பதில் கொடுத்தாலும் சிக்கல், கொடுக்காவிட்டாலும் திராவிட யோக்கிய சிகாமணிகளுக்கு சிக்கல் தான். அந்த புள்ளி விவரம் வெளியில் தெரியும் போது 'பெரியாரும், திராவிடமும் இட ஒதுக்கீடு மூலம் தமிழனை கைக்கி விட்டாங்க்ற பொய் பிம்பம் சுக்கு நூறாக உடையும்.

-- இவண் --
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

30 comments:

  1. @திராவிடப் புரட்சி:
    //கேள்வி: தமிழனுக்கு சட்டை போட சொல்லி கொடுத்ததே பெரியார் தான். மண்ணுக்குள் கிடந்தவனை தூசி தட்டி எடுத்து மனிதன் ஆக்கினதே பெரியார் தான். அவர் தான் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து, தமிழனை வளர்த்து விட்டது. அவரை விமர்சிப்பவர்கள் நன்றி கெட்டவர்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள். சரி தானே?

    தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:
    இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன்பு, பெரியாரின் விடாப்பிடியான பொல்லாத திராவிட கொள்கையால் 'தமிழன்' என்ற ஒரு தேசிய இனம் எவ்வாறு உருவாகாமல் தடுக்கப்பட்டது என்பதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

    மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்பு, கன்னடர்கள்,மலையாளிகள்,தெலுங்கர்கள் போன்ற திராவிடர்கள் தமிழரின் கண் முன்னேயே தமிழ் பிரதேசங்களை பறித்து சென்றனர். பெங்களூர்,கோலார்,மூணார்,சித்தூர்,திருப்பதி,தேவி குளம்,பீர் மேடு என்று தமிழன் இழந்த நிலம் ஏராளம் ஏராளம். இவை எல்லாம் பெரியார் இருக்கும் போது தான் நடந்தது.இன்னும் சொல்லப்போனால், அவரின் ஆசியுடன் ஜோராக நடந்தது. அப்படி மொழி வாரி மாநிலங்கள் பிரிந்து சென்ற பின்பு, அவர்கள் தங்களை திராவிட இனமாக அறிவிக்கவில்லை. தனி தனி தேசிய இனங்களாகவே அறிவித்து கொண்டு, ஆட்சி அமைத்து கொண்டனர். அன்று முதல் இன்று வரை, எந்த தமிழனுக்கும் மேலே சொன்ன எந்த மாநிலத்திலும் எந்த வகையிலும் பிரதிநிதி துவமோ, அந்தஸ்தோ கிடையாது. அவ்வளவு இறுக்கமாகவும், தீவிரமாகவும் அவர்கள் தங்கள் மேலாண்மையை அந்த அந்த பிரதேசங்களில் செய்து வருகின்றனர். இருந்தாலும் மற்றவர்கள் போல, 'தமிழர்' என்ற தேசிய இனம் உருவாவதை பெரியார் ஒருக்காலும் விரும்பியது இல்லை. மீண்டும் மீண்டும் தமிழன் என்பதற்கு பதிலாக திராவிடன் என்றும், தமிழ் நாடு என்பதற்கு பதிலாக திராவிட நாடு என்றே சொல்லியும், செயலாற்றியும் வந்தார்.//

    தந்தை பெரியாரின் கொள்கைகளை அல்லது அவரது புகழை அழிப்பது மூலமாகத்தான் தமிழ் தேசியத்தை கட்டமைக்க முடியும் என்று எந்த ஹிந்துத்துவா மனநிலை உடைய கிறுக்கன் சொல்லித் தந்துள்ளானோ தெரியவில்லை.... தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள் தந்தை பெரியாருக்கு எதிராகவும் திராவிட இயக்கத்திற்கு எதிராகவும் பேசியும், எழுதியும் வருகின்றனர்.

    இவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள அவர்களின் பதிலில் இருந்தே அவர்களுடன் நான் கேட்க விரும்பும் இரண்டு கேள்விகள்:

    1. தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் உள்ளிட்ட பகுதிகள் பிரித்துக்கொடுக்கப்பட்ட போது திராவிட் இயக்கமா ஆட்சியில் இருந்தது? தமிழரல்லாதவரா முதமைச்சராக இருந்தார்? இல்லையே! காமராஜர் அல்லவா முதமைச்சராக இருந்தார்! மேடாவது? குளமாவது? என்று நக்கலாக கேட்ட காமராஜர் தமிழர் இல்லையா???!!! தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே..... பதில் சொல்லுங்கள்!

    2. பெரியாரால் தமிழர் என்ற தேசிய இனம் உருவாகவில்லை என்று புரட்டு பேசுபவர்களே...... தெலுங்கு தேசிய இனம், மலையாள தேசிய இனம், கன்னட தேசிய இனம், மராட்டி தேசிய இனம், ஒரிய தேசிய இனம், பெங்காலி தேசிய இனம், இத்தியாதி இத்தியாதி என்று பல தேசிய இனங்கள் உருவாகாமல், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒரிசா, மேற்கு வங்காளம் என்று இந்தியாவின் மாநில மக்களாக மட்டுமே இருக்கும் நிலைக்கு காரணமும் தந்தை பெரியார்தானா???!!! தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே..... பதில் சொல்லுங்கள்!

