Showing posts with label நாடார். Show all posts
Showing posts with label நாடார். Show all posts

07 May 2014

சாதி மோதல்களுக்கு அடிப்படை காரணம் திராவிடமே....!!!

பொதுவாக தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்  , பிரச்னையை வரலாற்று ஆய்வு ரீதியான கண்ணோட்டத்தை விட, தர்க்க ரீதியான பார்வையிலேயே அணுகுகிறது. இந்த அடிப்படையில் தமிழகத்தில் ஆதிக்க சாதி, தாழ்த்தபப்ட்ட சாதி போன்ற விசயங்களில் யார் திட்டமிட்டு ஈடுபட்டு உள்ளார்கள் என்பதையும் நடுவம் தர்க்க ரீதியில் அணுகுகிறது. அதற்க்கு முன்பு சில விசயங்களை தெளிவு படுத்த விரும்புகிறது.

* தமிழகத்தில் பறையரை விட, அருந்ததியினரை விட, மோசமான தீண்டாமை கொடுமைக்கு ஆளாகி இருந்த சமூகம் 'நாடார்' சமூகம். இந்த நாடார் சமூகம் இன்று BC (அதாவது பிராமணிய பார்வையில் சாதி இந்து என்றும், திராவிட பார்வையில் ஆதிக்க சாதி) என்றும் கூறுகின்றனர்.
Ref: http://kumarikantam.blogspot.in/2011/01/blog-post_17.html

இனி விசயத்துக்கு போவோம்.
தமிழகத்தில் BC / ஆதிக்க சாதி அரசியல் அடிப்படை
1. பிராமணியம் ஒருவனை சூத்திரன் என்று வரையறுத்தால் அதை எந்த காலத்திலும் தலைகீழாக இருந்தாலும் மற்ற முடியாது. அப்படி என்றால் நாடார் சமூகம் மேற்ப்படி சூத்திர நிலையில் இருந்து, சாதி இந்துவாக மாற அனுமதித்தது பிராமணிமா, திராவிட அரசியலா....?
பதில்: திராவிட அரசியல்.

2. நாங்கள் SC பட்டியலில் இருக்க விரும்பவில்லை. எனவே BC பட்டியலுக்கு செல்ல விரும்புகிறோம் என்று நாடார் சமூகம் முன்வைத்த கோரிக்கையை நீதி கட்சி ஆமோதித்து ஆதரவு தெரிவித்தது. நீ தாழ்த்தப்பட்டவன், நீ 2000 வருட அடிமை என்று எந்த நீதி கட்சி தலைவரும், பெரியாரும் மேற்ப்படி நாடார் சமூக மக்களை எதிர்க்கவில்லை. ஆமோதித்தனர். எனவே, ஒருவர் SC அல்லது தாழ்த்தப்பட்ட சாதி/வகுப்பில் இருக்க dynamic ஆக மற்றம் செய்யும் அதிகாரம் படைத்தது பிராமணிமா ? திராவிடமா...?
பதில்: திராவிடம்

3. SC / ST பட்டியலை பொருத்தவரை மாநில அரசு தலையிட முடியாது. மாற்றம் செய்யவும் முடியாது. மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க முடியும். ஆனால், BC பட்டியலில் மாற்றம் செய்யா மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. உண்மையில் தமிழகத்தில் பிறபடுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் சாதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மக்கள். இருப்பினும், அவர்களை அந்த பட்டியலிலே இங்கு வைத்து இருப்பது பிராமணிமா ? திராவிடமா ?
பதில்: திராவிடம்

ஆக சாதி இந்துக்களை உருவாக்குவதும், நீக்குவதும் உள்ளாக அதிகாரம் படைத்தது இங்கே திராவிடமா ? பிராமணிமா ? பதில்: திராவிடம். சாதி சண்டை போட ஒரு தரப்பு இப்போ ரெடி.


தமிழகத்தில் SC / தாழ்த்தப்பட்டவர்கள் அரசியல் அடிப்படை
1. பெரியார் நடத்தியதாக சொல்லப்படும் தோல் சீலை போராட்டம், வைக்கம் போராட்டம் எல்லாம் நாடார் தலைமையிலான,அவர்களை காக்கும் போர்த்து நடத்திய போராட்டங்களாக இருக்க, பெரியார் தாழ்த்தப்பட்டவர்கள் என்று இன்று சொல்லப்படும் மக்களுக்கே அதை எல்லாம் செய்தார் என்று திசை திருப்புவது ஏன்?