    எதை தின்னால் பித்தம் தெளியும் என்று அலைபவர்களை கூட ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், பித்தத்தை தெளிய வைக்கும் மாமருந்தான பெரியாரின் கொள்கைகளை நஞ்சென என்று சொல்லி பிதற்றும் தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்களை மனநல காப்பகத்தில் சேர்க்காமல் நாட்டில் நடமாடவிடுவது எவ்வளவு ஆபத்தானது என்று நினைக்கத் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. //தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் உள்ளிட்ட பகுதிகள் பிரித்துக்கொடுக்கப்பட்ட போது திராவிட் இயக்கமா ஆட்சியில் இருந்தது? தமிழரல்லாதவரா முதமைச்சராக இருந்தார்? இல்லையே! காமராஜர் அல்லவா முதமைச்சராக இருந்தார்! மேடாவது? குளமாவது? என்று நக்கலாக கேட்ட காமராஜர் தமிழர் இல்லையா???!!! தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே..... பதில் சொல்லுங்கள்!//

      ஒருவர் இந்திய மனநிலையில் இருந்து நாட்டை கெடுத்தார், ஒருவர் திராவிட மன நிலையில் இருந்து நாட்டை கெடுத்தார். அதிலும் நான் தமிழனுக்காக வாழ்கிறேன் என்கிற பேரில், ஈ.வே.ரா அவர்கள் எப்படி 'தமிழனின்' குடியை திட்டமிட்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கும் போது கெடுத்தார் என்பதை இங்கு காண்க.

      "பெரியாரின் பச்சை துரோகம்" http://www.youtube.com/watch?v=lYeELV3ti6k

      Delete
    2. //பெரியாரால் தமிழர் என்ற தேசிய இனம் உருவாகவில்லை என்று புரட்டு பேசுபவர்களே...... தெலுங்கு தேசிய இனம், மலையாள தேசிய இனம், கன்னட தேசிய இனம், மராட்டி தேசிய இனம், ஒரிய தேசிய இனம், பெங்காலி தேசிய இனம், இத்தியாதி இத்தியாதி என்று பல தேசிய இனங்கள் உருவாகாமல், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒரிசா, மேற்கு வங்காளம் என்று இந்தியாவின் மாநில மக்களாக மட்டுமே இருக்கும் நிலைக்கு காரணமும் தந்தை பெரியார்தானா???!!! தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே..... பதில் சொல்லுங்கள்!//

      இதுக்கு பதில் ஏற்க்கனவே சொல்லி ஆகிவிட்டது.
      "மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர,கர்னாடக,மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை" --- குடியரசு இதழில் பெரியார்.

      இப்போது உம்மிடம் எம் கேள்விகள். இந்தியா முழுக்க வெவ்வேறு தேசிய இனங்கள் இருந்தாலும், வெவ்வேறு மொழிகள் இருந்தால், ஒவ்வொரு தேசிய இனத்துக்குள்ளும் சாதிகள்,பிரிவினைகள் இருந்தாலும் தங்களுக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது அவர்களால் ஒன்றாக ஒரே அணியில் நிற்க முடிகிறது. மலையாளி மலையாளியை திரள்கிறான், அப்போது நபூதிரி-நாயர் சாதி பாகுபாடு தெரிவதில்லை. கன்னடனும் அப்படியே, தெலுங்கனும் அப்படியே. ஆனால், இங்கே மட்டும் (தமிழ் நாட்டில்) அப்படி ஒன்றாக, ஒரு தேசிய இனமாக என்னால் திரள முடியவில்லை.என்னால் இங்கே தமிழன் என்று சொல்ல முடியவில்லை. காரணம் திராவிடமும், பெரியாரும் தான். மறுக்க முடியுமா உங்களால்? எல்லாரும் போனதற்கு பின்பு அப்புறம் என்னய்யா வெங்காய திராவிடம்?

      Delete
  2. தற்செயலாக உங்களது இந்த பதிவை பார்க்க நேரிட்டது. இதில் சௌராஸ்டிரர்கள் BC சலுகையை அனுபவிப்பது பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். சௌராஸ்டிரர்கள் 1300 ஆண்டுகளுக்கு முன்பு சௌராஸ்டிர தேசத்திலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சாதியின் அடிப்படையில் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்ட போது,சௌராஸ்டிரர்களை " மொழிவாரி சிறுபான்மை" இனத்தவரின் அடிப்படையில் BC பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. சௌராஸ்டிரா என்பது செய்யும் தெழிலின அடிப்படையில் உருவான சாதி அல்ல. அது அவர்கள் வந்த தேசத்தின் பெயரை தாங்கியும், அவர்கள் பேசும் மொழியின் பெயராலும் சௌராஸ்டிரர்கள் என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த வரலாறு சரியாக தெரியாது. அவர்கள் கஜினி முகமது படையெடுப்பு சமயத்தில் பயந்து வந்தவர்கள் என்றும் மறுபுறம் விஜயநகர பேரரசின் அழைப்பின் பேரில் அரசு வம்சத்திற்க்கு நெசவு தொழில் செய்ய வந்தவர்கள் என்றும் வரலாறு குறிப்பிடுகிறது. மனித நாகரிகம் தோன்றியது முதல் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணத்திற்க்காக குடிபெயர்ப்பு செய்து கொண்டேயிருக்கிறார்கள். இன்றைய தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் எல்லாம் பூர்வ குடிமக்களா? அவர்கள் இடம் பெயர்ந்து சென்றிருக்கமாட்டார்களா. தமிழன் என்பவன் யார் என்று வரையறுத்து கூறமுடியுமா.எல்லைகோடுகள் மாறும் போது இதுபோன்ற பிரச்சனைகள் வரத்தான் செய்யும். இன்று எந்த எல்லைகோட்டில் வாழுகிறோமோ அந்த எல்லை கோட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, சலுகைகளை பெற்று வாழ்வது தான் முறையானது. குஜராத்தில் தமிழனுக்கு சலுகை கிடைக்குமா என்று கேட்பவர்கள், இங்கிலாந்தில் சாதிய அடிப்படையில் தமிழர்களுக்கு சலுகைகள் வேண்டும் என்று கேட்பது தானே. ஆங்கிலேயர்களின் சந்ததிகளும் இன்று தமிழ் நாட்டில் சலுகைகள் பெற்று வாழ்கின்றனர். எனவே இது போன்ற விவாதங்களில் ஈடுபடாமல், வாழும் எல்லைகோட்டில் இருக்கும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, சலுகைகளை அனுபவித்து வாழவிடுங்கள். அரசியல் காரணங்களுக்காக மக்களிடையே பகமையை வளர்காதீர்கள்

    ReplyDelete
    Replies
    1. சலுகை கொடுப்பதா வேண்டாமா என்பது அல்ல பிரச்சனை. எல்லோருக்கும் அது கொடுக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், திருத்தப்படாத பழைய பட்டியலை வைத்து அது ஏன் இங்கே செய்யப்படுகிறது என்பது தான் கேள்வி. பட்டியலை மற்ற மாநிலங்கள் போல தமிழகத்திலும் திருத்தப்பட வேண்டும். அதுவே இந்த கட்டுரையின் கோரிக்கை.

      Delete
    2. கடுமையான போராட்டம் நடத்தி எஸ்.சிக்களை விட விகிதாச்சாரத்தில் அதிக அளவு இடஒதுக்கீட்டை எம்.பி.சி என்று பெற்றவர்கள் அதற்க்கு காரணம் திராவிடக் கட்சி என்று கூற முடியவில்லை. ஆனால் கிடைக்காததற்க்கு எல்லாம் திராவிட கட்சிகளைத்தாண்டி திராவிடம் என்ற கொள்கைகளைக் குறை கூறுகின்றனர்.

      3000 குடிசைகளை திராவிட கட்சியை கேட்டுவிட்டா கொழுத்தினார்கள்? தன் இனத்தவன் இறந்ததால் அதற்க்கு காரணமானவனை தாண்டி அந்த நபரின் இனத்தவர் என்ற ஒற்றைக்காரத்திற்க்காக சூரையாடினார்கள் ஆனால் அதே ஈழப்பிரச்சனை என்று வரும் போது தி.மு.க வைத்தாண்டி பெரியார் வரை விமர்சிக்கின்றனர்.

      இது எந்த விதத்தில் நியாயம்? இந்தியாவின் எல்லாம மாநிலங்களும் அந்த அந்த மாநில சாதிக்காரர்களால் தான் ஆளப்படுகின்றது. அந்த அந்த மாநில சாதிக்காரர்களுக்கு நிறைய பயன் இருக்கின்றது. வெளிநாடுகளில் லட்டத்தில் சம்பளம் வாங்கும் இந்தியர்களில் தமிழர்கள் தானே அதிகம்? எனில் அதற்க்கு காரணம் யார்?

      ஒவ்வொரு விசயத்திலும் தமிழகத்தை மற்ற மாநிலங்களோடு ஒப்பீடு செய்கையில் எத்துனை எத்துனை முன்னேற்றங்கள்? தமிழத்தைவிட சீரழிந்த மாநிலங்கள் எத்துனை எத்துனை? எனில் உங்கள் கூற்றுப்படி அங்கு தான் எல்லாம் திருத்தப்பட்டு எல்லாம் நல்லா இருக்கே... அப்போ அவர்கள்தானே எல்லா விதத்திலும் தமிழகத்தோடு முன்னேறி இருக்கவேண்டும்?

      நீங்கள் யாரை ஏமாற்ற இதுபோன்ற கண்மூடித்தனமான பதிவுகளைப் போடுகின்றீர்கள்? பெரியாரின் உறையைக் கேட்டதுண்டா? குறிப்பாக மரணிக்கும் தருவாயில் அவர் பேசியதை???

      Delete
    3. //கடுமையான போராட்டம் நடத்தி எஸ்.சிக்களை விட விகிதாச்சாரத்தில் அதிக அளவு இடஒதுக்கீட்டை எம்.பி.சி என்று பெற்றவர்கள் அதற்க்கு காரணம் திராவிடக் கட்சி என்று கூற முடியவில்லை.//

      அப்படி வாங்கியும் MBC பிரிவு உருவாக்க போராடியவர்களுக்கு எந்த விமோச்சனம் இன்றுவரை இல்லை. இதுக்கு நீங்க பதில் சொல்லுங்களேன். அதுக்கு முன்னாடி, அந்த MBC பிரிவில் தமிழ் சாதிகள் அதிகம் இருக்கா, இல்லை தமிழர் அல்லாத சாதிகள் அதிகம் இருக்கா என்று மேலே கொடுக்கப்பட்ட தமிழக அரசின் சாதி பட்டியலை பார்த்துவிட்டு கூறுங்களேன். இது தான் திராவிட சாதனை. அதை தான் விளக்கி சொல்ல்கிட்டு இருக்கோம்.