2. நாடாருக்கு தான் பெரியார் தீண்டாமையை எதிர்த்து போராடினார் என்றால், இன்று வரை நாடாரை 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்று கூறியதே இல்லையே ஏன்?

3. 2000 வருட அடிமைகள் என்று பள்ளர் பறையரை திராவிடம் கூறுகிறது. பறையர்களை தெய்வமாக வணங்கும் கோவில்கள் உண்டு. பள்ளருக்கு இன்றுவரை கோவிலும்,கோவில் நிலங்களும், கோவில் உரிமைகளும் மேற்ப்படி 2000 வருட அடிமைகளாக அவர்கள் இருந்து இருந்தால், அவர்களை பிராமணியம் விட்டு வைத்து இருக்குமா...? ஆனால், அவற்றை எல்லாம் மறைத்து, இவர்களை 'தீண்டத்தகாதவர்கள், அதனால் தாழ்த்தப்பட்டவர்கள்' என்று திட்டமிட்டு பொய் பரப்புரை செய்வது பிராமணிமா திராவிடமா?
பதில்: திராவிடம்.

4. மேற்ப்படி கோவில் உரிமைகளை காக்கிறேன் பேர்வழி என்று பள்ளர் உரிமை பெற்று வந்த பல கோவில்களை அவர்களிடம் இருந்து பறித்து, 'இந்து சமய அறநிலையத்துறை' என்கிற பெயர்களில் எல்லாம், அதை பிராமணனுக்கு தாரை வார்ப்பது பிராமணிமா ? திராவிடமா?
பதில்: திராவிடம்

5. மேற்ப்படி பள்ளர்கள் 2000 வருட அடிமை என்று அவன் நம்பி இருந்த போது அதை ஆதரித்த திராவிடம், இன்று அப்படி இல்லை என்று அவர்கள் வெகுண்டு எழும் போது, வரிந்து கட்டி கொண்டு எதிர்ப்பது ஏன்? SC பட்டியலில் சேர்க்க வேண்டாம் என்று நாடார் சொன்ன போது அதை ஏற்ற திராவிடம், அதே மாதிரி SC பட்டியலில் நாங்கள் இருக்க விரும்பவில்லை என்று பள்ளர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அதை கண்டு கொள்ளாமலும், இன்னும் சொல்லப்போனால் அதை எதிர்ப்பதும் ஏன்? ஆக பள்ளர்கள்,பறையர்கள் என்றைக்குமே தாழ்த்தப்பட்டவர்களா சித்தரிப்பது பிராமணிமா, திராவிடமா...?
பதில்: திராவிடம்

சாதி சண்டை போட 'தாழ்த்தப்பட்ட படை' தயார் இப்போது....!!! மோதுங்கள்.....!!! ---- இது தான் இன்றுவரை தமிழகத்தில் நடக்கும் சாதிய மோதல்களின் பின்னணி. இன்னும் முடியவில்லை. மேற்கொண்டு வாசிக்கவும்.

1. சாதி சண்டைகள் ஏன் எப்போதும் தமிழ் சாதிகளுக்கு உள்ளே நடக்கிறது? அருந்ததியினர் மீது மிக கொடூரமாக இன்றும் தீண்டாமை கடைபிடிப்பது நாயுடு,ரெட்டி போன்ற மக்களே.....இவர்களை பற்றியோ, நாயுடு ஆதிக்க சாதி வெறி என்றோ திராவிடம், தமிழ் சாதி பிரச்சனைகளை பேசும் அளவுக்கு பேசாமல் மறைப்பது ஏன்?

2. அப்படி மறைக்க நினைக்கும் உங்கள் நோக்கம் என்ன? தமிழர்கள் சாதி வெறி பிடித்தவர்கள், தெலுங்கர்கள் அப்படி அல்ல என்று மக்கள் மனதில் பதிய வைப்பது தானே...?

3. இது நாள் வரை மேற்ப்படி திராவிடம் சாதி பாகுபாடு பார்க்காமல், அனைத்து சாதி வெறி உணர்வையும் கடித்து வந்துள்ளது, பள்ளர் பறையர் என எல்லாருக்கும் போராடியது என்று கூறி வந்ததன் நோக்கம் போலித்தனம் இல்லையா?

4. தமிழக வரலாற்றில் அதிகபட்ச தீண்டாமையை அனுபவித்த நாடார் சமூகம், BC பட்டியலில் இருப்பதாலும், கடின உழைப்பாலும், அரசியலாலும் முன்னு வந்த சூத்திரத்தை, மேற்ப்படி பள்ளர் பறையருக்கும் கூறி இருக்கலாமே திராவிடம்? அதை செய்யாமல், யாரை ஏமாற்ற இன்று வரை அவர்களை பட்டியல் சாதி லிஸ்ட்இல் வைத்து, அவர்களுக்கு நல்லது செய்கிறேன் பேர்வழி என்று ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள்? ஆக உங்கள் நோக்கம் சாதி சண்டை போட 'தாழ்த்தப்பட்ட பிரிவில்' உங்களுக்கு ஆள் தேவை என்பதை தாண்டி வேறென்ன இருக்க முடியும்?

5. நாடார் சமூகம் இன்று BC பட்டியலில் இருப்பதால், தங்களின் மீதான தீண்டாமை கறையை கிட்டத்தட்ட அறவே இல்லாமல் பார்த்து கொண்டுள்ளனர். ஆனால் 'உன்னை நீ முதலில் நீ தாழ்த்தப்பட்டவனாக உணர். அது தான் உன் விடுதலைக்கு உதவும்' என்று பள்ளர் பறையருக்கு திரும்ப திரும்ப போதிக்கும் திராவிடம், என்ன தான் செல்வமும், படிப்பும் படித்து இருந்தாலும் பறையர் சாதி ஆண் எல்லா காலத்திலும் தாழ்த்தப்பட்டவன் என்கிற நிலையை தக்க வைப்பது யார்? பிராமணிமா திராவிடமா? பதில்: திராவிடம்

6. BC பட்டியலில் இருக்கும் சாதிகள் திருமணம் செய்யும் போது வராத சிக்கல், SC பட்டியலில் இருக்கும் சாதிகளுண்டன் BC பட்டியலில் உள்ள சாதி செய்யும் போது வருவது ஏன் ? இதற்க்கு காரணம், இவன் சூத்திரன், இவன் வைசியன், இவன் சத்திரியன் என்று பிரித்து பார்க்கும் பிராமணிமா? இல்லை, இன்னார் BC யாக இருக்க வேண்டும், இன்னார் SC யாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யும் ஆளும் திராவிடம் செய்யும் பிரித்தாளும் அரசியலா....?

பதில்களை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்.

###
குறிப்பு: பெரியார் தொண்டர்கள் இது நாள் வரை பெரியார் சாதி எதிர்ப்பு பற்றியோ, ஆதிக்க சாதி எதிர்த்து குரல் கொடுத்ததை பற்றியோ, ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடினார் என்பது பற்றியோ பல பதிவுகளை கட்டுரைகளை எழுதி இருப்பார்கள். அதை எல்லாம் தேடி பிடித்து இங்கே கமெண்ட்டாக போடவும். மேற்ப்படி நடுவத்தின் பதிவை வாசித்து முடித்தவுடன், அதை நீங்கள் வாசிக்க தொடங்கினால், வேறொரு கோணத்தில் உங்களுக்கு பெரியாரும்,திராவிடமும் தெரிவார்கள்.

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

05 July 2013

பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர் அல்ல

கேள்வி: பெரியார் தாழ்த்தப்பட்டோருக்காக எவ்வளவு உழைத்திருக்கிறார். தீண்டாமை எதிர்ப்பு போராட்டம், ஆலைய நுழைவு போராட்டம், இரட்டை குவளை எதிர்ப்பு போராட்டம் என அவர் நடத்திய போராட்டங்கள் கணக்கில் அடங்காது. எனவே தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர் பெரியார் தானே?

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:

இங்கே பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர் அல்ல என்றும், அவர் பிற்படுத்த பட்டோருக்கான தலைவர் மட்டுமே என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. நாம் இரண்டு கண்ணோட்டங்களையும் அலசுவோம். அதற்க்கு முன்பு அவர் நடத்திய பொதுவான போராட்டங்களான 'குல கல்வி திட்டம் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு போராட்டம்' போன்றவற்றை ஒரு பார்வை பார்த்து விடுவோம்.