      Delete
  3. நன்றி அருமையான பதிவுகள்...நல்ல விளக்கம் ..திராவிடன் என்று பேரை சொல்லிக்கிட்டு எவன் வந்தாலும் இனி அடித்து விரட்டும் காலம்..களமும் அமைப்போம்

    ReplyDelete
  4. பெரியாரைப் பொருத்தவரை அவரே கூட மொழி உணர்ச்சி என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். விடுதலையில் 25.7.1972ல் அது வந்திருக்கிறது. பெரியார் மறைவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் அதில் அவர் சொல்லுகிறார்.

    “மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்கால சந்ததிக்காவது சிறிது நாட்டுணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும் சமுதாய உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும். உதாரணமாக, இன்று பார்ப்பனர்களுக்கு அவர்கள் எந்த வகுப்பார்களானாலும் சமுதாயத் துறையில் எவ்வளவு பேதம் கொண்டவர்களானாலும் சமஸ்கிருதம் (வடமொழி) என்ற மொழி உணர்ச்சியாலேயே அவர்கள் பிரிக்க முடியாத கட்டுப்பாடான இன உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால், ஆரியம் சமயத் துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய பல துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலுமே தமிழர்களுக்குள் இன உணர்ச்சி பலப்படவில்லை; குறைந்து வந்து விட்டது. இப்போது பாக்கி உள்ள துறைகளிலும் இந்தி ஆதிக்கம் பெற்று இந்தி மயமாக்கி விட்டால், இந்திதம் ஆட்சிப் பீடம் ஏறி பெருமைபட்டு விட்டால். தமிழன் நிலை என்னவாகும் என்பதை சிந்தியுங்கள்” என்று அவர் அறிக்கை விடுகிறார்.

    ReplyDelete
    Replies
    1. ராஜாஜியை எதிர்ப்பதற்காக இந்தி எதிர்ப்பு என்று பம்மாத்து செய்தார். ஆனால் இந்தியை கற்பிக்க அவரே காசு செலவழித்து முயற்சியில் ஈடுபட்டார். அவரது இந்தி எதிர்ப்பு வெறும் பம்மாத்தாக இருந்ததால்தான் 1965 மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி அவர் எதிர்விளைவு காட்டவில்லை. மேலும் அப்போர் தமிழர்களால் நடத்தப்பட்டது இன்னொரு காரணம்.

      Delete
    2. எந்த வருடத்தில் இந்தி படிக்க காசு செலவழித்தார் எந்த வருடத்தில் இந்தி திணிப்பை எதிர்த்தார்-னு எல்லாம் ஆதாரத்தோடு போடுங்களேன் நாங்களும் தெரிஞ்சுக்குறோம்.

      Delete
  5. அம்பேத்கரும், பெரியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று சொல்லுகிற நிலையில் கூட அம்பேத்கர் மீது விமர்சனம் வைக்கிறார். அவர் சட்ட அமைச்சர் பதவியை விட்டு வெளியேறுகிறார் நான்கு காரணங்களை சொல்கிறார். வெளியேறுகிறபோது ஒன்று நாட்டினுடைய உள் விவகார கமிட்டியோ, வெளி விவகார கமிட்டியோ கூடுகிறபோது என்னை அழைப்பதில்லை. இது ஒரு குற்றச்சாட்டு. ஒரு அமைச்சரை அமைச்சரவைக் கூட்டத்திற்கு கூட தீர்மானம் எடுக்கும் போது கூட அழைப்பதில்லை. இன்னொன்று இந்து சட்டத் தொகுப்பு மசோதா நிறைவேற்றப்படாமல் நேரு இழுத்து அடிக்கிறார். இதோடு இன்னும் இரண்டு காரணங்களையும் அவர் சொல்லுகிறார். ஒன்று அமெரிக்காவின் உதவியை இந்தியா பெறுவதற்கு இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை தடையாக இருக்கிறது. மற்றொன்று காஷ்மீரை இந்துக்கள் வாழுகிற பகுதியை இந்தியாவோடும், இஸ்லாமியர்கள் வாழுகிற பகுதியை பாகிஸ்தானோடும் இணைத்துவிட வேண்டும். அதாவது துண்டு போடலாம் என்று சொல்லுகிறார் அம்பேத்கர். அப்போது அதைக் கண்டித்து விடுதலையில் தலையங்கம் எழுதப்படுகிறது. அதில் சொல்கிறார்.

    “மற்ற இரண்டு விசயத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். அது சுயமரியாதை சம்மந்தப்பட்ட விசயம். ஆனால் இந்தியா அமெரிக்காவை ஆதரிக்க வேண்டும். அய்.நா. சங்கத்தில் சீனாவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்பது டாக்டர் அம்பேத்கரின் கொள்கை. இதை சுயமரியாதையுடைய இந்நாட்டு மக்கள் எவரும் ஒப்புக் கொள்ள முடியாது. கீழ்த்திசை நாடுகளை அடிமைப்படுத்த விரும்பும் அமெரிக்காவுக்குச் சலுகை காட்டுவோமேயானால் அது இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைப்பதற்காகவே முடியும். இந்தியாவில் உண்மையான மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பணக்கார, வைதீக, முதலாளித்துவ, ஏகாதிபத்திய ஆட்சியை ஏற்படுத்துவதாகவே முடியும்.