'இந்தி எதிர்ப்பு போராட்டம்':
பெரியாரின் இந்த போராட்டத்தின் நோக்கம் இந்தியால் தமிழ் கெட்டு விடும் , அதை காப்பற்ற வேண்டும் என்ற நோக்கம் இல்லை. பிராமணர்கள் பெரும்பான்மையானோர் இந்தி கற்று வைத்திருந்தனர், எனவே அவர் இந்தியை எதிர்த்து, ஆங்கிலத்தை வலியுறுத்தினார். இந்த போராட்டத்தால் தமிழுக்கோ,தமிழருக்கோ எந்த பலனும் இல்லை.

'குல கல்வி திட்டம் எதிர்ப்பு'
இதன் மூலம் பிராமணர்கள் உட்பட அனைவரும் தங்களது குல தொழிலை செய்ய வேண்டும் என்ற ராசாசி அவர்களின் கருத்தை எதிர்த்து நடத்தப்பட்ட பொதுவான போராட்டம். இதன் மூலம் தாழ்த்தப்பட்டோர் மட்டும் பலன் அடைந்தனர் என்பது முட்டாள் தனமான வாதம்.

தாழ்த்தப்பட்டோருக்காக பெரியார் போராடினாரா?

தாழ்த்தப்பட்டோர் என்று சொல்லப்படுபவர்களை பற்றி பெரியாரின் கண்ணோட்டம் பற்றி ஒரு சிறிய உதாரணத்தை பார்ப்போம்.

"துணி விலை உயர்ந்ததுக்கு காரணம் பறைச்சி எல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சதால தான்"
"வேலை இல்லா திண்டாட்டத்துக்கு காரணம் பள்ளன் எல்லாம் படிக்க ஆரம்பிச்சதால தான்"
"அரிசி விலை உயர்ந்ததுக்கு காரணம் கள்ளு குடிக்கிறவன் எல்லாம் சோறு திங்கிரதால தான்"


இந்த செய்தியை தி.மு.க .நடத்தும் முரசொலி பொங்கல் மலர் 1962 ல் வெளியிட்டு உள்ளது .இதே செய்தியை 2-3-1962 பெரியார் அச்சகம் வெளியிடும் நாத்திகம் செய்தி தாளிலும் வெளியிடப்பட்டு உள்ளது

தாழ்த்தப்பட்டோர் பற்றி இப்படி மிக உன்னதமான கருத்துகளை வைத்திருந்த பெரியார் அவர்களுக்காக எந்த ஒரு போராட்டத்தையும் எங்கும் எப்போதும் நடத்தியதே இல்லை. இது அதிர்ச்சி அளிக்க கூடிய மிகவும் கசப்பான உண்மை. இதில் இருந்து பெரியார் 'தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர்' என்று கூறி வந்தது சரி தானா என்று தீர்மானிப்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

பெரியார் 'பிற்படுத்தபட்டோருக்காக போராடினாரா'?

பெரியார் தாழ்த்தப்பட்டோருக்காக ஒரு சிறு துரும்பையும் தூக்கி போட்டது இல்லை. அப்படி என்றால் தீண்டாமை எதிர்த்து போராட்டம், ஆலைய நுழைவு போராட்டம் எல்லாம் பெரியார் நடத்தினாரே. அதெல்லாம் யாருக்காக நடத்தினார்? இந்த கேள்விக்கு விடை தேடும் முன்பு, நாயக்கர்களால் (பெரியாரின் மூதாதையர்கள்) இந்த தமிழ் மண்ணில் புரையோடிய 'தீண்டாமை' கொடுமை பற்றியும், அதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட பலருள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் இங்கே பார்ப்போம்.

தோள் சீலை போராட்டம்

அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆதிக்க சாதியினரால் 'பார்த்தாலே தீட்டு' என்று விலக்கி வைக்கப்பட்டு இருந்த அன்றைய சானார் இன்றைய நாடார் சமூக மக்களுக்காக மட்டுமே 'பெரியார்' ஆலைய நுழைவு, வைக்கம் போராட்டம், தீண்டாமை எதிர்ப்பு போராட்டம் அனைத்தும் நடத்தி உள்ளார். தோள் சீலை போராட்டம் என்பது அத்தக்காகிய போராட்டங்களில் ஒன்று. நாடார் சமூகம் உள்ளிட்ட 18 சாதிகளை சேர்ந்த பெண்கள் யாரும் 'தோள் சீலை' (Upper Cloth ) அணியக்கூடாது என்றும், அப்படி அணிந்தால் அப்பெண்டிரின் மார்பகங்களை அறுத்து எறிய வேண்டும் என்பது தான் ஆதிக்க சாதிகள் விதித்த கட்டுப்பாடு.அப்படி விதிமுறையையும் மீறி ரவிக்கை அணிந்து சென்ற நாடார் சமூக பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் தான் 'தாலி அறுத்தான் சந்தை சம்பவம்'. 

"பெண்களின் மேலாடைகளை கிழிப்பதற்காக உயர் சாதியினர், ஒரு சிறிய அரிவாளை, நீண்ட கழியின் முனையில் கட்டிப் பயன்படுத்தினார்கள். அதை தொரட்டி என்று திருநெல்வேலிதஞ்சை மாவட்டங்களிலும் தோட்டை என்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் குறிப்பிடுகிறார்கள். தாழ்த்தப்பட்ட பெண்களின் அருகே சென்றால் தீட்டு என்ற காரணத்தால் இக்கருவியை பயன்படுத்தினார்கள்.ஒரு முறை சந்தைக்குக் குப்பாயம் அணிந்து வந்த ஒரு பெண்ணின் மேலாடையைக் கிழிக்கப் பயன்படுத்தப்பட்ட தொரட்டி அவரது தாலிக் கயிற்றையும் அறுத்துக் கொண்டு வந்து விட்டது. அன்றிலிருந்து அந்த சந்தைக்குத் தாலி அறுத்தான் சந்தை என்ற பெயர் ஏற்பட்டது. இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கும்இச்சந்தை தாலி அறுத்தான் சந்தை என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது"

Source: தோள் சீலை போராட்டம்

மேலதிக தகவல்:
"The victory of the Channar Lahala or the Upper Cloth Mutiny (Maaru Marakkal Samaram), after half-a-century of violent struggle, is widely seen as the transformative event that triggered a wave of renaissance movements that shaped modern Kerala.
"'Cries for equality began to rise not just from various parts of Kerala, but from the whole of South India after the Channar Mutiny. The agitation to end ‘oozhiyam vela’ or work without pay, the agitation to secure entry into temples, the agitation to secure the right to walk on public roads, all these struggles that went on to change the face of Kerala were inspired by the success of the Upper Cloth Mutiny,' writes historian Joy Balan Vlaathangara in his book ‘Vaikuntaswamiyum Samoohika Navothanavum’. [...]
"It was western influence and the work of Christian missionaries like Charles Meed and Malt during the early part of the 19th century that revealed to the Nadars the indignity of their existence.
"There are historical accounts of labourers who had migrated to Sri Lanka to work in colonial tea plantations returning with enough money to lead European lifestyles. Converted Nadars, too, started wearing upper clothes and saw it as a sign of social progress.
"The upper castes, including the royalty, did not take kindly to these progressive thoughts. An account says that a lower caste lady who went to the palace of the Attingal Rani wearing an upper cloth had her breasts chopped off by royal decree.Out on the streets, the upper castes unleashed violence on Christian Nadar women who had their breasts covered."
Source: http://www.anti-caste.org/2009/07/150-years-ago-today-women-of-the-nadar-caste-in-kerala-won-right-to-cover-their-breasts.html

மேலாடை அணியலாம் என்று அரசு அறிவித்த தீர்ப்பு


நாடார் மக்களின் ஆலைய நுழைவு போராட்டம் பற்றி,
இரண்டாவது மூன்றாவது  கட்டுரைகளான  'தெற்கில் முதல் வெளிச்சம் '  மற்றும்'தென் திருவிதாங்கூர் தோள் சீலைப் போராட்டம் பற்றித் தோழர் சங்கையா விரிவாகவே பேசினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அன்று இருந்த சாதிக்கட்டுமான இறுக்கம்சாதி வேறுபாடுகள் 16 அடி, 36 அடி, 66 அடி எனக் கடைப்பிடிக்கப்பட்ட கொடுமைஒடுக்கப்பட்ட மக்களுக்கு விதிக்கப்பட்ட பல்வேறு வரிகள்மார்புக்கு மேலே சேலை கட்டக்கூடாது எனும் வழக்கம்அதனை எதிர்த்து நடந்த போராட்டம் போன்றவற்றையும் நாடார்கள் என்னும் சாதியினரின் அன்றைய சமூக நிலமைஅவர்கள் சந்தித்த சாதிய ரீதியான ஒடுக்குமுறைகள் பொண்றவற்றை புத்தகத்தின் பகுதிகளை வாசித்துக்காட்டி ,தோழர் சங்கையா எடுத்துக்காட்டியபோது இப்படியெல்லாம் ஒரு 150 ,160 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததா ?எனத் தோழர்கள் கேள்வி எழுப்பிஅறிந்து கொள்ள உதவியது.