    இத்தகைய ஆட்சி ஏற்படுமேயானால் முதன்மையாக விவசாயிகள் அடிமைப்பட்ட சமூகமாக வாழ வேண்ய நிலைமை தான் ஏற்படும். இந்த உண்மையை அவர் சிந்திக்காத காரணம் என்னவென்று கேட்கிறார். அடுத்து காஷ்மீரத்தைப் பற்றி அவர் சொல்லும் யோசனையையும் நாம் ஒப்புக் கொள்ள முடியாது. காஷ்மீரத்தைப் பற்றி முடிவு செய்யும் விஷயத்தைக் காஷ்மீர் மக்களுக்கே விட்டுவிட வேண்டும். காஷ்மீரத்திலே புகுந்திருக்கும் இந்தியாவும் வெளியேற வேண்டும், பாகிஸ்தானும் வெளியேற வேண்டும். இதுதான் காஷ்மீர மக்களுக்கு நீதி சொல்வதாகும்” என்று பெரியார் சொன்னார்.

    ReplyDelete
  6. பெரியார் திராவிடநாடு என்பது தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்த பகுதி என்று சொல்லவே இல்லை. ஒரு கட்டத்தில் “சும்மா திராவிட நாடு என்று சொல்வது நம்முடைய காரியத்தைக் கெடுக்கத்தான் பயன்படுமே தவிர வேறெதற்கும் பயன்படாது என்பதை அறிய வேண்டும்” என்றுகூட கோபமாக சொல்கிறார்.

    மாநில சுயாட்சி பற்றி பேசும்பொழுதுகூட, மாநில சுயாட்சியைப் பற்றி பேசாதீர்கள். மாநில சுயாட்சி வந்து என்ன ஆகப் போகிறது என்று கோபமாக எழுதினார். அன்று மாநில சுயாட்சி பற்றி தி.மு.க பேசிக் கொண்டிருந்த நிலையில் 1969 ஆம் ஆண்டு மாநிலசுயாட்சி மாநாடு நடக்கிறது. அப்போது பெரியார் சொல்லுகிறார்,

    “சில மேதாவிகள் பிரகஸ்பதிகள், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று கேட்கிறார்கள். இதன் கருத்தென்ன? வெறும் செருப்பாலடிக்காதே. அந்தச் செருப்புக்குப் பட்டு ஜரிகை கொண்டு குஞ்சங்கள் கட்டி அதனால் அடி என்று கேட்பது போல் தானே இருக்கிறது? இழிவை, மடைமையை, மானமற்றத் தன்மை யை, குறையைக் கவலையைத் தீர்க்க, அந்த அதிகாரத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும் உன்னால்” என்று கேட்கிறார். அதிக அதிகாரம் கொடுத்தாலும் சரி, இந்தியாவில் இணைந்திருக்கிறவரை இந்த இழிவை போக்க முடியாது, மானத்தை மீட்க முடியாது என்பதில் பெரியார் உறுதியாக இருந்து கருத்துகளை சொல்லியிருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. //இந்தியாவில் இணைந்திருக்கிறவரை இந்த இழிவை போக்க முடியாது, மானத்தை மீட்க முடியாது//

      இதற்காக ஒரு துரும்பையாவது அவர் அசைத்தாரா? வெறும் பேச்சு! யார் வேண்டுமானாலும் இப்படி பேசலாமே!

      Delete
    2. ஹா ஹா ஹா ஹா ஹா... அவர் பேசியது எல்லாம் வெறும் பேச்சு-னா அப்புறம் என்னாத்துக்கு ஓயாம பெரியார் பெரியார்-னு புலம்பி தள்ளிக்கிட்டு இருக்கீக??? மிடிலடா ஆசாமி!!!

      Delete
  7. “நீ யார்? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். உன்னுடைய உணவு வேறு என்னுடைய உணவு முறை வேறு; உன்னுடைய உடை வேறு; என்னுடைய உடை வேறு; உன்னுடைய கலாச்சாரம் வேறு, என்னுடைய கலாச்சாரம் வேறு; உன்னுடைய நடப்பு வேறு” என்று சொல்கிறார்.

    வலி வந்து விடுகிறது. உடனே அய்யோ, அம்மா, அப்பா என்று இரண்டு நிமிடம் முனகிவிட்டு, கொஞ்சம் தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டு பேசத் தொடங்குகிறார். “என் நடப்பு வேறு உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்கிறார். நம் காலில் கல் இடித்து விட்டால்கூட பேசிக் கொண்டு வந்த செய்தி மறந்துவிடும். என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்பதை பக்கத்திலிருப்பவரிடம் கேட்போம். பெரியாருக்கு வந்த அந்த வலிதான் அவருக்கு சாவில் கொண்டு போய் முடித்த வலி. இரண்டு நிமிடம் அந்த வலியில் துடித்த பின்னாலும் தமிழன் மேல் உள்ள அக்கறை, தமிழன் தனியாக நிலையான அரசாக வாழவேண்டும் என்று எண்ணிய அவரது சிந்தனை உன்னுடைய நடப்பு வேறு என்று சொல்லிவிட்டு வலி வந்து இரண்டு நிமிடம் கதறிவிட்டு, அதற்குப்பின்னால் சொன்னார்.

    என் நடப்புவேறு உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். வெளியே போ என்று அந்த சிந்தனையோடுதான் இறுதிவரை இருந்தார். அவரைப் பொறுத்தவரை மூன்று செய்திகளில் தொடக்கத்திலிருந்து உறுதியாக இருந்தார். ஒன்று சாதி ஒழிய வேண்டும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற சாதி பேதம் கூடாது. அடுத்து, அவர் ஆண், பெண், என்ற பாலின பேதம் கூடாது. 1927லிருந்து தொடர்ந்து குடிஅரசில் அவர் எழுதி வருகிறார். மூன்றாவதாக ஏழை-பணக்காரன் என்ற பொருளாதார பேதம் கூடாது மூன்றையும் ஒழிக்க பாடுபடும் இந்த சுயமரியாதை இயக்கம். அந்த மூன்றில் அவர் தொடர்ந்து எச்சரிக்கையாக, கவனமாக இருந்தார். அவர் தமிழ்நாட்டுக்கு விடுதலை என்று பேசுகிறபோது கூட அதை சாதி ஒழிப்பின் நீட்சியாகத்தான் பார்த்தார்.