                            வைகுண்டசாமி அவர்களைப் பற்றிய கட்டுரையினைத் தொகுத்தளித்த தோழர் சங்கையா வைகுணடரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தார். கோயில் நுழைவுப்போராட்டங்கள் என்னும் தலைப்பிலான கட்டுரையில் கோயில் நுழைவுப்போராட்டங்கள் எப்போது ஆரம்பமானது, 1854-ல் வெள்ளையன் நாடார் தலைமையில் நடந்த குமாரகோயில் நுழைவுப்போராட்டம்கலகத்தினால் 150 பேர் பலியானது, 1870-ல் மூக்கன் நாடார் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நிகழந்த ஆலயப்பிரவேசம் ,நாடார்கள் கோவிலுக்குள் சென்று வழிபடுவதற்காக நடத்திய போராட்டங்கள்,அருப்புக்கோட்டை(1860), திருச்செந்தூர் (1872), மதுரை (1874 &1890), திருத்தங்கல் (1876-78), ...சிவகாசியில் (1899)  போன்றவற்றை பொன்னீலன் சுட்டிக்காட்டுவதைக் குறிப்பிட்டார். 1885-ல் நடந்த கமுதி கலவரம்வெள்ளைச்சாமித்தேவர் என்பவர் நாடார்களை ஒதுக்கிவைத்தமை,நாடார்களின் கட்டை விரல்களைச் சேர்த்துக்கட்டி ஒன்றரை ஆண்டுகள் ஒதுக்கிவைத்த கொடுமை ,பின்பு வெள்ளைச்சாமித்தேவர் என்பவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே பிரச்சனை முடிவுக்கு வந்தது  போன்ற செய்திகளை நூலில் இருந்து தோழர் சங்கையா வாசித்தே காட்டினார். 
Source: http://vasipporkalam.blogspot.in/2013/02/blog-post_13.html

இப்படி கணக்கு வழக்கு இன்றி தீண்டாமை அனுபவித்த 'நாடார்' சமூகத்துக்காக பெரியார் உழைத்ததை தான் இன்று அவர் ஏதோ 'தாழ்த்தப்பட்டோருக்காக' போராடினார் என்று சப்பை கட்டு கட்டுகின்றனர். முத்துராமலிங்க தேவர்,ராஜாஜி உட்பட பலரும் பறையர்,நாடார் போன்றோருக்கு 'மதுரை மீனாட்சி அம்மன்' கோவிலுக்குள் நுழைய 'ஆலைய நுழைவு போராட்டம்' நடத்தியுள்ளனர். ஆனால், பெரியார் நாடாரை விடுத்து இன்று தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படும் யாருக்காகவும், எங்கேயும், எந்த காலத்திலும் ஒரு சிறு துரும்பையும் தூக்கி போட்டது இல்லை.

அப்படி என்றால், ஏன் பெரியார் 'நாடார்' சமூக மக்களுக்கு மட்டும் போராட வேண்டும்? காரணம், இன்று நம்முள் எழுந்துள்ள தமிழ் தேசிய சிக்கலின் ஆணி வேறான 'தெலுங்கர்களின் ஆதிக்கம்' என்பதை சுமார் 150 வருடங்களுக்கு முன்பே அறிந்து கொண்டு, தங்களுக்கான ராஜ தந்திர காய் நகர்த்தல்களை செம்மையாக செய்து, நாலு கால் பாய்ச்சலில் முன்னேறியவர்கள் நம் நாடார் இன மக்கள். அவர்களின் எழுச்சியை மட்டுபடுத்தவும், நாடாரும் - பெரியாரும் பரஸ்பரம் தம்முள் வந்த அரசியல் திரை மறைவு ஒப்பந்தம் தான் பெரியாரை நாடாரை நோக்கி நகர்த்தியது, செயல் படுத்தியது.