    ReplyDelete
    Replies
    1. //மூன்று செய்திகளில் தொடக்கத்திலிருந்து உறுதியாக இருந்தார். ஒன்று சாதி ஒழிய வேண்டும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற சாதி பேதம் கூடாது. அடுத்து, அவர் ஆண், பெண், என்ற பாலின பேதம் கூடாது. 1927லிருந்து தொடர்ந்து குடிஅரசில் அவர் எழுதி வருகிறார். மூன்றாவதாக ஏழை-பணக்காரன் என்ற பொருளாதார பேதம் கூடாது//.

      சாதி ஒழிப்புக்காக (வைக்கம் போராட்டத்திற்கு அழைக்கப்பட்டு தலைமை ஏற்றதைத் தவிர) வேறு ஏதேனும் செய்தாரா?

      ஆண் பெண் பாலின பேதம் கூடாது என்றவர் பெண் விடுதலை என்பது பெண்கள் விபச்சாரிகளாவதுதான் என்று சொல்ல வில்லையா? பெண்களுக்கு ஆண்களைப் போல உடை உடுத்த வேண்டும், ஆண் பெயரைச் சூட்ட வேண்டும் என்று முட்டாள்தனமாக உளற வில்லையா?

      ஏழைப் பணக்காரன் என்ற பொருளாதார பேதம் கூடாது. சரி, கருணாநிதியைப் பற்றி அவர் சொன்னது: எங்கிட்ட 30 ரூவா சம்பளத்துக்கு வேலைக்கு வந்தவன், இன்னிக்கி மந்திரியாம்! தகர போணிப் பயல்!

      Delete
    2. //எங்கிட்ட 30 ரூவா சம்பளத்துக்கு வேலைக்கு வந்தவன், இன்னிக்கி மந்திரியாம்! தகர போணிப் பயல்!//

      இதற்க்கான ஆதாரம்??? அல்லது முழுப்பேச்சு???

      Delete
    3. நிலவரசு கண்ணன் அவர் தகரபோணிப் பயல் என்று சொன்னதாகவே இருக்கட்டும் . அந்த தகரபோணிப் பயலே அரசு மரியாதையுடன் பெரியாரை அடக்கம் செய்தார் உங்களுக்கு என்ன பிரச்சனை?

      Delete
  8. “இந்தியா நேஷனாக வேண்டும் என்பதும் இந்துமதத்தை ஒழிப்பது என்பது போல்தான் முடியாத காரியமாகும். நாம் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் உள்ள எல்லையை ஒரு நேஷனாக ஆக்கிக் கொள்ளலாம். நம் தாய்மொழி தமிழ், தாய்மொழி தமிழாக உள்ளவனுக்கு வேறு ரத்த கலப்பு இல்லாதவரை அவனது தாய் நாடும் தமிழ் நாடாகத்தான் இருக்க முடியும்? ஆகவே, தமிழர் தமிழ் நாட்டைத் தாய்நாடாக ஆக்கி கொண்டு ஒரு நேஷனாக, ஓர் இனமான இன ஒற்றுமைதடன் அயலான் சம்பந்தத்தை அரசியல், சமூக இயல், மத இயல், பொருளாதார இயல், இவ்வளவிலும் விலக்கி தனித்து இருந்து வாழ வேண்டுமானால் தனித்தமிழ்நாடு வேண்டும்.” என்று 28.6.1943 அன்று விடுதலை தலையங்கத்தில் எழுதுகிறார்.

    இந்த காலகட்டத்திலெல்லாம் பெரியார் திராவிட நாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை வைத்திருந்தார். ஆனால் அவர் அறிக்கையிலும், பேசுவதிலும் எல்லாம் தமிழ்நாடு தமிழருக்கே என்றுதான் பேசி வருகிறார். ஆனாலும் கூட அவர் மீது குற்றச்சாட்டுகள் சொல்வதுண்டு. ஏன் பெரியார் தமிழன் என்ற சொல்லை கையாளாமல் திராவிடன் என்ற சொல்லை கையாள்கிறார் என்றால் “தமிழர் என்பதில் நான் சேர்க்க நினைத்த அத்தனை பேரையும் சேர்க்கவும், நான் விலக்க நினைத்த நமக்கு மாறுப்பட்ட கலாச்சாரமுடைய கூட்டத்தை விலக்கவும் வசதி உண்டா? தமிழன் என்றால் அவனும் வந்து விடுகிறான்” என்று சொல்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. //“தமிழர் என்பதில் நான் சேர்க்க நினைத்த அத்தனை பேரையும் சேர்க்கவும், நான் விலக்க நினைத்த நமக்கு மாறுப்பட்ட கலாச்சாரமுடைய கூட்டத்தை விலக்கவும் வசதி உண்டா? தமிழன் என்றால் அவனும் வந்து விடுகிறான்”//

      தமிழன் என்று சொன்னால் அவன் எப்படி வருவான்? இப்படி சொல்லி சொல்லியே தமிழர் தலையில் மிளகாய் அரைத்தார் ராமசாமி!