பெரியார்-காமராஜர் இணைந்த அரசியல்
* சாணார்களின் ஒற்றுமை தான் அவர்களின் இன்றைய சமூக முன்னேற்றத்துக்கு அடிப்படை காரணம். அவர்கள் எந்த கூட்டத்துக்கு சென்றாலும் கையில் பணம் கொண்டு சென்று கொடுப்பதும், ஒன்றாக செயல்படுவதையும், தனது சமூக மக்கள் அவ்வாறு இல்லை என்றும் அடிக்கடி திரு.முத்துராமலிங்க தேவர் அவர்களே சிலாகித்து பேசி இருப்பார். 'கோவிலில் நுழைய விடவில்லையா? உனக்கென்று கோவிலை கட்டு. வங்கியில் உனக்கு கணக்கு இல்லையா? உனக்கென்று வங்கியை உருவாக்கு' --- இது தான் நாடார்களின் எழுச்சியின் தாரக மந்திரம்.

* 1919 ஆம் ஆண்டில் சாணார்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடோ, சலுகையோ வேண்டாம் என்று அறிவித்து விட்டனர். எனவே அவர்கள் SC பட்டியலிலோ, BC பட்டியலிலோ அப்போது இல்லை.

* 1956 ஆம் ஆண்டு "தங்களுக்கு சலுகை வேண்டாம், ஆனால் BC பட்டியலில் சேர்க்க வேண்டும்" என்று போராடி வெற்றி பெற்றனர். அன்று முதல் இன்று வரை BC பட்டியலில் உள்ளனர். BC பட்டியலுக்குள் வந்துவிட்டால் 'தீண்டாமை' மற்றும் 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்ற இமேஜ் போய் விடும் என்ற ஞானம் பல ஆண்டுகளுக்கு முன்பே (அதுவும் 1919 ஆம் ஆண்டு இல்லாத ஞானம்) நாடார் சமூக மக்களுக்கு வந்ததன் பின்னணியில் பெரியாரும் காமராஜரும் இல்லாமல் இல்லை. இந்த ஒரு உதாரணம் மூலம் எவ்வளவு நுணுக்கமாக தாழ்த்தப்பட்டோர், உயர் சாதி இடையேயான இன்றைய வன்முறைக்கு, திராவிடர்கள் வித்திட்டு வளர்த்து வருகின்றனர் என்பது தெளிவாக புலப்படும். அவர்கள் மனது வைத்தால் தான் ஒருவன் உயர் சாதி, அவர்கள் மனது வைத்து விட்டால் தாழ்ந்த சாதியும் (உதாரணம்: சின்ன மேளம்), உயர் சாதி தான்.

* இங்கே எந்த நாயுடுவுக்கும், பறையருக்கும் சண்டை வராது. வன்னியருக்கும், பறையருக்கும் தான் சண்டை வரும். அதற்க்கு 'ஆதிக்க சாதிக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும்' இடையேயான சண்டை என்று திராவிடர்கள் விளக்கம் தருவார்கள். நாயுடுக்களும், நாயக்கரும் ஆதிக்க சாதி இல்லையா?

அட, பிற்படுத்த பட்டோருக்காவது பெரியார் உருபப்டியாக ஏதாவது செய்துள்ளாரா என்றால் அதுவும் இல்லை. அவரின் நோக்கம் எல்லாம் ஒன்றே ஒன்று தான்.
"தெலுங்கர்களை பாதுக்காக்க ஒரு பாதுக்காப்பான கட்டமைப்பாக பிற்படுத்தோர் அரசியலை கையில் எடுத்து, அவர்களையும் தாழ்த்தப்பட்டோரையும் மோத விட்டு, அதன் மூலம் தனது இருப்பை எப்போது தக்க வைத்து கொள்வது மட்டும் அவர் நோக்கம்". இது தான் 'திராவிடத்தின்' நோக்கமும் கூட."

இந்த உண்மையை தமிழ் சாதிகள் விளங்கி கொள்ளாதவரை, சாதி மோதல்கள் தினம் தோறும் அரங்கேறுவதை தவிர்க்க முடியாது. சிந்தியுங்கள் தமிழர்களே...!!!

-- இவண் --
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்