      Delete
    2. ஏதோ பெரியார் இந்த அறிக்கையை சொன்ன காலகட்டத்தில் வாழ்ந்தா மாதிரியே பேசுறீங்க??? அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பார்ப்பானும் தமிழன் என்று தானே சொல்லிக்கொண்டான்??? இல்லை பார்ப்பான் தன்னை தமிழன் என்று சொன்னதில்லை என்பதற்க்கான ஆதாரத்தையாவது கொடுங்களேன் நீங்க சொல்லும் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன்.

      Delete
  9. //தாய்மொழி தமிழாக உள்ளவனுக்கு வேறு ரத்த கலப்பு இல்லாதவரை அவனது தாய் நாடும் தமிழ் நாடாகத்தான் இருக்க முடியும்? ஆகவே, தமிழர் தமிழ் நாட்டைத் தாய்நாடாக ஆக்கி கொண்டு ஒரு நேஷனாக, ஓர் இனமான இன ஒற்றுமைதடன் அயலான் சம்பந்தத்தை அரசியல், சமூக இயல், மத இயல், பொருளாதார இயல், இவ்வளவிலும் விலக்கி தனித்து இருந்து வாழ வேண்டுமானால் தனித்தமிழ்நாடு வேண்டும்.”//

    ராமசாமி இப்படி சொன்னதெல்லாம் momentary feelings தான். இதற்காக அவர் எதையாவது செய்தாரா? தமிழைப் பழித்ததை என்னென்று எடுத்துக்கொள்வது?

    தனித் தமிழ்நாடு என்பது விடுதலை பெற்ற தனித்தமிழ் நாடு அல்ல, தனி மாகாணத்தமிழ்நாடுதான். விடுதலை பெற்ற தனித்தமிழ்நாட்டுக்காக அவர் ஒரு துரும்பையாவது அசைத்தாரா?

    ReplyDelete
  10. திராவிடத்தில் அக்கறை உள்ளவர்கள் உண்மையான பிரச்சினையை அப்பட்டமாகப் பேசவேணடும். ஆந்திரா கர்நாடகா கேரளா என்று அந்தந்த மொழிக்குரிய எல்லைகளை ஒதுக்கி தனியே பிரித்து போகச்சொன்ன பிறகு, அப்படி அங்கங்கே போய்ச் சேர்ந்துகொள்ளாமல் தமிழ்நாட்டைவிட்டுப் போகாமல், தமிழ்நாட்டிலேயே ஆனிஅடித்து கூடாரம் போட்டுக்கொண்டு திராவிடம் பேசுவது எதற்காக ? மிச்சம் இருக்கும் தமிழ்நாட்டையும் கேராளாவுக்குக் கொஞ்சம் கர்நாடகாவுக்குக் கொஞ்சம் ஆந்திராவுக்குக் கொஞ்சம் என்று பங்குபோட்டுக் கொள்வதற்காகவா? திராவிடத்தின்மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் திராவிட உணர்வே இல்லாமல் இருக்கிற ஆரியத்தைப் போற்றிக்கொண்டிருக்கிற மலையாளி கன்னடர் தெலுங்கர்களிடத்தில்தானே திராவிடம்பற்றி உரக்கப்பேச வேண்டும். தமிழருக்கு திராவிடம்பற்றி நன்றாகவே தெரியும். தமிழருக்கு திராவிடம் போதும்போதும் என்றாகிவிட்டது. எனவே தமிழ்நாட்டில் உள்ள திராவிடத் தலைமைகள் கூடாரங்களை கேரளா கர்நாடாகா ஆந்திராவுக்கு மாற்றிக்கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். அங்கேபோய் அவர்களை எல்லாம் திராவிடர்களாக மாற்றியபிறகுதான் தமிழ்நாட்டுக்குள் வந்து திராவிட அரசியலை பேசவேண்டும். அது முடியாவிட்டால் இனி திராவிடத்தை தலைமுழுகிவிட்டு தமிழராக வாழுங்கள். உங்களுடைய சாதிப் பெருமையையும் உங்களுடைய தெலுங்கு கன்னட மலையாள உணர்ச்சிகளைத் தலைமுழுகிவிட்டு இனி நீங்கள் தமிழர் மட்டும்தான் என்று உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    இங்கே தமிழ் மக்களிடமிருந்து அபகரித்த கொள்ளையடித்த சுரண்டிச்சேர்த்த பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் பல லட்சம்கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் தமிழ்முருக அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு உங்கள் குடும்பத்திற்கான இயல்பான தேவைகளுக்கேற்ற சொத்துக்களை மட்டும் பெற்றுக்கொண்டு உங்களுடைய தமிழ்ப்பற்றை உறுதிசெய்யுங்கள்.

    முதலாம் செவ்வேலர்
    தூய தமிழ்நெறித் தொண்டர்
    திருமுருகாற்றுப்படை
    தமிழ்முருக அரசாங்கம்.

    ReplyDelete
  11. திராவிடத்தில் அக்கறை உள்ளவர்கள் உண்மையான பிரச்சினையை அப்பட்டமாகப் பேசவேணடும். ஆந்திரா கர்நாடகா கேரளா என்று அந்தந்த மொழிக்குரிய எல்லைகளை ஒதுக்கி தனியே பிரித்து போகச்சொன்ன பிறகு, அப்படி அங்கங்கே போய்ச் சேர்ந்துகொள்ளாமல் தமிழ்நாட்டைவிட்டுப் போகாமல், தமிழ்நாட்டிலேயே ஆனிஅடித்து கூடாரம் போட்டுக்கொண்டு திராவிடம் பேசுவது எதற்காக ? மிச்சம் இருக்கும் தமிழ்நாட்டையும் கேராளாவுக்குக் கொஞ்சம் கர்நாடகாவுக்குக் கொஞ்சம் ஆந்திராவுக்குக் கொஞ்சம் என்று பங்குபோட்டுக் கொள்வதற்காகவா? திராவிடத்தின்மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் திராவிட உணர்வே இல்லாமல் இருக்கிற ஆரியத்தைப் போற்றிக்கொண்டிருக்கிற மலையாளி கன்னடர் தெலுங்கர்களிடத்தில்தானே திராவிடம்பற்றி உரக்கப்பேச வேண்டும். தமிழருக்கு திராவிடம்பற்றி நன்றாகவே தெரியும். தமிழருக்கு திராவிடம் போதும்போதும் என்றாகிவிட்டது. எனவே தமிழ்நாட்டில் உள்ள திராவிடத் தலைமைகள் கூடாரங்களை கேரளா கர்நாடாகா ஆந்திராவுக்கு மாற்றிக்கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். அங்கேபோய் அவர்களை எல்லாம் திராவிடர்களாக மாற்றியபிறகுதான் தமிழ்நாட்டுக்குள் வந்து திராவிட அரசியலை பேசவேண்டும். அது முடியாவிட்டால் இனி திராவிடத்தை தலைமுழுகிவிட்டு தமிழராக வாழுங்கள். உங்களுடைய சாதிப் பெருமையையும் உங்களுடைய தெலுங்கு கன்னட மலையாள உணர்ச்சிகளைத் தலைமுழுகிவிட்டு இனி நீங்கள் தமிழர் மட்டும்தான் என்று உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    இங்கே தமிழ் மக்களிடமிருந்து அபகரித்த கொள்ளையடித்த சுரண்டிச்சேர்த்த பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் பல லட்சம்கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் தமிழ்முருக அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு உங்கள் குடும்பத்திற்கான இயல்பான தேவைகளுக்கேற்ற சொத்துக்களை மட்டும் பெற்றுக்கொண்டு உங்களுடைய தமிழ்ப்பற்றை உறுதிசெய்யுங்கள்.

    முதலாம் செவ்வேலர்
    தூய தமிழ்நெறித் தொண்டர்
    திருமுருகாற்றுப்படை
    தமிழ்முருக அரசாங்கம்.

    ReplyDelete

  12. திராவிடர்கள் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தை முழுமையாக உணர்ந்து கொண்ட தமிழர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.இது அவர்களது பிறப்புரிமை.இதை உணர்ந்து 1956-க்குப் பின் வந்த திராவிடர்கள் (தெலுங்கர்கள்,மலையாளிகள்,கன்னடர்கள்) இனிமேலாவது தமிழர்கள் எப்படி ஆந்திரா,கேரளா,கர்நாடகாவில் இருக்கிறார்களோ,அவ்வாறு இருந்து சகல வசதிகளையும் அனுபவிப்பதே நல்லது.இதுதான் தமிழர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும்.இப்படி இல்லாமல் 14 வேட்பாளர்களுக்கு 12 வேட்பாளர்களாக தெலுங்கர்களைப் நிறுத்தி கோபம்மூட்டும் செயலைச் செய்யும் விஜயகாந்த் போல நடந்து கொண்டால் விளைவுகள் விபரீதமாக உருவம் எடுக்கும். திராவிடர்கள் தமிழர்களித்தில் நேரடியாக மோதுவதில்லை,ஆனால் மொழியை அழித்துவிடுவதுமூலம் இனத்தை அழிக்க சதிசெய்து விட்டார்களே.என்ன செய்ய?தெலுங்கு ஆந்திராவில் பயிற்று மொழியாக இருக்க இங்கே ஆளும் தெலுங்கர்கள் ஆங்திலத்தை முதன்மைப் படுத்தி தமிழை அழிப்பதுமட்டுமல்லாது ஆந்திராவில் ஆங்கிலம் படித்த தமிழ்அறியாத தெலுங்கர்களுக்கு தமிழ்நாட்டில் பதவி கொடுக்கிறார்களே,இது எவ்வளவு பெரிய கொடுமை? இதை தமிழர்கள் உணர்ந்துகொள்ளக் கூடாது என்பதற்காக மதுவை கொடுத்து சிந்திக்க விடாமல் தடுப்பதோடு இனஅழிப்புக்கு ஆவன செய்துகொண்டிருக்கிறார்களே.ஐயோ! அதனால்------பொன்பரப்பியான்


    ReplyDelete
  13. கீழே உள்ள தரவுகளை பார்க்கவும் .
    பெரியார் ஆந்திரா குல்டி . தமிழை அழிக்க வந்த அவதாரம்.
    Dravidian Illusions and Tamil Identity Part-1 to part 8. Reference tamilan TV.
    இத பார்த்த பிறகும் எவனும் பெரியார் பத்தி பேச மாட்டான்.
    https://www.youtube.com/watch?v=5yhlMx65m1Y
    https://www.youtube.com/watch?v=R4AQ3m3yWvo
    https://www.youtube.com/watch?v=hlS3eTMGqRk
    https://www.youtube.com/watch?v=qfhC_i5jf8E
    https://www.youtube.com/watch?v=iVGkLfCdaMI
    https://www.youtube.com/watch?v=rp0zhLcELSk
    https://www.youtube.com/watch?v=mD5eSwRe4p8
    https://www.youtube.com/watch?v=FnwKIqqh5l8
    evr in nokkam enna ?

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி